Monday, May 21, 2007

கிளம்பு காத்து வரட்டும்

நான் ஆணி புடுங்குறதை பார்த்து எங்க மேனேஜர்

"ராசா...என் தங்கம்....போதும் நீ புடிங்கினது....இனியும் புடிங்கி சுவத்தை ஓட்டை ஆக்காதே....நீ ஆணி புடிங்கின திறமையை பார்த்து கம்பெனியே உனக்கு லீவு கொடுத்திருக்கு....கிளம்பு காத்து வரட்டும்ன்னு சொல்லிட்டாரு". (ஆணி புடிங்கின மாதிரி ஆக்ட் வுட்டதுக்கே லீவா....அப்ப உண்மையில் ஆணி புடிங்கியிருந்தா....நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு)

"கொஞ்சம் நல்ல சாப்பாடு....அம்மா கையால"

"ஒரு ரெண்டு மூணு கல்யாண சாப்பாடு....... நட்பு வட்டாரத்தின் கல்யாணங்கள்" ( அது என்னமோ தெரில மக்கா இந்த வருஷம் ஆரம்பிச்சதுல இருந்தே ஒரே கல்யாணம் தான். இந்த வருஷம் கல்யாண வருஷம் போல)

"வீட்டுல புதுசா வந்திருக்க ரெண்டு குட்டிகள்"......(அக்கா பொண்ணு அண்ணன் பையன்)

"இன்னும் ஒரு மாதத்தில் வர போற இன்னொரு அண்ணன் வாரிசு"

"அப்புறம் வெயிலோடு கொஞ்சம் விளையாட்டு"

"ஊர்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் ஒரு ரவுண்டு"

"அப்படியே பாசகார பசங்களோட ஒரு சின்ன ட்ரீப்.....பாண்டிசேரிக்கு"







இப்படி எல்லாம் கணக்கு போட்டு கிளம்புரேன் மக்கா.....ஒரு மாதம் இந்த தமிழ்மணத்தையும் உங்களையும் எப்படி தான் பிரிஞ்சியிருக்க போறேன்னு நினைக்கும் போது அழுகையா வருது...நான் அழுது என் சோகம் உங்களை தாக்கிடும்ன்னு நினைக்கும் போது வர அழுகை கூட நின்னுடுது.


எங்க பாசகார குடும்பத்தை பத்துரமா பார்த்துக்குங்க.....இந்த கிடேசன் பார்க்கை வேற அபி அப்பாவை நம்பி ஒப்படைச்சிட்டு போறேன். என்னமோ எதையோ விட்டுட்டு போற மாதிரியே ஒரே பீல்....சரி ஓகே.....மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் கிளம்புறேன்.

Sunday, May 13, 2007

அம்மா......அம்மா.....அம்மா.....


உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இந்த செல்ல மகனின்
அன்னையர் தின வாழ்த்துக்கள்





அன்புள்ள அம்மாவுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?


நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா

வாழ்த்துக்கள்ம்மா ;-)

Thursday, May 03, 2007

அபி பாப்பாவின் நன்றி அறிவிப்பு கூட்டம் - கிடேசன் பார்க்

எல்லா ஆணியையும் முடிச்சிட்டு இழுத்து ஒரு பெரு மூச்சு விட்டுட்டு.....ஒரு டீ சாப்பிடலாமுன்னு வெளிய வந்தா கிடேசன் பார்க்கில் இருந்து போன் யாருடா இதுன்னு யோசிச்சிக்கிட்டே போனை எடுத்து

நான் ; ஹலோ.....

அருமையான குரலில் ஒரு குழந்தை பேசிச்சி

ஹலோ.....சித்தா எப்படி இருக்கீங்க

நான் ; இன்னாது சித்தாவா.....நான் சித்தன் எல்லாம் இல்லைமா....அவரு அண்ணாமலை சீரியலோட போயிட்டாரே.....என் பேரு கோபிநாத்

குழந்தை ; அய்யோ......இதுக்கு தான் அப்பா கூட அதிகமா சேராதிங்கன்னு சொன்னேன்.

நான் ; அப்படியா....சரி.... யாரு கண்ணு நீ கிடேசன் பார்க்குல நீ என்ன பண்ற?

குழந்தை ; ம்ம்ம்......அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்

நான் ; நாங்க தானே வழக்கமா அல்வா கொடுப்போம்......நீ யாருக்கு கொடுத்துக்கிட்டு இருக்க

குழந்தை ; காலையில எனக்கு வாழ்த்து சொல்லி பதிவு போட்டாரு இல்ல நம்ம காதலன் சித்தப்பூ அவருக்கு தான் அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்





நான் ; இப்ப தான் நம்ம மரமண்டைக்கு புரிஞ்சது......பேசுறது அபி பாப்பா.....செல்லம்.....கண்ணு....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))))

அபி பாப்பா ; ம்ஹும்...இப்ப வாச்சும் கண்டு பிடிச்சிங்களே.......ரொம்ப கஷ்டம் சித்தா உங்களோட.....

நான் ; சரிடா......கண்ணு கொஞ்சம் ஓவரு ஆணி அதானலதான் சட்டுன்னு கண்டு பிடிக்க முடியல

அபி பாப்பா ; சரி சீக்கிரம் வாங்க.....வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அல்வா கொடுக்க வேண்டும்

நான் ; இதே வந்துட்டேன் கண்ணு......போனை துண்டித்து விட்டு கிடேசன் பாரக்குக்கு ஓடினேன்.

கிடேசன் பார்க்குக்கு போனா அபி பாப்பா பட்டு பாவாடை சட்டையில கலக்கலா இருந்திச்சி.....அல்வா வாங்குறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாரு சென்ஷி....அவருக்கும் அய்யனாருக்கும் இதுல போட்டி வேற

நான் போயி மைக்கை எல்லாம் சரி பண்ணிட்டு பாப்பாவை பவ்வியாமாக மேடைக்கு அழைத்து பேச சொன்னேன்

அபி பாப்பா ; அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்,

கை தட்டல் காதை கிழிச்சது......தம்பி அடிச்ச விசில் வானை பிளந்தது....பாப்பா தன் இரண்டு கைகளையும் தூக்கி அமைதி .....அமைதின்னு சொல்லுச்சி

என் பாசமிகு சித்தப்பூ.....சென்ஷி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....மற்றும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ப.பா.சங்கத்தின் டீச்சர் கண்மணி அவர்களும் அவரின் மாணவ மணிகளும் சேர்ந்து செய்த அல்வா வழங்கப்படும் வாயார....(முடியுமா) சாப்பிட்டு விட்டு போங்க...

எல்லாரும் தட்டை தூக்கிட்டு கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.