Tuesday, April 17, 2007

கிடேசன் பார்க்கில் ராயல் ராமுவுக்கு அல்வா

கிடேசன் பார்க்கே நிரம்பி வழிகிறது அந்த அளவுக்கு கூட்டம். ஏண்டா....அல்வா தானே கொடுக்குறோமுன்னு சொன்னோம் சாப்பாடா போடுறோமுன்னு சொன்னோம்.....சாப்பிடுற தட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திருக்கானுங்க. இவனுங்களை எல்லாம் என்ன செய்யுறது. சரி விடுன்னு சொல்லிட்டு மைக்குல

"எல்லாம் கீவுல ஒழுங்கா வரணும். எல்லாருக்கும் அல்வா நிச்சையம் உண்டு என்று மைக்குல நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்."...........நேரம் வேற ஆயிக்கிட்டே இருக்கு இன்னும் கிடேசன் பார்க்கின் தலைவரை காணோம். இந்த பொருளாளர் வேற இன்னும் வரவில்லை.....இருக்குற கூட்டத்தை பார்த்தா இந்த அல்வா பத்தாது போல இருக்கு....என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பொருளாளர் அபி அப்பா வந்துவிட்டார்.

நான்; ஏன் இவ்வளவு லேட்டு?

அபி அப்பா; கிளம்பும் போது ஒரு பஞ்சாயத்து அதை முடிச்சுவச்சுட்டு வரேன்."

நான்; இன்னைக்குமா......சரி அதை விடுங்க.....தலைவர் எங்க? "

அபி அப்பா; அவரு பாவனா நடித்த தீபாவளி (லி) படத்தை 50வது தடவையாக வலியுடன் பார்த்துக்கிட்டு இருந்தாறு (இதில் இருந்தே உங்களுக்கு தெரியும் தலைவர் யாருன்னு....வேற யாரு தம்பி தான்) அதான் கொஞ்சம் லேட்டா வரேன்னு சொன்னாரு.....இன்நேரத்துக்கு வந்துருக்கணுமே...சரி இரு ஒரு போனை போட்டு பார்க்குறேன்.

அபி அப்பா; ஹலோ....தல எங்க இருக்கு

த.தம்பி; ம்ம்ம்....கழுத்துக்கு மேல தான் இருக்கு.

அபி அப்பா; ம்ம்ம்....தெளிவாதான் இருக்கீங்க போல....சரி எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

த.தம்பி; எதிர்பாலின ஈர்ப்புனால ஈர்க்கப்பட்டு திசை தெரியாமல் நடு ரோட்டுல நிக்குறேன்.

அபி அப்பா; அட பதிவை பற்றி எல்லாம் அப்பறம் பேசிக்கிலாம் சீக்கிரம் வாப்பா...

நான்; சரி....இந்த துணை தலைவர் எங்க?

அபி அப்பா; இதோ வந்துக்கிட்டே இருக்காரே.....ஆமா எதுக்கு பின்னாடியே நடந்து வராரு?

நான்; இதுதான் பின்நவீனத்துவ நடை

து.த.அய்யனார்; என்னப்பா....ஆரம்பிச்சுடுலாமா? என்று உள்குத்தாக கேட்க

அபி அப்பா; ஓ....ஆரம்பிச்சுடலாமே....என்று உள்குத்தாய் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போதே த.தம்பி வந்துவிட்டார்.

த.தம்பி; எப்படி ஷார்ப்பா வந்தேன் பார்த்தியா......சரி ஆரம்பிச்சுடலாமா?

நான்; நீயுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு ....சரி சங்கத்துக்கு தகவல் கொடுத்தாச்சா?

அபி அப்பா; நான் நேத்தே சங்கத்து சிங்கங்கள் எல்லாத்துக்கிட்டையும் பேசிட்டேன். தேவ் வேற பதிவு போட்டு நேத்து எல்லாம் அங்கதான் கும்மி.

அய்யனார்; கோபி யாரோ சிக்சர் சிக்சர்ன்னு கத்துறாங்க.....யாருப்பா அது

அபி அப்பா; அட நம்ம பாஸ்டு பவுலர்......

பாஸ்டு பவுலர்; அபி அப்பா......குரங்கு ராதா எங்க?

அபி அப்பா; நானே அவன்க்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற...

நான்; சரி...தல இதுக்கு மேல வெயிட் பண்ணா நம்மளையும் அல்வாவா கின்டிடுவானுங்க சீக்கிரம் மேட்டரை சொல்லிட்டு அல்வாவை கொடுத்துட வேண்டியது தான்.


தலைவர் தம்பி ; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே... இன்று ஒரு அருமையான பொன் நாள்....என் அன்பு அண்ணன்.....பெங்களூர் நாயகன்..அபி அப்பா நானுன்னு கேட்க, தம்பி மைக்கை அபி அப்பாக்கிட்ட கொடுக்கறாரு...

அபி அப்பா; சங்கத்து சிங்கம்.......தங்கம்......கவிதை காதலன்.....எங்கள் அன்பு ன்னு ஆரம்பிக்க......அய்யனாரு நடுவுல கையை நீட்ட....இப்ப மைக் அய்யனார்க்கிட்ட போகுது

அய்யனார் ; என் பாசத்திற்குரிய தம்பி.....விடிய விடிய பல வளைபதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கும் கும்மி கிங்.....கடலை மன்னன்......தம்பி அட போதும் சீக்கிரம் பேரை சொல்லுப்பான்னு மைக்கை வாங்கி....

த.தம்பி; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே.....குறுக்கே அபி அப்பா விழுந்து வேண்டாம் தல நான் அழுதுடுவேன்னு ஒரு சிக்னல் கொடுக்கிறாரு


எங்கள் சிங்கம்

என் அண்ணன்

மூத்தவளைப்பதிவாளர்

சங்கத்து சிங்கம்

கவிதை காதலன்

கடலை மன்னன்

தமிழ்மணத்தின் ராயலாக இருக்கும் திரு. ராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் துபாய் கிடேசன் பார்க் மன்றத்தின் சார்பாக அல்வா கொடுக்கப்படும்.






வாயார அல்வாவை சாப்பிட்டு மனதார வாழ்த்து சொல்லி விட்டு போங்கள் என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் தலைவர். நான் நடுவுல "ஜயா நானும் இங்க தான் இருக்கேன்"னு சிக்கனல் கொடுக்க கடைசியா மைக் என்க்கிட்ட வந்தது.

என் அன்புக்கும், நட்புக்கும் உரிய அன்பு மாப்பி ராயல் ராமுவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மக்கா.....ஒரு முக்கியமான விஷயம் அல்வாவை சாப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதாது.

அபி அப்பா; ஆமாம்..... கை கழுவனும்.

நான்; இரு அண்ணாத்த........வருஷா வருஷம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா......சீக்கிரம் அவருக்கு ரங்கமணி சங்கத்துல சேரணுமுன்னு வாழ்த்திட்டு போங்க......புரியுதா.

Wednesday, April 11, 2007

அய்யனாருக்காக ஆறு அழகுகள்

முதல்ல எல்லாருக்கும் வணக்கம்..... அப்புறம் ஒரு பெரிய மாப்பு கேட்டுக்குறேன். ஆணிகளுக்கு நடுவில் அழகைப்பற்றி எழுதுன்னு நம்ம தமிழ்மண குலச்சாமி, கவிதை தென்றல்
திரு. அய்யனார் என்னையும் கூப்பிட்டுயிருக்காரு. இந்த தொடர் ஓட்டத்தை ஆரம்பித்த திரு. கொத்தனார் அவர்களுக்கு ஒரு நன்றி. எல்லாரும் அருமையாக, ரொம்ப அழகாக எழுதிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல நானும் ஏதோ என் மனசுக்கு தோன்றிய இந்த ஆறு அழகுகளைப்பற்றி எழுதியிருக்கேன் பாருங்க





பெண்கள்

அழக்குன்னு நினைச்சவுடனே மனதுக்குள் வந்தது பெண்கள் தான். எத்தனை பெண்கள் யாரை சொல்ல யாரைவிட. ஒவ்வொருத்தருக்கும் தனிதனி அழகு இருக்கு. என்னதான் பல பெண்களை பார்த்தாலும் பழகினாலும் கண்னை மூடி மனதுக்குள் நினைத்து பார்த்தால் என் நினைவுக்கு வரும் முதல் பெண் என் அம்மா தான். என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே. அதுக்கு அப்புறம் என் பள்ளிக்காலங்களிலும், கல்லூரியிலும், போகும் பாதையில் என்னை கடந்து செல்லும் பெண்கள் முதல், நெஞ்சம் மறப்பதில்லையில் வருவாங்களே தேவிகா, மற்றும் மாதுரி தீட்சித் போன்ற சில நடிகைகளும் அழகு தான்.

நிகழ்வு

சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சி நாம் எதிர்பாராதாக இருக்கும் அப்படி ஒரு நிகழ்சி தான் கடந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு போனபோது நிகழ்ந்தது. வீட்டில் யார்க்கிட்டையும் நான் வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல ஒரு திடிர் சர்ப்ரைசாக இருக்கட்டுமேன்னு கிளம்பிட்டேன். வீட்டு முன்னாடி வந்திறங்கும் போது விடிகாலை ரெண்டு மணி. கதவுக்கிட்ட போனதும் ஒரு சின்ன தயக்கம் "ச்ச எல்லாரும் நல்லா தூங்கிக்கிட்டு இருப்பாங்க இப்ப காலிங் பெல் அடிச்சா எவ்வளவு இடைஞ்சலா இருக்குமுன்னு". வேற வழி தெரியில அடிச்சிட்டேன். நான் மெயின் கேட்டுல இருக்கேன் அங்கயிருந்து பார்த்தா எங்க வீட்டின் கதவு நன்றாக தெரியும். அப்பன்னு பார்த்து மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை "அம்மா நீ முதல்ல எழுந்துவாம்மான்னு". கதவு திறக்குது என் மனசுக்குள்ள ஒரு படப்படப்பு, தூக்க கலக்கத்துல, விளக்கு வெளிச்சத்துல கண் கூசி என்னை பார்க்குறாள் அம்மா. அம்மான்னு ஒரே ஒரு குரல் தான் கொடுத்தேன். ஹையோ.....அந்த தூக்க கலக்குத்துலையும் ஒடிவறா பாருங்க அப்படி வறா...வந்தவ சும்மா இருந்தாலா.....டேய்ன்னு அப்படியே என்னை கட்டிபுடிச்சு என் முகம் முழுக்க முத்த மழைதான். அப்ப நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பரிசு

பரிசுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் யாராவது ஏதவாது கொடுத்தாக்கூட கொஞ்சம் யோசிச்சிதான் வாங்குவேன். ஆனா வருடம் தவறாமல் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒருத்தர்க்கிட்ட இருந்து கண்டிப்பா ஒரு பரிசு மட்டும் வந்துக்கிட்டே இருக்கு. அது நான் எங்க இருந்தாலும் சரி. எப்படியாவது அந்த பரிசு என் பிறந்த நாள் அன்னைக்கு கண்டிப்பா என்க்கிட்ட இருக்கும். அந்த பரிசை கொடுப்பது என் மாம்ஸ் சிவா அந்த பரிசு cadbury's Dairy Milk.

குறும்பு

நிறைய இருக்கு அதுவும் கல்லூரி படிக்கும் போது நிறைய......டக்குன்னு மனசுக்கு வந்தது என் கல்லூரியின் முதல் ஆண்டு கெனால் பஸ்டாப்பு.
எங்க திரும்பி பார்த்தலும் பெண்கள்தான் சீனியர் பெண்களும் சக வருட பெண்கள்ன்னு இந்த காதல் தேசம் படத்துல வரமாதிரி வழி எல்லாம் பெண்கள் தான். எங்களையும் அரியாமல் பக்கத்தில் இருந்த குட்டி சுவத்து மேல ஏரி உட்காந்து கண்குளிர எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். திடிரென்று தலையில பட்டுன்னு ஒரு அடி.....எவண்டான்னு பார்த்தா எங்க சீனியர்

"டேய் வீட்டுக்கு போகாம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.....உங்க பஸ்டாப்பு அங்க எதிர்தாப்புல தானே இருக்கு"

என் நண்பன் ஒருவன் ; இவனுக்கு பஸ்டாப்பு இதான் சார் இவனை ஏத்திட்டு நாங்க அங்கே போவோம் சார்.

இன்னொரு சீனியர் ; டேய் இங்க வா......உன் பேரு என்னடா?

நான் ; கோபிநாத் சார்

சீ ; இன்னாது கோபிநாத்தா.....உனக்கு இன்ஷியலெல்லாம் இல்லையா.....இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா

நான் ; ஜி.கோபிநாத் சார்

சீ ; சரி....இப்ப நீ என்ன பண்ற இந்த கோழியை நான் கீழவுடுவேனாம் அதை போய் புடிச்சிக்கிட்டு வரணும் என்ன

நான் ; சரிங்க சார்

சீ ; ம்....போ

நான் ; கோழி எங்க சார்......

சீ ; ஒஹா......நிஜ கோழி இருந்தாதான் சாரு பிடிப்பிங்களா?

நான் ; பின்ன எப்படி சார் பிடிக்கிறது

சீ ; டேய் அடிச்சேன் வச்சுக்க காது கெய்ன்னும்...கோழியை விட்டாச்சி போய் புடிடான்னா......சும்மா பேசிக்கிட்டு இருக்க.....போடா.

அங்க கோழியும் இல்லை ஒன்னும் இல்லை......ஒரு கோழி இருக்குறது மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு அதை பிடிக்கணும். சரின்னு நானும் அப்படி கோழி பிடிக்கிற மாதிரியே ஆக்டு கொடுத்தேன். அத்தோட விட்டானுங்களா இல்லையே....கூடவே சவுண்டும் கொடுக்குணுமாம். கிழிஞ்சது டா இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு பொ....பொ...பொ...ன்னு சவுண்டு விட்டுக்கிட்டு கோழியை பிடிச்சேன். அந்த பஸ்டாப்பே மொத்தமா நான் கோழி பிடிக்கிறதை பார்த்து சிரிக்குது. இன்னிக்கும் அந்த பஸ் டாப்பை கடக்கும் போது அந்த அழகான கல்லூரி நினைவுகள் வரும்.

புன்னகை

என்னதான் அழகான வார்த்தைகள் இருந்தாலும் அது எல்லாம் எல்லா நேரங்களிலும் நமக்கு கை கொடுப்பதில்லை. ஆனா இந்த புன்னகை இருக்கு பாருங்க, பல வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையும், அழகும் அதுக்கு இருக்கு. பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் குழந்தைகள் எல்லாம் சிரிக்கும் பாருங்க அவ்வளவு அழகா இருக்கும். நாம அடிக்கிறதும் ஜோக்குன்னு நினைச்சுக்கிட்டு முகம் மலர சிரிப்பாங்க பாருங்க நண்பர்கள் அவ்வளவு அழகா இருக்கும். 80 வயசு கடந்தும் நான் கேட்கும் குறும்பு கேள்விகளுக்கும், கிண்டலுக்கும் எந்த விதமான முகசுலிப்பும் இன்றி தன் உடல் மொத்தமும் குலுங்கி குலுங்கி சிரிப்பாங்க பாருங்க என் பாட்டி அந்த புன்னகை இன்னும் அழகாக இருக்கும். இதே தமிழ்மணத்து நண்பர்கள் எந்த ஒரு கடினாமான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மக்கூட சாட் பண்ணும் போது ஒரு சிரிப்பான் போடுவாங்க பாருங்க அதுக்கூட அழகுதான்.

இடம்

நிறைய குடித்தனங்கள் இருந்த வீடு. அதில ஒரு பகுதியில சின்னதா ஒரு ரூம், சமையல் செய்வதற்கு கொஞ்சம் இடம், பொருட்கள் எல்லாம் வைப்பதற்கு சின்ன இடம் இவ்வளவு தான். ஓட்டு வீடு, எலி தொல்லை வேற , மழை பெய்தால் ஒழுகும். கால் நீட்டி படுப்பதற்கு கூட வசதி இல்லாத இடம். ஒண்டி குடித்தனமுன்னு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி. மேல இருக்குற கூறைக்கு முட்டுக் கொடுத்து ஒரு மராத்தூண் இருக்கும் அது மேல ஏறி சறிக்கி விளையாடுவேன். பல சுப நிகழ்ச்சிகள் நடந்த இடம் அது. நான் நேரில் கண்ட முதல் மரணமும் அந்த வீட்டில் தான். அந்த வீட்டில் இருக்கும் போது தான் நான் பிறந்தேனாம். இப்பவும் என் கனவுகளில் அடிக்கடி அந்த வீடு வரும். கிட்டதட்ட என் பாட்டி அந்த வீட்டில் நாற்பது வருஷம் இருந்தாங்களாம். இன்று பல வசதிகள் கூடிய வேற வீட்டில் இருக்கிறோம் ஏனோ எனக்கு அந்த பழைய வீடு தான் அழகுன்னு தோணுது.

பதிவு ரொம்ப பெரிசா ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். என்ன அய்யனார் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. இந்த ஓட்டத்தை அடுத்த மூணு பேருக்கிட்ட கொடுக்கானுமாம். இது நமக்கு ரொம்ப நல்லா வருமே.

பாடலாசிரியர் திரு. ஜி

தமிழ்மணத்தில் எப்போதும் first வரும் மை ஃபிரண்ட்

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்மணத்தை கலக்கும்
திரு. கானா பிரபா

Saturday, April 07, 2007

படம் பார்க்கலாம் வாங்க

இயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent butterfly - தெளிந்த பட்டாம்பூச்சிகள்








செயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent Laptop - தெளிந்த மடிப்பு கனிணி




















கைநிறைய ஆணிதான் இருக்கு....அதான் இப்படி படம் கட்டுறேன்.
(இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன)