Friday, February 02, 2007

உதவிய கரங்கள்...

மக்களே இந்த புது பிளாகர் பிரச்சனை எல்லாம் ஒருவழிய முடிஞ்சிருச்சி (அப்படின்னு நினைக்கிறேன்). அப்பா.... இப்பதான்... கண்னே தெரியுது. அதான் உங்க கண்ணுக்கு எல்லாம் நான் சரியா தெரியரனான்னு ஒரு சோதனை செஞ்சி பார்க்கத்தான் இந்த பதிவு.

அப்புறம் முக்கியமான விஷயம். இந்த பிரச்சனை வந்தவுடனே என்ன செய்றது ஏதுசெய்றதுன்னு ஒன்னுமே தெரியல...ஒன்னுமேபுரியல...நமக்கு தெரிந்தது எல்லாம்
ctrl - C, ctrl - V தான். எத தொட்டாலும் விளங்கமாட்டேன்கிதே....எல்லாம் நம்ம ராசி அப்படின்னு கவலையில இருந்த எனக்கு, அட.... இதெல்லாம் தூசு நண்பா அதான் நாங்க இருக்கமுல்ல கவலைய விடு நண்பான்னு

துபாயில இருந்து நம்ம தம்பி வந்தாக...


அமெரிக்காவுல இருந்து நம்ம ஜி வந்தாக...

உறுகுவே இருந்து கப்பி பய வந்தாக...


போம்மா மின்னல்ன்னு.... பிரச்சனையை போகவைச்சிட்டாங்க.

இந்த மூன்று "க"வும் செஞ்ச உதவி இருக்குதே...சொல்ல முடியல....அதான் பதிவா போட்டுட்டேன். இந்த மூன்று பேருக்கும், பதிவு இட்டு உதவிகள் செய்த மற்ற பதிவாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

அப்புறம் மக்களே புதிய template எப்படி இருக்கு.....ஏதாவது பிரச்சனை பண்ணுதான்னு சொல்லுங்க.


அப்புறம் பிப்ரவரி மாசம் பிறந்து விட்டது எங்க பார்த்தாலும் காதல்..காதல்ன்னு கலக்கபோறாங்க...
அதுவும் நம்ம காதல் கவிஞ்சர் அருட்பெருங்கோ
28 நாளும் இதுகாதல் பூக்கும் மாதம்ன்னு கவிதை மழையில நம்மலை முழ்கடிக்கப் போறாரு...அப்படியே கொஞ்சம் நனைஞ்சுட்டு போங்க...

ம்ம்ம்........இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!!

Wednesday, January 24, 2007

சினிமா எல்லாம் ஜுஜிபி....

மக்களே இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுல நடந்த வெளிமாநிலத்து நிஜகதை. இது ஏதோ சினிமா கதையில்ல நம்ம சென்னை விமான நிலையத்தில் நேற்று காலையில் நடந்த சம்பவம் தான் இது. காலையில நாட்டுல என்ன செய்தின்னு தமிழ்முரசுக்கு போனேன் அதுல பார்த்தது தான் இந்த செய்தி....

சினிமா எல்லாம் ஜுஜிபி......பசங்க பின்றாங்க...

ஹீரோ பேரு அனில்குமார் (26) ஆந்திர மாநிலம்...

ஹீரோயின் பேரு ராஜ்லிண்டர்கவுர் (23) பஞ்சாப்...


கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஹீரோ வேலையை ராஜினாமா செய்து விட்டு பங்குகள் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் ஹீரோயின் தனது மாமாவுடன் வசித்து வந்தார். பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஹுரோயின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாரங்க. ஹுரோயினிக்கு தந்தை இல்லை தாய் பஞ்சாபில் வசித்து வந்தார்.

ஹீரோவுக்கும், ஹுரோயினுக்கும் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த ஹுரோயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலை கைவிட இருவரும் மறுத்து விட்டனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஹுரோயினை அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அங்கு சென்றபிறகும் இருவரும் இன்டர்நெட் மூலம் காதலை தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஹுரோயினுக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஹுரோயின் தான் இன்னமும் ஹுரோவை காதலிப்பது தெரிந்தால் இந்தியாவுக்கு வரமுடியாது என அறிந்தார். இதனால் ஹுரோவை மறந்து விட்டதாகவும், யாரையும் திருமணம் செய்ய முடியும் எனவும் உறவினர்களிடம் கூறினார்.

இதை நம்பிய அவர்கள் ஹுரோயினை இந்தியா வர அனுமதித்தனர். நேற்று நள்ளிரவு வரும் விமானத்தில் சென்னை வந்தார். அவரை வரவேற்க அவரது மாமா, அம்மா இருவரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் ஹுரோயின் தான் வரும் தகவலை ஏற்கனவே ஹுரோவுக்கு தெரிவித்திருந்தார். விமான நிலையத்தில் முதலில் ஹுரோவை பார்த்த ஹுரோயின் அவருடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

வெளியே ஆட்டோவில் இருவரும் ஏறுவதை கண்ட ஹுரோயினியின் மாமா தன் பெண்ணை கடத்துவதாக கூறி கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்த ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் ஹுரோவின் ஆட்டோவை விரட்டிப் பிடித்து ஹுரோவை அடித்து உதைத்தனர். அவர்களை தடுத்த ஹுரோயின், ஹுரோ தன்னுடைய கணவர் எனவும், அவரை பிடிக்காத தன் குடும்பத்தினர் கடத்தியதாக பொய் கூறுவதாகவும் கூறினார். ஹுரோயினியின் தாய் தன்னுடைய மகளுக்கு மனநிலை சரியில்லை எனவும் ஹுரோ, ஹுரோயினியை கடத்த முயற்சி செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருதரப்பிடமும் இன்று காலைவரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஹுரோயினி தனது குடும்பத்தினருடன் செல்ல மறுத்துவிட்டார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் ஹுரோயினியின் அம்மாவிற்கு அறிவுரை வழங்கினர்.

அதை மறுத்த அவர் திருமணத்தில் விருப்பம் இல்லையெனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் ஹுரோயினியை ஹுரோவுடன் அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவு விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்களே காலையில பார்த்த இந்த காதல் செய்தியை படமாக எடுத்தால் யாரை ஹுரோ, ஹுரோயினாக போடலாம்????


நன்றி ; தமிழ்முரசு

Tuesday, January 16, 2007

தகப்பன்சாமி...படம்


பாறைப்பட்டியில் இருந்து தொடங்கி ராஜஸ்தான் சென்று மறுபடியும் பாறைப்பட்டியிலேயே முடியுது படம். மழைன்னா கருப்பா சிவப்பான்னு கேட்குற வானம் பார்த்த ஊர் பாறைப்பட்டி. கூத்துக்கட்டி பிழைப்பவர் பிரஷாந்த் (கதிர்) அதில் வரும் பணத்தை வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உதவுகிறார். குடிக்க கூட நீர் இல்லாத அந்த கிராமத்தை விட்டு பல குடும்பங்கள் பக்கத்து கிராமங்களுக்கு செல்கின்றனார். இந்த நிலையில் ஊர் மக்கள் அனைவரையும் சேர்த்து கிணறு வெட்ட முயற்சி செய்கிறார். கிணறு வெட்டுபவரின் மகள் பூஜா (மறிக்கொழுந்து). கிணறு வெட்ட வெட்ட வெறும் கள்ளும், மண்னும்தான் வருகிறது. திடீரென்று ஏற்படும் விபத்தில் மறிக்கொழுந்துவின் தந்தை (கிணறு வெட்டுபவர்) இறந்து விடுகிறார் அதனால் கிணறு வெட்டும் முயற்ச்சியும் நின்றுபோகிறது.

ஊர் மக்கள் அனைவரும் பிழைப்புகாக ராஜஸ்தான் போகிறார்கள். அங்கு அவர்கள் அனைவரும் கொத்தடிமையாக்கப்படுகிறார்கள். மொழி புரியாத ஊர், பலத்த பாதுகப்புகள் நிறைந்த பகுதி, குழந்தைக்கு கூட பால் தர மறுக்கின்ற காவலர்கள் என்று அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட இடத்தை விட்டு ஊர் மக்கள் அனைவரையும் மீண்டும் தன் சொந்த ஊருக்கே கூட்டி செல்கிறார் என்பதுதான் தகப்பன் சாமியின் கதை.


பிரஷாந்த் ஒரு பொறுப்புள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். முழுநேரமும் காதலியின் காதலில் விழுந்து விடமால் கிராமத்து முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார், அந்தவகையில் இந்த படம் அவருக்கு வித்தியாசமான படம் தான். நடிப்பு, சண்டை மற்றும் பாடல்கள் காட்சிகளில் வழக்கம் போல் நன்றாகவே செய்த்திருக்கிறார்.

வறண்டகிராமத்தையும், வறண்டு போன பாலைவனத்தையும் அப்படியே நம் கண்களுக்கு முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். நம் முகத்திலும் வியர்வை துளிகள் எட்டிபார்க்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் பாடல் காட்சி கிராமத்து மக்களுக்கு உண்மையிலேயே விருந்து.



ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துயிருக்கிறது. சில பாடல்கள் படத்தின் காட்சிகளை விளக்குகின்றது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடலின் வரிகளை சிதைக்காத இசை கருவிகளும், குரல்களும் தந்தற்கு ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாரட்டுக்கள்.

கதை, திரைகதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்தையுத் செய்திருக்கிறார்
ஷிவ ஷண்முகன். பல இடங்களில் வசனங்களும், பாடல் வரிகளும் படத்தின் சூழ்நிலையை விளக்குமாறு செய்திருக்கிறார். சொந்த நாட்டிலேயே கொத்தடிமை வாழ்க்கையின் கொடுமைகளை காட்சிகளை காணும் போது இதயம் கனக்கிறது.


பாலைவனத்தில் ஒட்டக பந்தயத்தில் ஒட்டகத்தை வேகமாக ஒடவைக்க குழந்தையின் அழுகையை பயன்படுத்துவது. அதற்காக அந்த குழந்தையை சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். வறண்ட கிராமத்தில் காட்டிய கதையின் வேகம் பாலைவனத்தில் இல்லை என்று தோன்றவைக்கிறது. பணத்தைவிட மனிதனும், மண்ணும் தான் முக்கியம் என்று கூறியிருக்கிற ஷிவ ஷண்முகத்தை உண்மையிலேயே பாரட்ட வேண்டும்.

வறண்ட பூமியும், கொடுமைகளும் நிறைந்த மக்களைப் பற்றிய சினிமா என்பாதால் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து இது ஒரு மாறுபட்ட படம் தான். மசால கலவைகள் அற்ற படம் என்பதால் வசூல் பட்டியலில் இடம் பிடிக்க முடியாதப் படம்.



இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார் இதனால் கூட இந்த படம் ஒரு மறுபட்ட படம் என்று கூறலாம்.

Sunday, January 07, 2007

3D-படம்


புது வருஷம் பொறந்து இன்னை யோட எட்டு நாளாச்சே
பதிவு ஏதும் போடலன்னா மக்கள் நம்மல மறந்துட போறாங்கன்னு ஒரு நல்ல கருத்துள்ள பதிவா போடலாமுன்னு யோசிச்சா வெறும் காத்து......தாங்க......வருது.

சரியின்னு மனச தேத்திக்கிட்டு நம்ம பாசக்கார பைய அனுப்பினத
உங்களுக்கு பதிவா போட்டுருக்கேன்.

இந்த 2டி படம், 3டி படம் எல்லாம் திரையில் பார்த்திருப்பிங்க.

அதை கொஞ்சம் தரையிலும் பருங்க.


இவரு தான் படம் வரைய பேறவரு......ஏரியா நல்லயிருக்கான்னு பார்க்குறரு..


ஆராம்பிச்சிட்டாரு....



பொறுமையா இருங்க மக்களே படம் காட்டுவாறு..


ஆஹா ....பூனை...


என்னத்தையோ கலக்குறாரு.... (இந்த மாதிரி சரக்கை பார்த்ததில்லியே)


கலர் அடிக்குறாரு....


பூனைக்கு பேரு வைக்குறாருப்பா....


இறுதிக்கட்ட பணி...


பாரு... பாரு... நல்ல பாரு.... 3டி படம் பாரு


இவரோட மற்ற தரை வண்ணங்கள்....coca cola வையே கவுத்திட்டாரு...



வீரன்டா......


இது என்னதுன்னு தெரியல மக்க...


ஒன்னு அவரு......இன்னென்னு அவரு மாதிரி...


கலக்கிட்டாறு...


ஆஹா....தலையே சுத்துதடா....சாமி


சின்ன "டைடானிக்"...

அடேய் வெள்ளகார துரை...
இந்த மாதிரி தான் ஏங்க ஊருலயும் சாமி படமெல்லாம் போடு வாங்க. என்ன...நீ....போட்டோ எல்லாம் எடுத்து கலக்குற
எங்காளுங்க வயித்து பசிக்கு படம் போட்டு கலங்குறங்க.

Sunday, December 31, 2006

என் இனிய பிளாக் மக்களே...


இரவு நேரம்..

மிதமான குளிர்காற்று..

கையில் சூட சூட தேனீர்..

இளையராஜவின் இசை..

யாரும் இல்லா தனிமை...


உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு நானும் இந்த புதுவருடத்தை வரவேற்க போகிறேன். பிறக்க போகும் அந்த புதுக் குழந்தையை வரவேற்பதா இல்லை என் கடமைகள் முடிந்த்து என்று போகும் இந்த முதிர்ந்த தாய்யை பிரிவதா..குழப்பங்களில் கரைகிறது என் நேரங்கள்.

2006ல்
எத்தனை விதமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
சந்தோஷகளையும், பிரச்சனைகளையும் நினைத்து காலங்கள் கடக்கின்றது.
பிரச்சனைகள் எனக்கு பல அனுபவங்களை கற்றுதந்தது. சந்தோஷங்கள் பலவற்றை எனக்கு அறிமுகம் செய்து. அப்படி கிடைத்த அறிமுகம் தான் தமிழ் வலைபதிவு நண்பர்கள்.

எத்தனை அருமையான நண்பர்கள்!

முகம் தெரியாமல் உற்சாகம் கொடுக்கும் நண்பர்கள்!!

எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியவுடன் நான் அனுகியது
எண்ணங்களை எழுதிகிறேன் திரு. மா. சிவகுமார் அவர்களை தான். எனக்கு மிகுந்த அக்கரையுடனும், கனிவுடனும் வழிகாட்டினர். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகரிகமாகவும், நகைச்சுவையுடனும் எனக்கு உற்சாகத்தை அளித்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் நன்றிகள். இது போல வருகிற வருடமும் எனக்கு உற்சாகம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மனம் புண்பாடும் மாதிரி எங்கவாது எழுதியிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

Wednesday, December 27, 2006

ரஜினி...கமல்.... நான்


கமல் மொட்டையுடன்


ரஜினி மொட்டையுடன்


கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோவிலுக்கு போலம்ன்னு முடிவு செய்து சொன்றோம்.

கோவில்ல இரண்டு பேர் பேசிகிட்டங்க

"சிவாஜி" படத்துல தலைவர் (ரஜினி) மொட்டையாம்டா...பேட்டோ பார்த்தேன் கலக்கலயிருக்கு....தலைவர் தலை சும்மா வழு வழுன்னு இருக்கு

அட கமல் கூடதான் மொட்டையாம்டா....

அப்படியா....

ஆனா எனக்கு அந்த தயாரிப்பாளர் மொட்டை தலை தான் ஞாபகத்தும் வந்துச்சி கூடவே இருந்து இந்த மொட்டை விஷயங்களை கேட்டு எனக்கு போட்ட மொட்டை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சி.

"அது ஓரு மொட்டைக்காலம்"ன்னு படம் கூட எடுக்கலாம்....அப்படி ஒரு வழி வழின்னு வழிச்சுட்டங்க...

ஆடி மாசம் வந்த எல்லத்துக்கும் மாரியம்மன் கோயில்ல கூழ்வுத்துறது தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா எனக்கு மொட்டை தல தான் ஞாபகத்துக்கு வரும். வருஷம் தவறாம "திருத்தணி" முருகன் கோவிலுக்கு போவோம். ஆடி கிருத்திகை காலையில என்னைய தேடி ஒரு கூட்டமே அலையும்.
எங்க இருந்தலும் கண்டுபுடிச்சி அப்படியே நாம்மல தூக்கி வந்து அம்மா முன்னாடி நிறுத்துவனுங்க.

காதுல விழாத மாதிரி...நல்ல தூங்குற மாதிரி நடிக்கிறது..

அம்மா: டேய்ய்ய்ய்...எழுந்துற.....நடிச்சது போதும்....மொட்டை அடிக்க போகணும்

அம்மான்ன சும்மவா கரைட்டா கண்டுப்புடுச்சிரும்...
சரி ஆரம்பிச்சுட்டிங்க இனி நிறுத்த முடியாது ஆரம்பிங்கடன்னு கண்ணமுழிச்சி பார்த்தா

வாட மகனேன்னு அப்பா ரொடியா நிற்பார்...

கோவிலுக்கு கீழ தான் மொட்டை அடிக்கிற இடம்யிருக்கு. கீவ்வுல நின்னு டிக்கெட் எல்லாம் வாங்கி உள்ளே போன ஓரு பெரிய கூட்டமோ நிக்கும்
ஏன் தலைய மொட்டை அடிக்கிறதுக்கு. அதுல ஓரு வல்லவனுக்கு அதிஷ்டம் அடிக்கும். அந்த வல்லவர் அவரேட இடத்துக்கு கூட்டிட்டு போவர்.
அங்க செங்கல்லு, இல்லனா ஒரு கருங்கல்லு, அப்புறம் ஒரு கின்னத்துல தண்ணி, கிழிஞ்சு போன லப்பர் டையர், ஒரு கத்தி, படிகாரம் இதுவெல்லாம் தான் அவரோட ஆயுதங்கள்.

அப்பா அம்மா சொன்னது மாதிரி கரைட்ட சட்டையை கழட்டிடுவரு அப்ப அடிக்கிற குளிருல வாய் அடிக்கும் பருங்க டைப்பு ஜயர்ரு.. லேயரு... எல்லாம் என்கிட்ட பிச்சைவாங்கனும்.

அப்பா.... வலிக்கம வழிக்க செல்லுப்பா...

எல்லாம் அவரு பத்துப்பருடன்னு.....முருகனை கட்டுவரு.

இந்த நேரத்துல அருதலான ஒரே விஷயம் அந்த கின்னத்துல இருக்க தண்ணி தான்
நல்ல சூடுடயிருக்கும். அந்த தண்ணியை எடுத்து தலையில கொஞ்சம் தெளிப்பரு அந்த வல்லவர். குளிருக்கு சும்மா ஜுவ்வ்வ்ன்னு இருக்கும். அந்த தண்ணி அப்படியோ எல்லா முடிகளையும் கடந்து நெத்தியில வரும் அங்கயிருந்து கண்ணுக்கு தாவும் கடைசியில நம்ம கையில வந்து விழும் பருங்க. அப்படியோ என்னமோ எல்லா முடியும் "அய்யோ உன்னவிட்டு போறனேன்னு" கண்ணிர் வடிக்கிற மாதிரியிருக்கும்.

உச்சஞ்தலையில தான் முதா வழி அப்படியே நேரா வழிச்சி வந்து மடிமேல விழும் முடியெல்லாம். நான் அல்லும் பகலுமாய் வளர்த்த ஆசை முடியை 50 பைசா பிளேட வைச்சி ஐந்தோ நிமிடத்துல எல்லத்தையும் வழிச்சுடிவங்க இருக்கிற கொஞ்சத்தையும் அப்பா அந்த வல்லவனிடத்துல செல்லி வழிச்சுடுவரு. இதுல அந்த வல்லவனுக்கு மொட்டைக்கு மேலா கூடுதல காசு வேற.

கடைசியில முருகா இது உனக்கோ சரியான்னு கோட்ட பேனா அவரும் மொட்டையா போட்டு "யாம் இருக்க பயம் ஏன்"ன்னு சொல்லுவரு. இப்படி சொல்லி சொல்லியே ஒவ்வொரு வருஷம தொடர்ந்து பத்தவது படிக்கிற வரைக்கும் மொட்டை போட்டேன் முருகனுக்கு.

கண்ணாடியை பார்த்தல் "ONIDA" விளம்பரத்துல வர அந்த மொட்டை மாதிரியிருக்கும்.

சரிடான்னு schoolலுக்கு போன அங்க வாத்தியாரு "ஏன்டா முருகனுக்கு முடிய மட்டும் தான் கொடுத்திய இல்ல மூளையும் சோர்த்து கொடுத்திட்டியான்னு' கேட்டு நாம்பல கிழிச்சிடுவரு.

ம்ம்ம்ம்.....நடிகன் மொட்டை போட்ட ஊருக்கே கொண்டாட்டம் அதுவோ ரசிகன் போட்ட திண்டாட்டம் இது தண்டா உலகம்..

Saturday, December 16, 2006

ஆண்"பாவம்"- இது ஓரு சின்னகதை

இந்த படத்தை நல்ல பாருங்க என்ன புரியுது? வாழ்க்கையோட முக்கியமான விஷயம் ஓன்னுயிருக்கு










Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................


இது தான் வாழ்க புரியுத.....

Saturday, December 09, 2006

முக்கிய செய்தி

எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மெயில் வந்தது, அதை பார்த்ததும் அதிர்ச்சியாகிடுச்சி. இதோ உங்களுக்கும்

அமொரிக்க அதிபர் புஷ்க்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதோ அந்த அறிய புகைப்படம்

--

----

------

---------

-------------

---------

------

----

--


எனக்கொரு மகன் பிறப்பன் அவன் என்னை போலவே இருப்பான்.

Monday, December 04, 2006

நம்ம ஊரு போல வருமா.....


இது ஏதோ மும்பையோ, சென்னையோ இல்ல

இந்த துபாய் இல்ல துபாய்யீ அது தான் இது, ஏதோ 24 மணி நேரமும் மழை பெய்யவில்லை சில மணி நேரம் தான் பெய்தது அதுக்கோ இப்படி தண்ணி தோங்குது. இன்னும் தமிழ்நாட்டுல பெய்ஞ்ச மாதிரி பெய்ஞ்சது அவ்வளவு தான் இங்க இருக்குற அரபிகள் எல்லாம் நம்ம ஊருக்கு வேலைக்கு வரவோண்டியது தான்

Sharjahவுல மழைய பார்த்த உடனே powerயை புடுங்கிட்டங்க, power இல்லன்னா தண்ணியும் இல்ல...ரொம்பா கஷ்டம்

இது நம்ம ஊரு மக்கள்

பொறுமை..
நாட்டின் குடிமகனின் மகன்..

அறிமுகம்

பெயர் - கு. கோபிநாத்

பிறந்தது - சென்னை

பணிபுரிவது - Sharjah, U.A.E யில்

வாழ்க்கை எப்போதும் எதவாது சொல்லி கொடுத்து கொண்டேயிருகிறது.,
கடந்த 2 மாதமாக தமிழ் வலைபதிவுகளில் வலம் வருகிறேன். எத்தனை அருமையான தமிழ் நண்பர்கள் அருமையாக பதிவுகளை பதிக்கின்றனர். கவிதைகள், கதைகள், விமர்சனங்கள் இன்னும் பல....ஓவ்வொரு பதிவுகளும் அருமையாக பதிவுகள். இவை எல்லாம் பர்க்கும் போது நான் இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.

வாழ்க்கை என்னும் நாடகத்தில் எல்லோரும் ஓரு நடிகன் தான். அதில் நான் ஓரு சாதராண ரசிகன் வேஷம் போடலமன்னு இருக்கேன். உங்க எல்லோரோட பதிவுகளையும் ரசித்துக் கொண்டு நானும் சில பதிவுகள் போடலமன்னு இருக்கேன்.

இந்த ரசிகனையும் முடிந்தால் ரசியுங்கள்.

உங்கள் உற்சாகத்துடன்
கு. கோபிநாத்

குறிப்பு ; தமிழ் டைப்பிங் புதுசு, பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.