Thursday, June 02, 2011

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

சமீபத்தில் தல வந்தியத்தேவன் அவர்கள் பதிவில் இசை தெய்வத்தை பற்றி ஒரு பக்தன் இப்படி கூறிப்பிட்டுயிருக்கிறார்
"கடவுள் மனிதர்களை படைத்தான்,
மனிதன் இசையைப் படைத்தான்,
இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)"
இன்றும், என்றும், இசை என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கும் வரையில் இதுபோல் எங்கேனும் ஒரு பக்தன் இசை தெய்வத்தை பற்றி சொல்லிக்கொண்டு தான் இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 68வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும்வணங்குகிறேன்.!

இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட அவரோட குரலில் பாடிய சில அருமையான பாடல்கள்;)

ஜனனி ஜனனி
ஆலோலம் பாடி
பூம்பாறையில் பொட்டு வச்ச
மெட்டி ஒலி காற்றோடு

தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு
குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி

ஸ்பெசல் ;- தெண்பாண்டி சீமையிலே
சரியாக 3.30 முதல் 4.50 வரை எந்தவித இசை ஒலியும் இல்லமால் தெய்வத்தின் குரல் மட்டுமே ஒலிக்கும்.