Wednesday, April 11, 2007

அய்யனாருக்காக ஆறு அழகுகள்

முதல்ல எல்லாருக்கும் வணக்கம்..... அப்புறம் ஒரு பெரிய மாப்பு கேட்டுக்குறேன். ஆணிகளுக்கு நடுவில் அழகைப்பற்றி எழுதுன்னு நம்ம தமிழ்மண குலச்சாமி, கவிதை தென்றல்
திரு. அய்யனார் என்னையும் கூப்பிட்டுயிருக்காரு. இந்த தொடர் ஓட்டத்தை ஆரம்பித்த திரு. கொத்தனார் அவர்களுக்கு ஒரு நன்றி. எல்லாரும் அருமையாக, ரொம்ப அழகாக எழுதிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல நானும் ஏதோ என் மனசுக்கு தோன்றிய இந்த ஆறு அழகுகளைப்பற்றி எழுதியிருக்கேன் பாருங்க





பெண்கள்

அழக்குன்னு நினைச்சவுடனே மனதுக்குள் வந்தது பெண்கள் தான். எத்தனை பெண்கள் யாரை சொல்ல யாரைவிட. ஒவ்வொருத்தருக்கும் தனிதனி அழகு இருக்கு. என்னதான் பல பெண்களை பார்த்தாலும் பழகினாலும் கண்னை மூடி மனதுக்குள் நினைத்து பார்த்தால் என் நினைவுக்கு வரும் முதல் பெண் என் அம்மா தான். என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே. அதுக்கு அப்புறம் என் பள்ளிக்காலங்களிலும், கல்லூரியிலும், போகும் பாதையில் என்னை கடந்து செல்லும் பெண்கள் முதல், நெஞ்சம் மறப்பதில்லையில் வருவாங்களே தேவிகா, மற்றும் மாதுரி தீட்சித் போன்ற சில நடிகைகளும் அழகு தான்.

நிகழ்வு

சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சி நாம் எதிர்பாராதாக இருக்கும் அப்படி ஒரு நிகழ்சி தான் கடந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு போனபோது நிகழ்ந்தது. வீட்டில் யார்க்கிட்டையும் நான் வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல ஒரு திடிர் சர்ப்ரைசாக இருக்கட்டுமேன்னு கிளம்பிட்டேன். வீட்டு முன்னாடி வந்திறங்கும் போது விடிகாலை ரெண்டு மணி. கதவுக்கிட்ட போனதும் ஒரு சின்ன தயக்கம் "ச்ச எல்லாரும் நல்லா தூங்கிக்கிட்டு இருப்பாங்க இப்ப காலிங் பெல் அடிச்சா எவ்வளவு இடைஞ்சலா இருக்குமுன்னு". வேற வழி தெரியில அடிச்சிட்டேன். நான் மெயின் கேட்டுல இருக்கேன் அங்கயிருந்து பார்த்தா எங்க வீட்டின் கதவு நன்றாக தெரியும். அப்பன்னு பார்த்து மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை "அம்மா நீ முதல்ல எழுந்துவாம்மான்னு". கதவு திறக்குது என் மனசுக்குள்ள ஒரு படப்படப்பு, தூக்க கலக்கத்துல, விளக்கு வெளிச்சத்துல கண் கூசி என்னை பார்க்குறாள் அம்மா. அம்மான்னு ஒரே ஒரு குரல் தான் கொடுத்தேன். ஹையோ.....அந்த தூக்க கலக்குத்துலையும் ஒடிவறா பாருங்க அப்படி வறா...வந்தவ சும்மா இருந்தாலா.....டேய்ன்னு அப்படியே என்னை கட்டிபுடிச்சு என் முகம் முழுக்க முத்த மழைதான். அப்ப நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பரிசு

பரிசுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் யாராவது ஏதவாது கொடுத்தாக்கூட கொஞ்சம் யோசிச்சிதான் வாங்குவேன். ஆனா வருடம் தவறாமல் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒருத்தர்க்கிட்ட இருந்து கண்டிப்பா ஒரு பரிசு மட்டும் வந்துக்கிட்டே இருக்கு. அது நான் எங்க இருந்தாலும் சரி. எப்படியாவது அந்த பரிசு என் பிறந்த நாள் அன்னைக்கு கண்டிப்பா என்க்கிட்ட இருக்கும். அந்த பரிசை கொடுப்பது என் மாம்ஸ் சிவா அந்த பரிசு cadbury's Dairy Milk.

குறும்பு

நிறைய இருக்கு அதுவும் கல்லூரி படிக்கும் போது நிறைய......டக்குன்னு மனசுக்கு வந்தது என் கல்லூரியின் முதல் ஆண்டு கெனால் பஸ்டாப்பு.
எங்க திரும்பி பார்த்தலும் பெண்கள்தான் சீனியர் பெண்களும் சக வருட பெண்கள்ன்னு இந்த காதல் தேசம் படத்துல வரமாதிரி வழி எல்லாம் பெண்கள் தான். எங்களையும் அரியாமல் பக்கத்தில் இருந்த குட்டி சுவத்து மேல ஏரி உட்காந்து கண்குளிர எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். திடிரென்று தலையில பட்டுன்னு ஒரு அடி.....எவண்டான்னு பார்த்தா எங்க சீனியர்

"டேய் வீட்டுக்கு போகாம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.....உங்க பஸ்டாப்பு அங்க எதிர்தாப்புல தானே இருக்கு"

என் நண்பன் ஒருவன் ; இவனுக்கு பஸ்டாப்பு இதான் சார் இவனை ஏத்திட்டு நாங்க அங்கே போவோம் சார்.

இன்னொரு சீனியர் ; டேய் இங்க வா......உன் பேரு என்னடா?

நான் ; கோபிநாத் சார்

சீ ; இன்னாது கோபிநாத்தா.....உனக்கு இன்ஷியலெல்லாம் இல்லையா.....இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா

நான் ; ஜி.கோபிநாத் சார்

சீ ; சரி....இப்ப நீ என்ன பண்ற இந்த கோழியை நான் கீழவுடுவேனாம் அதை போய் புடிச்சிக்கிட்டு வரணும் என்ன

நான் ; சரிங்க சார்

சீ ; ம்....போ

நான் ; கோழி எங்க சார்......

சீ ; ஒஹா......நிஜ கோழி இருந்தாதான் சாரு பிடிப்பிங்களா?

நான் ; பின்ன எப்படி சார் பிடிக்கிறது

சீ ; டேய் அடிச்சேன் வச்சுக்க காது கெய்ன்னும்...கோழியை விட்டாச்சி போய் புடிடான்னா......சும்மா பேசிக்கிட்டு இருக்க.....போடா.

அங்க கோழியும் இல்லை ஒன்னும் இல்லை......ஒரு கோழி இருக்குறது மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு அதை பிடிக்கணும். சரின்னு நானும் அப்படி கோழி பிடிக்கிற மாதிரியே ஆக்டு கொடுத்தேன். அத்தோட விட்டானுங்களா இல்லையே....கூடவே சவுண்டும் கொடுக்குணுமாம். கிழிஞ்சது டா இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு பொ....பொ...பொ...ன்னு சவுண்டு விட்டுக்கிட்டு கோழியை பிடிச்சேன். அந்த பஸ்டாப்பே மொத்தமா நான் கோழி பிடிக்கிறதை பார்த்து சிரிக்குது. இன்னிக்கும் அந்த பஸ் டாப்பை கடக்கும் போது அந்த அழகான கல்லூரி நினைவுகள் வரும்.

புன்னகை

என்னதான் அழகான வார்த்தைகள் இருந்தாலும் அது எல்லாம் எல்லா நேரங்களிலும் நமக்கு கை கொடுப்பதில்லை. ஆனா இந்த புன்னகை இருக்கு பாருங்க, பல வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையும், அழகும் அதுக்கு இருக்கு. பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் குழந்தைகள் எல்லாம் சிரிக்கும் பாருங்க அவ்வளவு அழகா இருக்கும். நாம அடிக்கிறதும் ஜோக்குன்னு நினைச்சுக்கிட்டு முகம் மலர சிரிப்பாங்க பாருங்க நண்பர்கள் அவ்வளவு அழகா இருக்கும். 80 வயசு கடந்தும் நான் கேட்கும் குறும்பு கேள்விகளுக்கும், கிண்டலுக்கும் எந்த விதமான முகசுலிப்பும் இன்றி தன் உடல் மொத்தமும் குலுங்கி குலுங்கி சிரிப்பாங்க பாருங்க என் பாட்டி அந்த புன்னகை இன்னும் அழகாக இருக்கும். இதே தமிழ்மணத்து நண்பர்கள் எந்த ஒரு கடினாமான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மக்கூட சாட் பண்ணும் போது ஒரு சிரிப்பான் போடுவாங்க பாருங்க அதுக்கூட அழகுதான்.

இடம்

நிறைய குடித்தனங்கள் இருந்த வீடு. அதில ஒரு பகுதியில சின்னதா ஒரு ரூம், சமையல் செய்வதற்கு கொஞ்சம் இடம், பொருட்கள் எல்லாம் வைப்பதற்கு சின்ன இடம் இவ்வளவு தான். ஓட்டு வீடு, எலி தொல்லை வேற , மழை பெய்தால் ஒழுகும். கால் நீட்டி படுப்பதற்கு கூட வசதி இல்லாத இடம். ஒண்டி குடித்தனமுன்னு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி. மேல இருக்குற கூறைக்கு முட்டுக் கொடுத்து ஒரு மராத்தூண் இருக்கும் அது மேல ஏறி சறிக்கி விளையாடுவேன். பல சுப நிகழ்ச்சிகள் நடந்த இடம் அது. நான் நேரில் கண்ட முதல் மரணமும் அந்த வீட்டில் தான். அந்த வீட்டில் இருக்கும் போது தான் நான் பிறந்தேனாம். இப்பவும் என் கனவுகளில் அடிக்கடி அந்த வீடு வரும். கிட்டதட்ட என் பாட்டி அந்த வீட்டில் நாற்பது வருஷம் இருந்தாங்களாம். இன்று பல வசதிகள் கூடிய வேற வீட்டில் இருக்கிறோம் ஏனோ எனக்கு அந்த பழைய வீடு தான் அழகுன்னு தோணுது.

பதிவு ரொம்ப பெரிசா ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். என்ன அய்யனார் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. இந்த ஓட்டத்தை அடுத்த மூணு பேருக்கிட்ட கொடுக்கானுமாம். இது நமக்கு ரொம்ப நல்லா வருமே.

பாடலாசிரியர் திரு. ஜி

தமிழ்மணத்தில் எப்போதும் first வரும் மை ஃபிரண்ட்

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்மணத்தை கலக்கும்
திரு. கானா பிரபா

52 comments:

இராம்/Raam said...

ஹய்யா இப்போ நாந்தான் ஃபர்ஸ்ட் :)

இலவசக்கொத்தனார் said...

கோபி,

உங்க குறும்பைப் படிச்ச பின் வந்த புன்னகையும் அழகுதான்!!

நல்ல பதிவு!

MyFriend said...

நான் ஃபர்ஸ்ட்டு அகேயின்?

MyFriend said...

கோபிண்ணே, ஏன்ப்பா உங்களுக்கு இந்த கொலை வெறி.. எப்போதும் முதல் கமேண்டு போடுறதுனாலேயா??? :-P

மங்கை said...

கோபி அருமை அருமை.. ஒவ்வொன்றும்.. குறிப்பா அம்மாவும், பெண்களும், பரிசும்.. அழகோ அழகு

கதிர் said...

கோபி!

இப்பதாம்ல ஒரு சூப்பர் அழகு பதிவு போட்டுருக்க!

எல்லாமே அழகா இருந்துச்சி.

கதிர் said...

எழுத்துப்பிழைய சரி பண்ணுப்பா, வேற கீபோர்டு வாங்குடான்னா கேக்க மாட்டேங்கறாங்களே.

மு.கார்த்திகேயன் said...

/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான்.//

கோபி, இதுக்கு நீங்க பெண்கள் அப்படின்னு தலைப்பு சொன்னதை விட அம்மான்னு போட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்

மு.கார்த்திகேயன் said...

/சீ ; டேய் அடிச்சேன் வச்சுக்க காது கெய்ன்னும்...கோழியை விட்டாச்சி போய் புடிடான்னா......சும்மா பேசிக்கிட்டு இருக்க.....போடா./

நானும் கோழியெல்லாம் பிடிச்சிருக்கேன், கோபி

Dev Payakkal said...

azhagu raasa!!
Amma, birthday Giftu, suprise visit, pazhaya veedu , ellam azhagu thaan.Antha Kozhi anubhavam kooda azhaga ninaikum neer vazhga!!

Syam said...

கோபி அட்டெண்டன்ஸ்....ஆணி அதிகம் நாளைக்கு வரேன் :-)

CVR said...

நல்ல பதிவு தலைவரே!!
நானும் ஜி அப்புறமா மை ஃபிரண்டை டாக் பண்ணி இருக்கேன்!! :-)

உங்அ பதிவுல நீங்க சின்னதா சுவையா எழுதனத பார்த்து நாம தேவை இல்லாம வள வளனு ரொம்பா பெருசா எழுதிட்டோமோன்னு தோனுது!! :-)

Geetha Sambasivam said...

mmmm, nice post. but less comments. :(((((((

கானா பிரபா said...

ஆஹா அழகோ அழகு தல, என்னையும் மாட்டிவுட்டுட்டீங்களா, கொஞ்சம் அவகாசம் கொடுங்க, என்னால முடிஞ்சதை எழுதுறேன்.

ஜி said...

அழகு... அழகு... அத்தனையும் அழகு...

தம்பி போட்ட கியர்ல நீஙக அக்ஸ்லேட்டர இந்த மிதி மிதிச்சிருக்கீங்க...

arumai :))

Anonymous said...

// இராம் said...
ஹய்யா இப்போ நாந்தான் ஃபர்ஸ்ட் :) //

சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு

Anonymous said...

கற்பனை கோழி பிடிக்க சென்ற கோபி.உங்க பதிவு நல்ல இருக்கு.நீங்க சொன்ன மூனு பேரு எப்படி எழுதறாங்கன்னு பார்க்குறேன் :)

அபி அப்பா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
நான் ஃபர்ஸ்ட்டு அகேயின்//

கெக்கே பிக்கே, 3வதா வந்துட்டு அக்குறும்ப பாரு:-))

அபி அப்பா said...

கோபிதம்பி! புடுச்ச கோழிய வறுத்து இன்னிக்கு கிடேசன் பார்க் கொண்டு வாப்பா, ஞாபகம் இருக்கில்ல இன்னிக்கு வியாழன். மீட்டிங் உண்டு:-))

அபி அப்பா said...

கோபி! மொத்தத்துல உன் 6 அழகும் அழகேதான் சூப்பர்:-))

Ayyanar Viswanath said...

அட பாசக்கார பயலுங்களா

உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா

கோபி படிச்சிட்டு வரேன்
:)

Ayyanar Viswanath said...

கலக்கிட்ட கோபி

கொஞ்சம் செண்டிமெண்ட் தான் ..இருந்தாலும் ரொம்ப நல்லா இருந்தது..

இராம்/Raam said...

கோபிண்ணே,


அட்டகாசமா எழுதியிருக்கீங்க.......

//என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே.//

சூப்பர் கோபி.... எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது இந்த வரிகள் :)

இராம்/Raam said...

//சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு //

நான் சின்னபையன் தான்'லா :)

Ayyanar Viswanath said...

இந்த ஒண்டு குடுத்துன வாழ்க்கை ரொம்ப அழகு கோபி..
இப்பதான் பெரிய வீடுகள் கட்டி குறுகிய மனங்களோட வாழ ஆரம்பிச்சிட்டோம்..பழைய வீட்டோட வாசன கூட நல்லா இருக்கும்.எங்கயோ கொண்டு போகும்

அம்மாவ பத்தி எவ்வளவு வேணும்னா சொல்லலாம் எப்படி சொன்னாலும் அழகாத்தான் இருக்கும்

உங்க பொறி இமேஜ தூக்கி நிறுத்தி இருக்கிங்க :)

நல்ல பதிவு கோபி

தென்றல் said...

/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன்./

உண்மைதான், கோபிநாத்!

செண்டிமென்ட்-னான நிகழ்வு, கலக்கலான குறும்பு,
அழகான புன்னகை,
'எமோசல்' ஆன இடம் -னு
கலக்கீட்டீங்க!

ரொம்ப நல்லா அழகுபடுத்திருக்கீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செண்டிமெண்ட் வரிகள் நிறைஞ்ச ஒரு மெலடி பாட்டு கேட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு படிச்சா.

கோபிநாத் said...

வாங்க ராம்

\இராம் said...
ஹய்யா இப்போ நாந்தான் ஃபர்ஸ்ட் :)\\

ம்ம்ம்.....நீங்கதான் ஃபர்ஸ்டு :-))))

கோபிநாத் said...

வாங்க கொத்ஸ்
\\இலவசக்கொத்தனார் said...
கோபி,

உங்க குறும்பைப் படிச்ச பின் வந்த புன்னகையும் அழகுதான்!!

நல்ல பதிவு!\\

எல்லாம் உங்களால தான் தல....ரொம்ப நன்றி தல ;-)))

கோபிநாத் said...

வாங்க தோழி
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே, ஏன்ப்பா உங்களுக்கு இந்த கொலை வெறி.. எப்போதும் முதல் கமேண்டு போடுறதுனாலேயா??? :-P\\

;-)))))))), சரி பதிவை படிச்சிங்களா?

கோபிநாத் said...

வாங்க மங்கைக்கா
\\மங்கை said...
கோபி அருமை அருமை.. ஒவ்வொன்றும்.. குறிப்பா அம்மாவும், பெண்களும், பரிசும்.. அழகோ அழகு\\

ரொம்ப நன்றிக்கா......உங்கள் வருகைக்கு ஒரு சிறப்பு நன்றி ;-)))

கோபிநாத் said...

வாங்க தம்பி

\\தம்பி said...
கோபி!

இப்பதாம்ல ஒரு சூப்பர் அழகு பதிவு போட்டுருக்க!

எல்லாமே அழகா இருந்துச்சி.\\

ரொம்ப நன்றி தம்பி ;-))

\\எழுத்துப்பிழைய சரி பண்ணுப்பா, வேற கீபோர்டு வாங்குடான்னா கேக்க மாட்டேங்கறாங்களே\\

எல.....இது கம்பெனி கீபோர்டு நான் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. அதுவும் இல்லாம இந்த எழுத்துப்பிழைக்கு நானும் காரணம். சீக்கிரம் இந்த மாதிரி எல்லாம் இல்லாமல் எழுதுரேன்.

கோபிநாத் said...

வாங்க தலைவா
\\மு.கார்த்திகேயன் said...
/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான்.//

கோபி, இதுக்கு நீங்க பெண்கள் அப்படின்னு தலைப்பு சொன்னதை விட அம்மான்னு போட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்\\

உண்மை தான் தல.... நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே தோணுது. இதுக்கு தான் தலைவர் வேணும்ங்கிறது ;-))

\\நானும் கோழியெல்லாம் பிடிச்சிருக்கேன், கோபி\\

அப்படியா....எந்த பஸ்டாப்பு தல ;-))

கோபிநாத் said...

வாங்க தேவ்...

\\dave...dev said...
azhagu raasa!!
Amma, birthday Giftu, suprise visit, pazhaya veedu , ellam azhagu thaan.Antha Kozhi anubhavam kooda azhaga ninaikum neer vazhga!!\\\

ரொம்ப நன்றி தேவ்.....கோழி மேட்டரு ஒரு குறும்பு அழகு...இதுமாதிரி நிறைய இருக்கு தல. சாட்ல வாங்க சொல்றேன்.

கோபிநாத் said...

வாங்க முதல்வரே (உங்களுக்கு வரவர பட்டம் அதிகமாகிட்டே இருக்கு)

\\Syam said...
கோபி அட்டெண்டன்ஸ்....ஆணி அதிகம் நாளைக்கு வரேன் :-)\\\

இந்த பின்னூட்டம் இட்டு ரெண்டு நாட்கள் ஆகிறது என்பதை சொல்லிக்கொள்ள கடமை பட்டுயிருக்கிறேன்.

G.Ragavan said...

அழகழகா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ. அந்த ஆயிரத்தில் இன்னைக்கு ஒங்க வலைப்பூ.

எடுத்த எடுப்புலயே பெண்கள்தான் அழகுன்னு சொல்லீட்டீங்க. நோ அப்பீட்டுன்னு ஒங்களுக்கு ஒரு கூட்டமே தொடர்ந்து வரும். அது சரி. ஆண்களுக்குப் பெண்கள்தான அழகுன்னு மயிலாரும் சொல்றாரு. ஹி ஹி.

அந்த அம்மா நிகழ்ச்சி ரொம்பவே நெகிழ்ச்சிங்க. அம்மா என்றால் அன்பு. நான் பெத்த அம்மாவச் சொல்றேங்க.

கோழி பிடிச்சீங்களா? பிடிச்ச கோழிய கொழம்பு வெக்கச் சொல்லலையே. அந்த அளவுக்குச் சந்தோசப்படுங்க. :-)))))))

கண்மணி/kanmani said...

நீயே மறந்தாலும்
நாங்கள் கொண்டாடுவோம்
உன் பிறந்தநாளை
புத்தாண்டில் அல்லவா
பிறந்திருக்கிறாய் கோபி
உன் அழகான கனவுகள்
நனவாக பல்லாண்டு வாழ்க
என வாழ்த்தும் அக்கா 'கண்மணி'
சேதி சொன்னது 'தம்பி'
டிரீட் கேட்பது 'சென்ஷி'

கோபிநாத் said...

வாங்க CVR
\\நல்ல பதிவு தலைவரே!!
நானும் ஜி அப்புறமா மை ஃபிரண்டை டாக் பண்ணி இருக்கேன்!! :-)

உங்அ பதிவுல நீங்க சின்னதா சுவையா எழுதனத பார்த்து நாம தேவை இல்லாம வள வளனு ரொம்பா பெருசா எழுதிட்டோமோன்னு தோனுது!! :-)\\

ரொம்ப நன்றி CVR....நான் உங்க பதிவை படிச்சேன் அதில் நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கோபிநாத் said...

வாங்க தலைவி ;) எப்படி இருக்கீங்க?
\\கீதா சாம்பசிவம் said...
mmmm, nice post. but less comments. :(((((((\\

நன்றி ;) எதுக்கு less comments?

கோபிநாத் said...

வாங்க பிரபா
\\கானா பிரபா said...
ஆஹா அழகோ அழகு தல, என்னையும் மாட்டிவுட்டுட்டீங்களா, கொஞ்சம் அவகாசம் கொடுங்க, என்னால முடிஞ்சதை எழுதுறேன்\\

கண்டிப்பாக எழுதுங்க....அவகாசம் அதிகமா எடுத்துக்காதிங்க.

கோபிநாத் said...

வாங்க ஜி
\\ஜி said...
அழகு... அழகு... அத்தனையும் அழகு...

தம்பி போட்ட கியர்ல நீஙக அக்ஸ்லேட்டர இந்த மிதி மிதிச்சிருக்கீங்க...\\

எல்லாம் தம்பியினால் தான்

arumai :))\\

ரொம்ப நன்றி ஜி

கோபிநாத் said...

வாங்க துர்கா
\\துர்கா|thurgah said...
கற்பனை கோழி பிடிக்க சென்ற கோபி.உங்க பதிவு நல்ல இருக்கு.நீங்க சொன்ன மூனு பேரு எப்படி எழுதறாங்கன்னு பார்க்குறேன் :)\\

கண்டிப்பா பாருங்க நீங்களும் சீக்கிர்ம எழுதுங்க ;)

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா
\\
அபி அப்பா said...
கோபி! மொத்தத்துல உன் 6 அழகும் அழகேதான் சூப்பர்:-))\\

நன்றி தலைவா...நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க ராம்

\\இராம் said...
கோபிண்ணே,


அட்டகாசமா எழுதியிருக்கீங்க.......

//என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே.//

சூப்பர் கோபி.... எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது இந்த வரிகள் :)\\

ரொம்ப நன்றி ராம் ;)

கோபிநாத் said...

வாங்க சாமி...வாங்க
\\அய்யனார் said...
இந்த ஒண்டு குடுத்துன வாழ்க்கை ரொம்ப அழகு கோபி..
இப்பதான் பெரிய வீடுகள் கட்டி குறுகிய மனங்களோட வாழ ஆரம்பிச்சிட்டோம்..பழைய வீட்டோட வாசன கூட நல்லா இருக்கும்.எங்கயோ கொண்டு போகும்

அம்மாவ பத்தி எவ்வளவு வேணும்னா சொல்லலாம் எப்படி சொன்னாலும் அழகாத்தான் இருக்கும்

உங்க பொறி இமேஜ தூக்கி நிறுத்தி இருக்கிங்க :)

நல்ல பதிவு கோபி\\

தலைவா யாரு சொன்னாங்க எனக்கு இமேஜ் எல்லாம் இருக்குன்னு. அப்படி எல்லாம் கட்டம் கட்டக்கூடாது....நாம எல்லாம் ஒரே இனம் இல்லையா ;-)))

அப்புறம் உங்க பின்னூட்டம் கூட அழகாக தான் இருக்கு தல ;)

கோபிநாத் said...

வாங்க தென்றல்
\\தென்றல் said...
/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன்./

உண்மைதான், கோபிநாத்!

செண்டிமென்ட்-னான நிகழ்வு, கலக்கலான குறும்பு,
அழகான புன்னகை,
'எமோசல்' ஆன இடம் -னு
கலக்கீட்டீங்க!\\

நடந்து வந்த பாதையும், கூட இருந்த மக்களையும் நினைத்தாலே அழகுதான்.

\\ரொம்ப நல்லா அழகுபடுத்திருக்கீங்க..\\

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி....அடிக்கடி வாங்க ;)

கோபிநாத் said...

வாங்க முத்துக்கா
\\முத்துலெட்சுமி said...
செண்டிமெண்ட் வரிகள் நிறைஞ்ச ஒரு மெலடி பாட்டு கேட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு படிச்சா.\\

எல்லாம் உங்களை மாதிரி நல்லா எழுதுறவுங்க பதிவுகளை படிச்சதுக்கு அப்புறம் தான்.
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிக்கா ;)

கோபிநாத் said...

வாங்க ராகவன் சார் ;-)
\\G.Ragavan said...

\\அந்த அம்மா நிகழ்ச்சி ரொம்பவே நெகிழ்ச்சிங்க. அம்மா என்றால் அன்பு. நான் பெத்த அம்மாவச் சொல்றேங்க.\\

ஹிஹி...ஜி.ரா சார் நான் வேற எந்த அம்மாவையும் நினைக்கவில்லை ;-)

\\கோழி பிடிச்சீங்களா? பிடிச்ச கோழிய கொழம்பு வெக்கச் சொல்லலையே. அந்த அளவுக்குச் சந்தோசப்படுங்க. :-))))\\

அப்போதும் அப்படி எதுவும் சொல்ல்ல.....இப்போ எவனாவது பஸ்டாப்புல கோழியோட சேர்த்து கொழம்பும் வச்சாலும் வைப்பானுங்க ;-))

கோபிநாத் said...

வாங்க கண்மணி அக்கா...வாங்க
எப்படி இருக்கீங்க?

\\கண்மணி said...
நீயே மறந்தாலும்
நாங்கள் கொண்டாடுவோம்
உன் பிறந்தநாளை
புத்தாண்டில் அல்லவா
பிறந்திருக்கிறாய் கோபி
உன் அழகான கனவுகள்
நனவாக பல்லாண்டு வாழ்க
என வாழ்த்தும் அக்கா 'கண்மணி'\\

யக்கா.....என்னக்கா காமெடி பண்ற. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைக்கா.
என் கனவுகளுக்கு வாழ்த்தினதுக்கு ரொம்ப நன்றிக்கா.

\\சேதி சொன்னது 'தம்பி'\\

யக்கா இவன் போச்சை போய்யா கேட்டிங்க.. சுத்தம்... சரியா ரிலு சுத்தியிருக்கான்.

எல தம்பி எதுக்கு உனக்கு இந்த மாதிரி வேலை எல்லாம்

\\டிரீட் கேட்பது 'சென்ஷி'\\

அட நீ வேறயா.....இதுக்கு டிரீட்டு வேற கொடுக்கனுமா...கண்மணிக்கா என் சார்ப்பாக சென்ஷிக்கு உங்களோட அடுத்த பதிவுல ஒரு டிஸ்கி போட்டுடுங்க ;-))

MyFriend said...

கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கேண்..
படிச்சுட்டு வர்ரேன். :-)

MyFriend said...

அழகு சூப்பர்..

கூடிய சீக்கிரத்திலேயே என்னுடைய பங்கை நிறைவேற்றுகிறேன் கோபி.. அதுவரை என்னை மன்னியுங்கள். :-)

Unknown said...

இந்தப் பதிவ இப்பதாம்ப்பா படிக்கிறேன்.
அழகெல்லாம் அழகா இருந்தது.
அம்மாவப் பத்தி சொல்லிகிட்டேப் போகலாமே… அதுவும் பசங்களுக்கு அப்பாவவிட அம்மா மேல தனிப்பாசம் தான் இல்லையா?
பெண்கள்,புன்னகை, பரிசு எல்லாமே நல்லாருந்தது. :-)