Friday, October 17, 2008

நானும்... என் சினிமாவும்...

கொடுத்த காசுக்கு கூவுதல்

இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த தம்பிக்கும் தல கானாவுக்கும் என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.

சொந்தக்கூவல்

சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "பிதாமகன்" படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.




1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி சென்ஷி வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)

5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".

5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.

"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.

7. தமிழ் சினிமா இசை?

இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.

ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.

"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"

"இல்ல மச்சி"

"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"

வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)

அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)

1. தலைவர் பினாத்தலார்

2. மங்கை அக்கா

3. சந்தோஷ் அண்ணாச்சி

4. மாப்பி ராம்

5. இனியவள் புனிதா

37 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ச்சுட்டு :)

சென்ஷி said...

//சென்ஷி said...
மீ த ஃபர்ச்சுட்டு :)
//

ரிப்பீட்டே :))

rapp said...

me the 3rd

கானா பிரபா said...

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

இதில் ஏதும் உ.குத்து இருக்கா தல
;-)

கலக்கல், உங்களுக்கும் பாஸ் மார்க்ஸ் கொடுக்கிறேன்

ஆயில்யன் said...

தம்பி கோபி சூப்பர் :)))

ஆயில்யன் said...

//நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.///

அப்ப இடைவேளையில என்ன வாங்கி தின்பீங்க????? :))

ஆயில்யன் said...

//நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. ///

எனக்கு கிளைமாக்ஸ் புடிக்கும் அது கூட கிண்டி அண்ணா யுனிவர்ச்சிட்டியில எடுத்ததுன்னு சொல்லி ஒரே ஒரு தடவை அந்த யுனிவர்ச்சிட்டிகுள்ளாற போய்வந்த பீலிங்கல எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொண்ணா சொல்லி சொல்லி பார்த்ததுண்டு :)))))))

Anonymous said...

////"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

இதில் ஏதும் உ.குத்து இருக்கா தல
;-)

கலக்கல், உங்களுக்கும் பாஸ் மார்க்ஸ் கொடுக்கிறேன்//



:(((

ஸ்ரீ said...

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

தல இப்போ மடல்ல ஒரு படம் வந்தது அந்த பொண்ணோடது. பார்த்தீங்கனா இப்படி பேச மாட்டீங்க இன்னமும் அதே வாய் தான் ஆனா அழகா இருக்குதுங்கோவ். இன்னும் ஒரு வருசத்துக்குள்ள அந்த படத்தை பதிவுக்குள்ள வைச்சு ஒரு பஜ்ஜி போடுவீங்கன்னு எனக்குள்ள இருக்குற பட்சி சொல்லுது :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".
//

பதிவுல படிக்கும் போது இன்னும் எஃபெக்ட் அதிகமா இருக்குமே? :)

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

OMG!
நீங்க பாசமலர் படம் மட்டும் பாக்கலை-ன்னு நினைக்கிறேன்! இன்னிக்கே பாத்துருங்க!
அப்பறம் செல்லச் சகோதரி துர்காவைத் தேடிப் போய்த் தானா பரிசுப் பொருள் கொடுப்பீங்க! :)

கதிர் said...

துர்கா புத்திசாலியா இருக்கறதுல உனக்கென்னடே வருத்தம்...

மங்கை said...

என்னை ஏன் இழுக்கறீங்கப்பா.... நான் கடைசியா சினிமா பார்த்தது எப்பன்னு எனக்கே மறந்து போச்சு... சினிமானா என்னன்னு கேட்பேன்..

கப்பி | Kappi said...

//புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு//

அந்த புகைப்படங்களை வெளியிடுமாறு வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))

Geetha Sambasivam said...

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

ஹிஹிஹிஹி, எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம் இந்தப் பதிவிலே இதுதான்!!!! :)))))))))))

Anonymous said...

//ஹிஹிஹிஹி, எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம் இந்தப் பதிவிலே இதுதான்!!!! :)))))))))))//

கீதா பாட்டி ரொம்ப சிரிக்கதிங்க.

குசும்பன் said...

//நானும்... என் சினிமாவும்... //

எம்புட்டு பணம் போட்டு படம் எடுத்த ராசா?

குசும்பன் said...

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) //


பெயர் ராசி போல டம்பி!!!

Unknown said...

:))

கவிதா | Kavitha said...

//மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு.//

கோபி எனக்கு மலையாள படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், நேடிவிடி சூப்பரா இருக்கும்... என்னுடைய ஹப்பி, "ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நீ மலையாளப்படம் மெய்மறந்து பார்த்துட்டு இருக்கும் போது எவனா தலைமேல் கட்டையாள அடிச்சிட்டு வீட்டை காலி பண்ணபோறான்.. அப்ப இருக்குடி உனக்குன்னு சொல்லுவாரு..!! " அவ்வளவு கவனமாக தன்னை மறந்து மலையாள படங்கள் பார்ப்பேன். :) ஆனா அங்கேயே போய் தங்க நேரிட்டபோது சினிமாவிற்கும் அவர்கள் பேசும் மலையாளத்திற்கும் நிறைய வித்தியாசம் பார்த்து வெறுத்துபோய் விட்டேன். ஒன்றுமே புரியல அதான் காரணம். :(

rapp said...

//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு//

ஹா ஹா ஹா சூப்பர்:):):)

rapp said...

//மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"

"இல்ல மச்சி"

"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"
//

:):):)

rapp said...

இவ்ளோ படத்தைப் பத்தி சொல்லிருக்க நீங்க எங்க தல நடிச்ச நாயகன் பத்தியும் சொல்லிருக்கலாம்:(:(:(

MyFriend said...

சூப்பரண்ணே.. நல்ல கேள்வி-பதில். :-)

MyFriend said...

//சென்ஷி said...

மீ த ஃபர்ச்சுட்டு :)//

எனக்காக டெடிக்கேட் செய்த சென்ஷிண்ணேன்னுக்கு நன்றி. :-)

Anonymous said...

//அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும்.//

ஆஹா நீங்களும் நம்ம ஜாதி!

தென்றல் said...

"சொந்தக்கூவல்" யை இன்னும் விரிவா சொல்லிருக்கலாம், கோபி!

/காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல./

:) :)

கோபிநாத் said...

@ சென்ஷி
\\மீ த ஃபர்ச்சுட்டு :)\\

நன்றி மாப்பி ;)

@ கானா பிரபா
//"துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :)//

இதில் ஏதும் உ.குத்து இருக்கா தல
;-)\\

ஏன் தல உங்களுக்கு இப்படி ஒரு கொலைவெறி :)

\\கலக்கல், உங்களுக்கும் பாஸ் மார்க்ஸ் கொடுக்கிறேன்\\

நன்றி தல ;)

@ ஆயில்யன்
\\தம்பி கோபி சூப்பர் :)))

நன்றி அண்ணே ;)

\\அப்ப இடைவேளையில என்ன வாங்கி தின்பீங்க????? :))\\

தின்ன மாதிரி எதுவும் ஞாபகத்துல இல்லைண்ணே ;)

@ துர்கா
\\:(((\\
;-( ;-)

@ ஸ்ரீ
\\தல இப்போ மடல்ல ஒரு படம் வந்தது அந்த பொண்ணோடது. பார்த்தீங்கனா இப்படி பேச மாட்டீங்க இன்னமும் அதே வாய் தான் ஆனா அழகா இருக்குதுங்கோவ். இன்னும் ஒரு வருசத்துக்குள்ள அந்த படத்தை பதிவுக்குள்ள வைச்சு ஒரு பஜ்ஜி போடுவீங்கன்னு எனக்குள்ள இருக்குற பட்சி சொல்லுது :)\\

இன்னும் அந்த மெயிலை அனுப்பாமல் இருப்பதற்காக உனக்கு என்னோட பணிவான கண்டனங்கள் ;)

@ KRS
\\பதிவுல படிக்கும் போது இன்னும் எஃபெக்ட் அதிகமா இருக்குமே? :)\\

ரைட்டு..;))

\\\OMG!
நீங்க பாசமலர் படம் மட்டும் பாக்கலை-ன்னு நினைக்கிறேன்! இன்னிக்கே பாத்துருங்க!
அப்பறம் செல்லச் சகோதரி துர்காவைத் தேடிப் போய்த் தானா பரிசுப் பொருள் கொடுப்பீங்க! :)\\

நீங்க நிறைய பரிசு கொடுத்திருக்கிங்க போல!! ;)

@ தம்பி

\\துர்கா புத்திசாலியா இருக்கறதுல உனக்கென்னடே வருத்தம்...\\\

அதான் மச்சி எனக்கும் தெரியல..;)

@ மங்கை
\\என்னை ஏன் இழுக்கறீங்கப்பா.... நான் கடைசியா சினிமா பார்த்தது எப்பன்னு எனக்கே மறந்து போச்சு... சினிமானா என்னன்னு கேட்பேன்..\\

நாங்களும் இதே மாதிரி தான் வசனம் எல்லாம் பேசுவோம். நேரம் கிடைக்கும் போது போடுங்க ;)

@ கப்பி | Kappi
\\அந்த புகைப்படங்களை வெளியிடுமாறு வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))\\

அதான் இருட்டுனு சொல்லிட்டோம்ல...அப்புறம் அதுல என்ன இருக்க போவுது ராசா ;)

@ கீதா சாம்பசிவம்
\\ஹிஹிஹிஹி, எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம் இந்தப் பதிவிலே இதுதான்!!!! :)))))))))))\\

வாழ்க தலைவி...;)

கோபிநாத் said...

@ குசும்பன்
\\பெயர் ராசி போல டம்பி!!!\\

கரைக்கிட்ட சொல்லிட்டிங்க ;)

@ ஸ்ரீமதி

\\:))\\

நன்றி ;)

@ கவிதா | Kavitha

\\கோபி எனக்கு மலையாள படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், நேடிவிடி சூப்பரா இருக்கும்... என்னுடைய ஹப்பி, "ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நீ மலையாளப்படம் மெய்மறந்து பார்த்துட்டு இருக்கும் போது எவனா தலைமேல் கட்டையாள அடிச்சிட்டு வீட்டை காலி பண்ணபோறான்.. அப்ப இருக்குடி உனக்குன்னு சொல்லுவாரு..!! " அவ்வளவு கவனமாக தன்னை மறந்து மலையாள படங்கள் பார்ப்பேன். :)\\

ஆகா...எல்லாம் ஒரே கூட்டாணி தான் போல!!! ;)

\\ஆனா அங்கேயே போய் தங்க நேரிட்டபோது சினிமாவிற்கும் அவர்கள் பேசும் மலையாளத்திற்கும் நிறைய வித்தியாசம் பார்த்து வெறுத்துபோய் விட்டேன். ஒன்றுமே புரியல அதான் காரணம். :(\\

இங்கையும் நிறைய மலையாளிகள் இருக்காங்க. அவுங்க எல்லாம் ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க. எல்லாம் நம்ம தமிழ் போல தான்.ஊருக்கு ஊர் மாறுபடும் போல! ;)

@ rapp
\\ஹா ஹா ஹா சூப்பர்:):):)\\\

யக்கா....நீங்களுமா!!! ;))


//மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"

"இல்ல மச்சி"

"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"
//

:):):)\\\

உங்க சிரிப்புக்கு அர்த்தம் நான் என்ன சொல்ல வந்தேன்னு புரிஞ்சிடுச்சி போல!!;)

\\இவ்ளோ படத்தைப் பத்தி சொல்லிருக்க நீங்க எங்க தல நடிச்ச நாயகன் பத்தியும் சொல்லிருக்கலாம்:(:(:((\\

ம்ம்ம்...பார்த்தேன்...ஆனா அவரோட நடிப்பை சொல்ல வார்தைகளே இல்ல ;)

@ மை ஃபிரண்ட்
\\சூப்பரண்ணே.. நல்ல கேள்வி-பதில். :-)\\

நன்றி ;))

\\எனக்காக டெடிக்கேட் செய்த சென்ஷிண்ணேன்னுக்கு நன்றி. :-)\\

இன்னும் இந்த விளையாட்டை நிருத்தலியா! ;)

@ வடகரை வேலன் said...
\\ஆஹா நீங்களும் நம்ம ஜாதி!\\

ஆமாங்க ;) முதல் வருகைக்கு நன்றி வேலன் ;)

@ தென்றல்

\\"சொந்தக்கூவல்" யை இன்னும் விரிவா சொல்லிருக்கலாம், கோபி!\\\

எனக்கு தெரியும்...நீங்க இப்படி சொல்லுவிங்கன்னு...அதை ஒரு தனி பதிவக வரும் ;)

பாச மலர் / Paasa Malar said...

கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன் கோபியின் ஸ்டைலில் அறிமுக வார்த்தைகள்..சொந்தக்கூவல் நச்..

கோபிநாத் said...

\\பாச மலர் said...
கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன் கோபியின் ஸ்டைலில் அறிமுக வார்த்தைகள்..சொந்தக்கூவல் நச்..

8:24 PM, October 26, 2008
\\

வாங்க அக்கா..! :)

நலமா? வருகைக்கு மிக்க நன்றி ;)

Divya said...

கலக்கல் கோபி:))

\\காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.\\


:)

காண்டீபன் said...

//ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
//

நம்புவோர் கைவிடபடார்.. ரசித்தேன்.

மேவி... said...

"காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல."

ya true. i have donated a lot to Satyam and Inox.

//நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. ///

the climax of the movie was taken in our campus

மேவி... said...

//நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. ///


climax was taken in our campus. in that way am very attached towards the movie.

Divya said...

romba nalla[masama!] post ethumey podaliyey , yein Gopi??

காட்டாறு said...

ஒரு மாமாங்கமா ஆச்சா நீங்க பதிவு எழுதி? என்ன ஆச்சி?

Rajarasigan said...

//அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".//

அதென்ன அப்படி ஒரு ஒற்றுமை...