Tuesday, January 26, 2010

பத்மபூஷன் இசைஞானி இளையராஜா

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான

பத்மபூஷன் விருது இசைஞானி இளையாராஜாவுக்கு

தேர்வு செய்யப்பட்டுள்ளது.



அளவில்லா மகிழ்ச்சியுடன்

இசை தெய்வத்தை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ;)


பத்மபூஷன் விருது

உலக இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்

அவர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைபுயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

Wednesday, October 07, 2009

சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...






இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க தோழி சினேகிதி அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)

இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் இளையராஜா. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் CSR அவர்கள் எழுதிய As we Feel Raaja ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.

நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.

அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல blogspot.com அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.

சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் அமைதிப்புயல் திரு. மா. சிவக்குமார்! அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் திரு. ராகவன் என்கிற ஜிரா அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க கதாசிரியர் தோழி திவ்யா அவர்கள்.

அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.

பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.

அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.



நான் அழைக்கும் சக பயணிகள்


பார்வைகள் "கவிதா அக்கா"

கவிதை மழை பொழியும் "கவிநயா அக்கா"

யாவரும் நலம் விசாரிக்கும் "சுசி அக்கா"

மயில் "அக்கா விஜி"

வலையுலக "அண்ணன் ஆயில்யன்"

எங்க ஏரியா+என்னோட "செல்ல ஜீனியர் - ஆதவன்"

வலையுல "FORWARD MAIL" "அண்ணன் கார்த்திக்கேயன்"

ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)

Monday, June 29, 2009

3 + 32 = அட்டகாசங்கள்....


இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)

கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)

நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல். இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்
கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல

4. பிடித்த மதிய உணவு என்ன?


அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?


கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னோட அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?


நீலம்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?


பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - இளையராஜா

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?


புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்

சகோதரி முத்துலட்சுமி

சகோதரி மை ஃபிரண்ட்

சந்தோஷ் அண்ணே

தல கானா பிரபா

தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி மயில் - அவர் எழுதிய குழந்தைகள் கவிதை தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.

சகோதரி கவிதா - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.

சகோதரன் தென்றல் - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அப்படி வரைமுறை எல்லாம் இல்ல

20. கடைசியாகப் பார்த்த படம்?

புதுபடம் என்றால் பசங்க

பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி

21. பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


படங்கள் வச்சுக்கிறது இல்ல

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது ;
எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல

பிடிக்காதது :
அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?


துபாய்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கு.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுவதை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


தெரியாது

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

பயணம்

இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!

Monday, June 01, 2009

இசைக்குப் பிறந்த நாள்

ஒரு புதிய படத்தின் நாயகன் முதல்முதலில் தன் நாயகியை பார்க்கிறான். பார்த்தவுடனே அவனுக்கு காதல் மலர்கிறது. பின்னணியில் ஒரு வயலின் இசை தொடங்குகிறது, உள்ளத்தைத் துள்ளி எழச்செய்யும் இசை அது. ஓ.. வென கத்திக் கூச்சலிட்டு ஆடவேண்டிய இசை. ஆனால் உள்ளுக்குள்ளேயே, நாயகன் ஆடவில்லை பாடவில்லை அப்படியே நாயகியை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான். ஆனால் அங்கே அவன் உள்ளத்தில் இருக்கும் காதல் ஆடியிருக்கும் பாடியிருக்கும் என்பதை அந்த பின்னனி இசையில் நமக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.

தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்

"திரு. இசைஞானி இளையராஜா அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.











இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.

குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.

மடைதிறந்து பாடும் நாதியலை நான்









இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?

நான் தேடும் செவ்வந்திப்பூ இது...









"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இசைஞானி கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!









இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.












ஸ்பெஷல்

How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த Do anything இப்போது உங்களுக்காக.



தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன்.

Monday, April 06, 2009

மழை...


நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் மழை....ஒரேயடியாக பேய்ந்து தள்ளிவிடுவேன் என்கிறது...ஒரே எரிச்சலும் இம்சையுமாக இருந்தது. நான் வசிக்கும் இடம் அப்படி. தொடர்ந்து 1மணிநேரம் பெய்தால் போதும். மின்சாரம் தானாக போய்விடும். உடனே கம்பெனிக்கு தகவல் அனுப்ப வேண்டும் அவர்கள் வந்து என்ன ஏதுன்னு பார்த்து சரியாக்குறதுக்கள்ள விடிஞ்சிடும். பள்ளிக்காலங்களில் மழை பெய்தால் மனதுக்குள் செம ஜாலியாக இருக்கும். ஆண்டவா மழை நல்லா பெய்யணும். ஸ்கூல் முழுக்க தண்ணி தேங்கி லீவு விடணும். ஆனால் எங்க தெருவுல மட்டும் தண்ணியே தேங்கக்கூடாது என்று எல்லாம் வேண்டியிருக்கிறேன். தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டால் கிரிக்கெட் ஆட முடியாதுல்ல அப்பவே நான் எம்புட்டு நல்லவன் பார்த்திங்களா! (எப்படி நீ நல்லவன்னு கேட்பவர்காக - பின்ன ஒரு தெருமுழுக்க தண்ணீர் தேங்கக்கூடாதுன்னுல வேண்டியிருக்கேன்)

*****************************

போன மாதம் முழுக்க ஆணிகள் அந்த அளவுக்கு இல்லை. எல்லாம் உலக பொருளாதார வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி எங்க கம்பெனியையும் கொஞ்சம் பயன்படுத்திக்கிடாங்க. அதனால 12 மணிநேரம் வேலை 8 மணிநேரமாக குறைந்தது. ஒரு பக்கம் என்னாடா ஆப்பு இப்படி வருதேன்னு நினைத்தாலும் இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மீதி நேரத்தில் பக்கத்தில் உள்ள warehouseல் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிட்டோம். நீண்ட நாளைக்கு பிறகு விளையாடியாதால் ஒரு ஓவருக்கு 13 பால் போடவேண்டியாதிடுச்சி. கொஞ்சம் ஏறி நின்னு அடிச்சதில் காலில் காயம் வேற. ஆனாலும் விடாப்பிடியாக தினமும் பேட்டை தூக்கிக்கொண்டு 3 மணிநேரம் நன்றாக விளையாடி வந்தோம். வழக்கம் போல இப்போது ஆணிகள் குவியத்தொடங்கிவிட்டது. பழையபடி 12 மணிநேர வேலைன்னு சொல்லிட்டாங்க. பழையபடியே திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு.

***********************************

சென்ஷி, நான் மற்றும் ஆதவன், அய்ஸிடமிருந்து சில பல திரைப்படங்களை தூக்கிட்டு வந்தது மிகவும் நல்லதாக போச்சு.

காஞ்சிபுரம்

அற்புதமான படைப்பு. படத்தை இயக்கிய பிரியதர்ஷனை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சொல்லவந்ததை எந்த வித தங்குதடையும் இன்றி யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். இயற்கையான வெளிச்சத்தை மிக அழகாக நம் கண்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். முதலாளி மகளுக்கு பட்டுப்புடவை நெய்வதை பற்றி பிரகாஷ் சொல்லும் காட்சி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள்.

நான் கடவுள்

எப்படா வருமுன்னு தவம் கிடந்த படம். கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க நினைத்த படம். வந்துவிட்டது ஆனால் பல நாடுகளில் வெளியான இந்த படம் இந்த நாட்டுல மட்டும் வெளிவரவில்லை. திரு(பின்ன ஸ்டார் ஆகிட்டாருல்ல). குசும்பன் அண்ணனிடம் கேட்டதற்க்கு வில்லு, படிக்காதவன் போன்ற படங்கள் தான் வரும் இந்த மாதிரி படம் எல்லாம் வராதுன்னு குண்டை போட்டார். சிடியில் பார்க்ககூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். நாம நினைத்தது என்னைக்கு நடந்திருக்கு இப்ப மாத்திரம் ஓடுறதுக்குன்னு ஒரு வழியாக பார்த்தாச்சு. படத்தைப்பத்தி எல்லாரும் பல விதமாக சொல்லிட்டாங்க என்னை பொறுத்தவரையில் சூப்பர் படம். பாலா எந்த காரணத்துக்கும் தன்னோட தனித்திறமையை மாற்றிக்கொள்ளாமல் படங்களை தர வேண்டும்.

The Host (நன்றி : சென்ஷி)

கலைக்கு மொழிகள் கிடையாது (ஆமா..புரியுற மொழியில எடுத்தாலும் உனக்கு புரிஞ்சுட போதாக்கும்) அது உண்மைங்க இது ஒரு ஜப்பான் படம்ன்னு தான் நினைச்சி பார்த்தேன். (ஆனா கொரியன் படமாம்) ஆய்வகத்தில் இருந்து வெளியாகற அமிலம் நகரத்தின் முக்கிய நதியில கலக்குறதால (காட்சில்லா -அணு ஆயுத பரிசோதனைய நினைச்சுக்குங்க) ஒரு புது மிருகம் உருவாகுது. அது அங்கே இருக்கும் மனிதர்களை உயிரோட முழுங்கி ஒரு இடத்தில வச்சி ஃபுல் கட்டு கட்டுது. அந்த மிருகத்துக்கிட்ட ஒரு சின்னப்பொண்ணு மாட்டிக்கிறா. அப்படி மாட்டிய பெண்ணை எப்படி அந்த குடும்பத்தினர் யாரோட பெரிய உதவியும் இல்லாமல் கொண்டு வராங்கன்னு தான் படம். பொதுவா இந்த மாதிரி அனிமேசன்ல எப்படி மக்களை காப்பாத்துறாங்கன்னு யோசிக்குற இயக்குனர்கள் மத்தியில இதுலஒரு குடும்பம் எப்படி சிதையுதுன்னு காட்டியிருப்பாங்க. அந்த பெண்ணோட அப்பாவாக வருபவரின் நடிப்பு டாப்புங்க. அவரோட மகள் இறந்துட்டாள்னு எல்லாரும் சொல்லும்போது, அப்பா இல்ல என்னோட பொண்ணு இறக்கல அவனை அந்த மிருகம் இப்படி வாய் வழியாக வெளியில துப்பியிருக்குமுன்னு செல்போனை வச்சி காட்சிப்படுத்துவாரு பாருங்கள் அட்டகாசம்ய்யா...தன் பொண்ணு தன் பக்கத்தில் இருக்கும் போது அந்த அப்பாவும் குழந்தையாகிடுவான் அவளுக்கு. அன்பை புரிய மொழியே தேவையில்ல அருமையான படம்.

Final Destination 1 2 3

யப்பா சாமிகளா மரணமுன்னு வார்த்தை சொல்றதுக்கே, கேட்குறதுக்கே எம்மாம் பயம் வருது. உனக்கு நேரம் நெருங்கிடுச்சி. மகனே அடுத்து நீ தான் போக போறன்னு தகவல் தெரிஞ்சிட்டா எப்படி இருக்கும். யப்பா படம் முழுக்க மரணம்தான். படம் பார்க்கும்போது எங்க ரூம் நண்பர்களுக்குள்ள எப்படிடா சாவான் இவன் இப்படியா இல்ல அப்படியானு ஒரு பட்டிமன்றமே நடந்துடுச்சி. ஆனா அவன் நாம சொன்னது மாதிரி இல்லாமல் வேற மாதிரி சாவான். அதான் படத்தோட வெற்றி. என்னைக்கேட்டா முதல்பாகம் மூன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சூப்பரு. ஏன்னா படம் பார்க்கிறவன் கூட ஏய் அங்க போகாதே நீ செத்துடுவடான்னு யூகிக்க வச்சி கடைசியில ஒரு டூவிஸ்டு (டுவிஸ்டு இல்ல டூவிஸ்டுதான் ஒவ்வொருத்தவனுக்கும் ரெண்டு சான்ஸ் தர்றாங்க. சாவறதுக்கு) வச்சி கலக்கியிருப்பாங்க. இந்த படத்தை பார்த்ததில் இருந்து ஆபிசுல நடக்கவே பயமாக இருக்குது. செமம படம் பாஸ்.

Bangkok Dangerous

Samuel L. Jackson நடித்த Lakeview Terrace படத்தை பார்க்க ஒரு சிடியை வாங்கினேன். கடைசியில தாவு தீர்ந்துடுச்சி அதே சிடியில் நிக்கோலஸ் கேஜ் நடித்த இந்த படமும் இருந்தது. Bankok Dangerus படத்தின் பெயரை பார்த்ததும் ஒரே அடிதடியாக இருக்கும் போல சரின்னு போட்டு பார்த்தேன். அட்டகாசமாக ஆக்க்ஷன் படம் தான் ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் அட்டகாசம். நாலு பேரை போட்டு தள்ளுவதற்காக ஹாங்காங் வருகிறார் நிகல். அவர் போட வேண்டிய ஆட்களை பற்றி தகவல்கள் வேற ஒரு இடத்தில் இருந்து வரும். அதை கொண்டு வர ஒருவனை வேலைக்கு வைப்பார். அவனே நிக்கோஸ்க்கு சிஷ்யனாக மாறிடுவான். வசனங்கள் நெத்தி பொட்டில் சுட்டது போல சும்மா நச்சுன்னு இருந்தது. படத்தின் துவக்கத்தில் நிகல் சொல்லும் நாலு கொள்கைள் கலக்கல். ஒவ்வொரு காட்சியும் நன்றாக படைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யானை தும்பிக்கை கீழாக பார்த்தபடி இருக்கும். அதை பார்த்து அவனிடம் வேலை செய்பவன்(பின்பு சிஷ்யன்) இது சரியான சிம்பள் இல்லை. இது தப்பு. இப்படி வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரும் என்று சொல்ல, போடா வெண்ண அதெல்லாம் ஒன்னும் வராதுன்னு என்று கதவை அடைத்துவிடுவான் நிகல். அதே யானை படத்தை ஒருநாள் இரவில் தலைகீழாக மாற்றிவைப்பான் அப்போது அவனுக்குள் ஒரு பெண் வந்திருப்பாள்.அதே பெண் விலகியவுடன் அந்த படத்தை தீயிட்டு எரித்துவிடுவான். அவளிடம் இருந்து விடை பெறும் போதும் எந்த வசனங்களும் இல்லாமல் போயிட்டு வரேன் தாயீன்னு ஒரே ஒரு பெரிய கும்பிடு அம்புட்டுத்தான் போய்க்கிட்டே இருப்பாரு ஹீரோ. அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் இருந்து அவளிடம் இருந்து விடை பெறும் வரை அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமான கவிதை.

***********************************

எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய "தேசாந்திரி" தொகுப்பை மீண்டும் புரட்டும் போது புன்னகை புரியவைத்த கவிதை இது

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-----------------------------------நா.விச்வநாதன்

ஒருநாள் திடிரென்னு அக்காவிடம் இருந்து அழைப்பு எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "கோபிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ"ன்னு ஒரு மழலையின் குரல் ஆடிப்போயிட்டேன். "ஏய்"ன்னு என்னோட பதில் அங்க போறதுக்குல்ல மீண்டும் "கோபிஇஇஇஇஇஇஇஇ தப்பிட்டியா", "நல்லாயிருத்தியா" என்று அக்காவின் 3வயது மகள் கேட்டு கொண்டே இருக்கிறாள். அந்த குரலை கேட்கத்தானே தோன்றுகிறதே தவிர பதில் வரவில்லை. என்னிடம். அக்கா பின்னால் இருந்து "சாப்பிட்டிங்களா மாமான்னு கேளு" என்று சொல்கிறாள். இவள் பதிலுக்கு ம்ன்னு சொல்லிவிட்டு "தாப்பிட்டிங்களா மாமான்னு" கேட்கிறாள். கைபேசி கைமாறியவுடன் "ஹலோ இருக்கியாடா" என்று அக்காவின் குரல் என்னை மீண்டும் இந்த உலகத்துக்கு வரவழைத்தது. "ம் இருக்கேன் என்ன திடீர்ன்னு போன்" என்றேன் என் பெண்ணு தான் உன் போட்டாவை பார்த்து கோபி கோபின்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அதான் பேசுறியான்னு கேட்டேன், பேசுறேன்னு சொன்னா... அதான் போன் செஞ்சேன்" என்றாள்.

"ம்" என்றேன்.

"எப்படிடா என் பெண்ணு நல்லா பேசுறாளா!?"

"யம்மா தாயே வாய மூடுன்னு சொல்றவரைக்கும் பேசுறவ நீ, உன் பொண்ணு பத்தி சொல்லவா வேணும்.....கலக்குறா" என்று கிண்டலை அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பொழுதின் சந்தோஷத்தை என்னிடம் வைத்துக்கொண்டேன் சுயநலத்துடன் ;)

மழை தொடரும்.......

Friday, October 17, 2008

நானும்... என் சினிமாவும்...

கொடுத்த காசுக்கு கூவுதல்

இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த தம்பிக்கும் தல கானாவுக்கும் என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.

சொந்தக்கூவல்

சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "பிதாமகன்" படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.




1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி சென்ஷி வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)

5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".

5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.

"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.

7. தமிழ் சினிமா இசை?

இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.

ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.

"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"

"இல்ல மச்சி"

"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"

வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)

அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)

1. தலைவர் பினாத்தலார்

2. மங்கை அக்கா

3. சந்தோஷ் அண்ணாச்சி

4. மாப்பி ராம்

5. இனியவள் புனிதா

Thursday, October 09, 2008

பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - சென்ஷி


ஏற்கனவே பலதடவை காதலிச்சுருக்கான்னு சென்ஷி சொன்னப்பாலும் நம்பாத மனசு சமீபத்துல அவனோட ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்ததும் நம்பிக்கை வந்துடுச்சு.

காதலிக்கு இதயத்தை கொடுப்பாங்கன்னு சும்மா பேச்சுக்குத்தான் சொல்லுவோம். ஆனா சென்ஷி மொதல் காதலிக்கு இதயத்தை கழட்டி கொடுத்துட்டு அடுத்தடுத்த காதலுக்கெல்லாம் கொடுக்க இதயம் இல்லாததால (என்ன ஒரு கஞ்சத்தனம்... கடவுளுக்கு!) கல்லீரல், மண்ணீரல்ல ஆரம்பிச்சு உள்ள இருக்கற மிச்ச சொச்ச எல்லா ஸ்பேர் பார்ட்டையும் கிட்னி உள்பட கழட்டி கொடுத்துட்டு மறுக்கா லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு பந்தா வுட்டுத்திரியுறான்.

புதுசா வர்ற காதலி(களு)க்கு கொடுக்க இனிமே அங்க எலும்பு மாத்திரம்தான் பத்திரமா இருக்குது. அத நினைச்சாத்தான் பக்குன்னு இருக்குது.

ப்ளீஸ். ..

இதோட நீ லவ்வு பண்றத நிறுத்திக்கடா மாப்பி!..

இல்லைன்னா இருக்கற எலும்பு கூட மிஞ்சாது...!!!!!!

Wednesday, September 17, 2008

எல்லாம் முடிஞ்சிடுச்சி....




சோம்பேறிக்கு தோலோட வாழைப்பழமுன்னு சொல்லுவாங்க. அந்த தோலோட இருக்குற பழத்தைக்கூட யாராவது எடுத்து கொடுத்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறவன்நான். வர வர ரொம்ப சோம்பேறித்தனம்.இந்த சோம்பேறித்தனத்தை வச்சிக்கிட்டே ஊருக்கு போனேன். 35 நாள் நானும் என்ஜாய். என்னை வச்சி சிலபேர் என்ஜாய்ன்னு ஒருவழியாக எல்லா என்ஜாய்யும் முடிச்சிக்கிட்டு வந்தாச்சி.

சென்னையில் பேனர்கள் இல்லை. நல்லதுதான் ஆன்னு வாய பொளந்துக்கிட்டு பேனர்பார்த்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் (வேற யாரு நான் தான்!). ஆனா சென்னைரயில்களில் ஜோடி நம்பர் ஒன்னுன்னு ஒரு ஒரு ஜோடிக்கும் பேனர். ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது. என்னென்னு தெரியல

----------------- *

சத்யம் படத்தை சத்திய சோதனையுடன் கஷ்டப்பட்டு பார்த்துட்டு வந்தேன்.மறுநாள் நண்பன் ஒருவன் போன்.

"மச்சி! நைட்டு ப்ளான் ஒகே தானே"ன்னுகேட்டான்.

நானும் "ஆமாண்டா, எல்லாம் ரெடி"ன்னு சொல்லிட்டேன்.

"நீ எப்ப வர"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன் "நீ காலையில என்ன பண்ணுற"ன்னு கேட்டான்.

"பெருசா ஒன்னும் இல்லைடா சொல்லு, என்ன விஷயம்?"

"அப்படின்னா ஒண்ணு செய். காலையில 11.30 மணிக்கு சத்யம் தியேட்டருக்கு வந்துடு. படம் பார்த்துட்டு அப்படியே நேரா போயிடுவோம். என்ன ஓகே வா?"

கரும்பு தின்ன கூலியா! "ரைட்டுமச்சி! நான் ரெடி.. ஆமா, என்ன படம் அதை சொல்லு டா....?!"

"ச்ச அது சஸ்பென்ஸ்..."சரின்னு காலையில 11.30 சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னுக்கிட்டு இருக்கேன் வந்தான்..."நேரா வாடா போவோம்ன்னு சொல்லி படிக்கட்டு கிட்ட வந்துட்டான்.

"டேய் இப்பவாச்சும் சொல்லுடா என்ன படமுன்னு கேட்டேன்."

"அதெல்லாம்முடியாது பெயர் போடும் போது உனக்கே தெரியும் வாடா.

"டேய் இதெல்லாம் ஓவரு அதெல்லாம் முடியாது ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலை. இல்ல நான் இப்படியே எஸ்கேப்பு."

"மச்சி சத்யம் தியேட்டரில் சத்யம் படம் சூப்பர்ல மச்சி."

"போடா லூசு அந்த தெலுங்கு படமா...அய்யே அந்த கொடுமையை தான் நேத்துதான் பார்த்துட்டு வந்தேன்.....திரும்பவுமா.ஆனா ஒன்னு முதல் முறை
பார்த்ததுக்கும் போதை விட்டு ரெண்டாவது முறை பார்த்ததுக்கும் கொஞ்சம்
வித்தியாசம் இருந்திச்சி.படம் முழுக்க சிரிச்சிக்கிட்டேஇருந்தேன். எல்லாம் கூட வந்த ஒரு கும்பல் அடிச்ச கமெண்ட்ஸ்.

தாம்தூம்
தலைவலி வந்தது தான் மிச்சம். அதுவும் இரவு காட்சிக்கு சென்றுசரியான பல்பு வாங்கினேன்.

ஜெயம் கொண்டான்
முக்கியமாக அந்த வில்லனுக்காகத்தான் படத்திற்கு
சென்றேன். படம் தொடங்கி 20 நிமிஷம் காலியான உடன் தியேட்டருக்குள்சென்றோம். நான் ஏன்டா போவோமான்னு கேட்டேன். கூட வந்த மாப்பி தான் படத்தைஏற்கனவே பார்த்துட்டேன்டா வா. நான் என்ன ஆச்சுன்னு சொல்றேன்னு சொன்னான்.அவனை நம்பி உள்ளே போன மச்சி நானும் இந்த இடத்தில் இருந்துதான்டா படத்தை
பார்த்தேன்னனு டயலாக்கு விட்டான். "மகனே நீ எல்லாம்.....ன்னு
நொந்துக்கிட்டு மீதி படத்தை பார்த்தேன். மெகா சீரியல் பார்த்த மாதிரிஇருந்துச்சி. கடைசியில பேசுற நாலு வசனம் தவிர.

A Wednesday
இந்திப்படம்இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் தியேட்டருக்கு உள்ளே போன பிறகு தான் அதுஇந்தி படமுன்னே தெரிஞ்சது. அதுக்கு யார் காரணம் எல்லாம் கேட்காதிங்க.சத்தியமாக நான் இல்லை. ஆனா 2.30 மணிநேரம் போனதே தெரியல ஒரே நாள்ல நடக்கிறகதை. தீவிரவாதிகளால பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த தீவிரவாதிகளை போலீஸ்
உதவியுடன் கொலை செய்கிறார். நல்லா எடுத்திருக்காங்க. சில வசனங்கள்
புரிஞ்சது. அப்போ மீதி வசனம் எல்லாம் புரியலியான்னு எல்லாம்கேட்கக்கூடாது. பக்கத்துல உட்காந்தவுங்களுக்கு எனக்கு இந்தி தெரியாதுன்னு சந்தேகம் கொஞ்சம் கூட வரல அந்த அளவுக்கு நம்ம நடிப்பு.

சரோஜா
ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான். அது இங்கீலிபிசு கதையோ என்னாமோ. ஆனா வெங்கட் பிரபு கலக்கிட்டாரு. தியேட்டர்உள்ளே போகும் போதே பிரண்ட்சிப் பாண்ட் கொடுத்தாங்க. தோஸ்து படாதோஸ்துன்னு.படம் முழுக்க காமெடி தான். அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி பார்த்த கலக்கல் படம். செம என்ஜாய்!
----------------- *

விரல் இடுக்குளில் டிக்கெட்டை வச்சிக்கிட்டு தோல் பையில இருந்து சில்லறைஎல்லாம் எடுத்து கொடுத்திக்கிட்டு இருந்த கண்டக்டர்கள் எல்லாம் இப்போ இல்ல. ஒரு ரெண்டு மூணு அமுத்து! டக்குன்னு ஒரு பிட்டு பேப்பர் வருது.அப்படியே கிழிச்சி கொடுத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. நல்ல முறைதான். ஆனா என்ன! அடுத்த முறை பார்க்கும் போது அந்த குட்டி இயந்திரம்இருக்கும். இந்த கண்டக்டர்கள் இருப்பாங்களான்னு தெரியல.

----------------- *

டிவி சீரியல் எல்லாம் பார்க்குற கொடுமையை ஒரு ரெண்டு நாள் அனுபவிச்சேன். அதில் இந்த அரசி சீரியலில் வரும் லியாஸ் அலிகான் பேசுற விதமேஅப்படித்தானா.. இல்ல இந்த சீரியலுக்காக இப்படி பேசுறாரான்னு ஒரே சந்தேகம். என்ன சி சே எப்படி இருக்கிங்க.. சி சேன்னு அவரு பேசுற விதம்அய்யோ சாமி இயந்திர மனிதன் பேசுற மாதிரியே இருக்கு. இன்னும் விஜய் டிவியில ஏதாவது ஒரு போட்டி வச்சி அதுக்கு ஊரையே கூட்டி வச்சிகும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.

----------------- *

இந்த முறை கோவில் குளம் என்று செல்ல வேண்டியதாக இருந்துச்சி. மயிலை கோவிலில் ஆர்ம்பித்த பயணம் எங்க வூட்டு பக்கத்துல இருக்குற விநாயகர் கோவில்ல வந்து முடிந்தது. திருத்தணி முருகனுக்கு மொட்டையும் போட்டாச்சு.மொட்டை போடும் போது ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சனை வருமோன்னு ஒரு சின்ன பயம். மொட்டை போட்ட புண்ணியத்துல தலையில் இருந்த வெட்டு காயங்கள்தெரிந்தது. ஒவ்வொரு வெட்டு காயத்தையும் தொட்டு பார்க்கும் போது அம்மா நினைவுகள் வந்து சென்றது. அதிக பட்சம் எல்லாம் அம்மாக்கிட்ட வாங்கியவெட்டு தான்.. அந்த அளவுக்கு அம்மாவை இம்சை படுத்தியிருக்கேன்.

இந்த முறைதிருப்பதி தரிசனம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் கோவிலில் கொடும்!பிரசாதம் கொஞ்சம் கூட நல்லவேயில்ல.சக்கரைப் பொங்கல்ன்னு ஒன்னு கடனுக்குன்னு தந்தாங்க அதில் இனிப்பே இல்ல பெருமாள் என்னைக்குஇவுங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பாரோ. அதே போல வேலூரில் உள்ள பொற்கோவில் மிகப்பிரமாண்டமாக இருந்துச்சி. எல்லாரும் ரொம்ப அழகாக செய்திருக்காங்க.அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு என்னமோ அந்தகோவிலுக்குப் போகவே பிடிக்கல. அதனால வெளியிலேயே நின்னுட்டேன்.



இப்படியாக ஒரு வழியாக 35 நாள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன்.

Monday, July 21, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..



நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அத‌ன் சிற‌கினில் வாழ்த்துக்க‌ளை கோர்த்து வைத்தேன்.

நீர் கொண்ட கரு மேகங்களின்
காற்றிடைவெளி அதிகரித்து
உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்
அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.

கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி
கொஞ்சம் காற்றையும் சுமக்கச் சொல்லி வைத்தேன்
கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்
எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே

விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்
உனக்கான கதிராக இருக்கின்றது
விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று
பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....

Saturday, July 12, 2008

காத்திருந்த காதலி: பாகம் 9

இதுவரை

காத்திருந்த காதலி: வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7
மை ஃபிரண்ட் - பாகம் 8

முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது. எப்படியும் நீ எழுதியிருக்கிறது புரியப்போறதுல்லன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை அதான்.

கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...அப்புறம் இந்த கெளரியை கார்த்திக்கோட டைரியை திறந்து பார்க்குற மாதிரி வச்சிட்டாங்க....மீதி நான் எழுதியிருக்கேன். இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.
----------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் நால்வருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தனர். சங்கர் அரைமயக்கத்தில் இருந்து முழுமயக்கத்திற்க்கு சென்றுவிட்டான். கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....ச்ச எதுக்கு அடிக்குறானுங்கன்னு தெரியாமல் அடிவாங்குறேன். இது என்ன நம்ம நிலைமை வடிவேலு காமெடி மாதிரி ஆகிடுச்சி....

அப்பா : "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு நல்லா தானே இருந்திங்க"

அம்மா : "உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமத்தானேடா வளர்த்தோம். இப்ப என்னடா நடக்குது...ஒண்ணுமே புரியலியே கடவுளே!"

"இவுங்களுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்குறது. எனக்கே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது."

கார்த்திக் : "சார்.... கதை எழுதற கோபி சார்....! உங்களைத்தான்.... கொஞ்சம் கதையை வேற எங்கயாச்சும் சுத்திட்டு அப்புறம் வாங்களேன். இங்க புலம்பல் ஓவராக இருக்கு....எனக்கு ஒண்ணும் புரியல ப்ளீஸ் ... டோண்ட் ரைட் ஃபீலிங்க்ஸ் :( !"

கதை எழுதற கோபி (அதாவது நான்): "கார்த்திக் இப்படி ரொம்ப பீல் பண்ணி கேட்டுகிட்டதானால நாம இப்போ கேளரி....ச்ச..கெளரி இருக்கும் இடத்திற்க்கு போக போறோம். எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================

சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம். கிசுகிசு படிக்குற கிராதகனுங்க.. நாம படிச்சவுங்கதானே (ஆமாம். பத்தாவது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு இப்படி அடிக்கற அலம்பலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல). இப்படி யாரும் இல்லாத வீட்டுல அதுவும் அதிகம் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அறையில் அவரோட டைரியை எடுத்து படிக்கிறோமே என்பதில் வெட்கமோ குற்ற உணர்வுகளே அப்போது அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. அதனை அடைவதற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு இருந்தது.

அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. டைரியின் வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தவள் "இது அவன் காசு கொடுத்து வாங்கியிருப்பானா... இல்ல ஓசியில ஏதாவது கம்பெனியில இருந்து வாங்கியிருப்பானா.. ச்ச! இது என்ன அவனோட காதலியை பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தா இப்படி டைரியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க.. மனுஷன் மனசு குரங்குன்னு ஒரு இடத்துல ஒரு நிமிஷம் இருக்கா....தவிக்கிட்டே இருக்கு என்று எண்ணி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். ச்சே! இது என்ன சிரிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட காதலன் அங்கே விபத்துல இருக்காரு இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். இதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க. (டேய்! இதுக்கெல்லாம் ஒரே பேரு தாண்டா மெண்டல்). என்ன இது.. இப்படி லூசு மாதிரி (கன்ஃபர்ம் ஆயிடுச்சு பார்த்தியா) எண்ணங்களை ஓட விட்டுட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி மொத்தமாக படிக்கிற உங்களையும் லூசு மாதிரி யோசிக்க வைத்துக் கொண்டே டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்.

(பேக் கிரவுண்டில் சுட்டும் விழிச்சுடரே.. கஜினி பட பாடல் ஒலிக்கத்தொடங்கினால் அது என் தவறில்லை. அசினை மட்டும் மனதில் கொள்ளுதல் நலம்)

அடங்கொய்யால.... எடுத்தவுடனே இவனும் டைரியில கவிதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானே.. :(

************************* ********
**************
*********************
*************
!
!!

(அடுத்தவங்க கவிதைய என் பதிவுல போட்டு திருட்டுப்பையன்னு சொல்லிட்டா என்ன செய்யறது.. அதான் ஒரு எச்சரிக்கை)

கௌரிக்கு அதை படித்தபோது ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் ஒன்றும் புரியாமல் தவித்தாள். கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. பின்னால் விழுவது போல இருந்து மீண்டு சுதாரித்தாள். டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள். கருமம் பிடிச்சவன். லவ் பண்றாங்கறத நெனைப்புல வச்சுக்க வேற ஏதுமே கிடைக்கலையா. காஞ்சு போன மல்லிப்பூவ வச்சிக்கிட்டு இவன் என்னத்த செய்யறான். இந்த மல்லிப்பூவின் நார் கிடைத்தாலாவது ஏதாவது துப்பு கிடைக்கலாம். டைரியின் பக்கங்களை மெல்ல பயத்துடன் திருப்பினாள். அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.

இன்று.... 2002 - பிப்ரவரி - 10 ந்தேதி - லேண்ட் மார்க்கில் அவளுக்காக வேலண்டைன் கார்டு வாங்க நின்று கடனுக்கு அட்டை கிடைக்காமல் திரும்பி வந்தேன். (அடடா.. என்ன கொடும சார் இது..!)

2002- பிப்ரவரி - 12 ந்தேதி- பர்மா பஜாரில் உள்ள பெரிய ஒலிம்பிக் கார்டு கடையில் கஷ்டப்பட்டு ஒரு கார்டை லவட்டி வந்து அர்ஜண்டாய் அவள் பெயரை எழுதி பத்திரப்படுத்தியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் தந்து பரிசாய் ஒரு சாக்லேட்டாவது அவள் காசில் சாப்பிட வேண்டும். (லவ்வுக்காக லவட்டுறதுங்கறது இதுதான் போல)

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - காலை 10 மணி - இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை சந்திக்கப் போகிறேன். அவள் என்ன சொல்வாளோ என்ற பயம் நெஞ்சை அரிக்கிறது. காலையில் சாப்பிட்ட எண்ணெய் அதிகமான பூரியின் வேலையாய் கூட இது இருக்கலாம்.

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - மாலை 7 மணி - கௌரி எனக்கு துரோகம் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவனும் துரோகியாகிவிட்டானே என்ற எண்ணத்தில் நான் இரவு சாப்பிட பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் படுத்து விட்டேன். (காசில்லைடா.. வேற என்ன செய்வ)

கௌரிக்கு அதை படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் சங்கர், அவளிடம் பகிரங்கமாய் காதலை சொன்னதும் அதே எழவெடுத்த தேதியில்தான்.... ஒருவேளை.. ஒருவேளை.. கார்த்திக் லவ் பண்ண பொண்ணு பேரும் கௌரியா இருக்குமோ.. (இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா...) ஆனால் அடுத்த பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை படிக்க படிக்க அவளுக்கு பதற்றமும் பயமும் உண்டாயிற்று.. "கௌரி இந்த உயிர் உன்னுடன் வாழ்வதற்கு வைத்திருக்கிறேன். உன்னுடன் வாழ்வதற்கு எவனும் குறுக்கே வந்தால் அவன் உயிரை எடுப்பதற்கும் துணிந்திருக்கிறேன்" இப்படிக்கு உன் அன்பு கதலன்... கார்த்திக் (நாசமா போனவன் காதலன்னு தப்பில்லாம உருப்படியா எழுத துப்பில்ல.. அத விட்டுட்டு இந்த நாதாறிக்கு லவ்வு ஒரு கேடு). டைரியை தோளில் மாட்டியிருந்த டம்பப்பையில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.

காரணம் வெளியே.... (சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது). அரையடி ஸ்கேல் நீளத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூன்றடி உயரத்தில் வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த தெரு நாய் அவளை கண்டு எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தது. பயத்துடன் மீண்டும் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு ஜன்னலின் வழியே நாயைப்பார்த்து பழிப்பு காட்டியதும்தான் அவளுக்கு நிம்மதியானது.

அந்த சமயம்..

வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அவளது அப்பா இறங்கினார். வீட்டிற்குள் இருந்த கௌரியை கண்டு முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு நாயை தாண்டி உள்ளே நுழைந்தார்.

ஜன்னலின் அருகே சென்று கௌரியை பார்த்து, "என்னமா இது. இப்படி நாய்க்கு போய் பயந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கே. குலைக்கிற நாய் கடிக்காதுங்கறத பழமொழிய நீ கேள்விப்பட்டது இல்லையா"

ப‌ய‌ உண‌ர்வுட‌ன் கௌரி, "அந்த‌ ப‌ழ‌மொழி என‌க்கு தெரியும்ப்பா. ஆனா அது இந்த‌ நாய்க்கு தெரியுமான்னு தெரியலையே.. அவ‌ச‌ர‌த்துல‌ எங்க‌யாச்சும் க‌டிச்சு வ‌ச்சுட்டா நான் என்ன‌ செய்ய"

அப்பா: "தப்பும்மா. வாயில்லா ஜீவனை இப்படில்லாம் பேசக்கூடாது"

கௌரி: "அது வாயில‌ நீங்க‌ கைய‌ வ‌ச்சு இந்த‌ ட‌ய‌லாக்க‌ சொன்னாக்கூட‌ நான் ந‌ம்ப‌ மாட்டேன்."

"ட்டம்மார்.." வெளியே பெருத்த‌ ச‌ப்த‌த்துட‌ன் காரின் ட‌ய‌ர் வெயில் தாங்காம‌ல் வெடித்த‌து.

(இதுக்குப் பேரு சஸ்பென்சான்னு யாரும் கேக்கப்படாது. என்னை மாதிரி அடுத்து வர்றவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நானே ஒரு பிட்டை எடுத்துப்போட்டிருக்கேன். அம்புட்டுதான்)
=======================================================================
சரி இத்தோட என்னோட கடமை முடிந்தது (இந்த மாசத்து கடமைன்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது) அடுத்து நான் அழைக்கும் நபர்..... தற்போது அமெரிக்காவில் இந்த பக்கம் ஒரு வெள்ளை இந்த பக்கம் ஒரு கருப்பின்னு நடுவுல நம்ம ஆளு அதாங்க நம்ம கதாசிரியார் கப்பி பய ;)