மாலை 4.30 மணிக்கு சந்திப்பு என்று அபி அப்பா பதிவு எல்லாம் போட்டு அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்தவுடன் சித்த"ஆப்பு" குசும்பன் இடம் இருந்து போன் "கோபி நீ கண்டிப்பா வரனும்"...."என்ன சீத்த"ஆப்பு" இப்படி கேட்டுபுட்டிங்க நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பனோ"...ன்னு ஒரு பிட்டை போட்டு வச்சேன். தனியாக சென்று கூட்டத்தில் மாட்டி கொள்லாமல் இருக்க பல கூட்டங்களை கண்ட எங்கள் கவிமட தலைவர் பெனாத்தலாரோடு இணைத்து கொண்டு சந்திப்புக்கு கிளம்பினோம்.பார்க்கை அடைந்தவுடன் எனக்கு அதிர்ச்சி
"சார்... "
"என்னப்பா.."
"நாம சரியா 4.30 மணிக்கு வந்துட்டேம் சார்"
"பெனாத்தலார்னா பஞ்சுவலிட்டின்னு உனக்கு தெரியாதா!!!" ன்னு அவரும் ஒரு பிட்டை போட்டு பார்க்கையே அதிரவைத்தார்
பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
(நோட் பண்ணுங்கடா டேய் இதெல்லாம் நோட் பண்ணுங்க)
அவருடன் நட்சத்திரம் அய்யனார், சித்த"ஆப்பு" குசும்பன், சென்ஷி, சிறுகதை புயல் தம்பி, லொடுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பெனாத்தலாரிடம் வழக்கம் போல ஆள்மாறாட்ட வேலைகள் நடந்தன. பின்பு 2 நிமிடம் கழித்து உண்மை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. வலைபதிவர் சந்திப்புன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு மறுபடியும் ஒரு பிட்டை போட்டார்.
சிறிது நேரத்திரத்திற்கு பிறகு சந்திப்பின் ஸ்பன்சர் சூடான் புலி சூடாக வராமல் கூல்லாக வந்து சேர்ந்தார். அமீரகத்தின் பெண்பதிவர் சகோதரி ஜெசிலா அவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட லியோ சுரேஷ், மகேந்திரன் பெ மற்றும் மின்னது மின்னல் மிஸ்சிங். அமீரகத்தின் மற்றொரு பதிவர் சுல்தானும் அனானி தியாகுவும் வந்து சேர்ந்தனர்.
பின்பு வழக்கம் போல் கும்மி தேவையா?....யார் அந்த அனானி? கவிதையின் அடுத்த கட்டம் என்ன? அபி அப்பா ஏன் பதிவுகளை படிப்பதில்லை? அபி அப்பா சீரியசாக எப்போ எழுதுவார் (சிரிக்காதிங்க...உண்மையிலே கேட்டோம்) இப்ப யாருக்கும் யாருக்கும் சண்டை? நீ யார் பக்கம்? பக்கத்துல எங்க நல்ல சட்னி வடை கிடைக்கும்? புலி கொண்டு வந்த பைக்குள்ள என்ன இருக்கு? இப்படி பல விஷயங்கள் விவாதிக்க பட்டு கலைத்து போயி டீ சாப்பிட முடிவு செய்தோம்.
சுட சுட டீ சாப்பிட்டு விட்டு அய்யனாரும் பெனாத்தலாரும் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் பற்றி பேசி கொண்டுயிருந்தார். பெனாத்தலார் பல வருடங்களுக்கு முன்பு படித்த அசோகமித்திரனின் கதையை வரிகளை கூட மறக்கமால் சொல்லிக் கொண்டுயிருந்தார்.
அய்யனாரும் சிறுகதை, நாவல், கவிதை என்று ஒரு எரியாவையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி கொண்டுயிருந்தார்.
சென்ஷி பதிவையும் அதற்கு போட்ட பின்னூட்டத்தையும் ஞாபகத்தில் வைத்து கொண்டு பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்திலிருந்து வல்லியம்மா கூறிய வாழ்த்தை அபி அப்பா மறக்காமல் பதிவு செய்தார். (பதிவர்கள் சார்பாக வல்லியம்மாவுக்கு நன்றிகள்) சந்திப்பின் போது மின்னலும், டெல்லியில் இருந்து முத்துலட்சுமி அக்காவும் போன் மூலமும் அனைவரிடமும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனார்.
பெனாத்தலார் கூடிய விரைவில் FLASH (Macromedia Flash) பற்றியை செய்திகளை வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுயிருக்கிறது என்று கூறினார் (கூடிய விரைவில் FLASH போட்டி ஒன்னு வரும்).
தம்பி சமிபத்தில் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருப்பதாக அனைத்து பதிவர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தினர்.
Web Page Design பற்றி சொல்லிக் கொடுக்க போவதாக குசும்பன் தெரிவித்தார்.
அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை முன்னிட்டு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைக்கு (ஆசிப் அண்ணாச்சியில்ல) ஒட்டல் சரவண பவனுக்கு சென்று வயிற்று பசியையும் முடித்து கொண்டோம்.
பின்பு சூடான் புலி அனைவருக்கும் நினைவு பரிசாக ஒரு சிங்கபொம்மையை பரிசாக வழங்கினார். பின்பு அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும் அபி அப்பாவுடன் புலி போகாதது மர்மமாகவே உள்ளது.
புலி கொடுத்த சிங்கபொம்மை
இந்த சந்திப்பின் மூலம் வருங்காலத்தின் ரெண்டு பெண் பதிவர்கள் கிடைத்தினர்....லொடுக்கு அவர்களின் குட்டி தேவதையும், சகோதரி ஜெசிலா அவர்களின் குட்டி தேவதையும் தான் வருங்கால பெண்பதிவர்கள். ஜெசிலாவின் மகள் கண்மணி டீச்சரையே கலாய்த்தவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. எங்கள் சந்திப்பை விட அந்த ரெண்டு குழந்தைகளின் நட்பு மிகவும் அழகான ஒன்று, அதனை பற்றியே ஒரு பதிவு போடலாம். கடைசி வரையில் அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.
வாரத்தின் விடுமுறை நாளை பல புதிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
சந்திப்பில் பங்கு பெற்றோர்
அபி அப்பா
பினாத்தால் சுரேஷ்
லொடுக்கு
ஜெசிலா
சுல்தான்
குசும்பன்
அய்யனார்
சென்ஷி
நாகை சிவா
கதிர்
அனானி நண்பர் தியாகு
இவர்களுடன் நான்.