Tuesday, November 13, 2007

அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....










இனி யாரைப்பற்றி எப்படி என்ன எழுதுவது என்ற யோசனையில் அபி அப்பா தன் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.


"அபி பாப்பாவுல ஆரம்பிச்சு தமிழ்மணத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க அத்தனை பேர பத்தியும் மொக்க போட்டாச்சு.. அதுவுமில்லாம தங்கியிருக்கற இடத்துல இருந்த பூங்காவுலேந்து தமிழ்மணம் பாக்காத அனானி வழியா ஆல் இன் ஆல் அழகுராஜா வரைக்கும் புராணம் கொடுத்தாச்சு. இன்னிக்கு பேசாம ரூம்ல தங்கியிருக்கற மூட்டப்பூச்சிய பத்தி எழுதிட வேண்டியதுதான்."


என்று தனக்குத்தானே பேசியபடியே மெத்தையின் மேல் ஓட முயன்ற மூட்டைப்பூச்சியை நசுக்கி கொன்றுவிட்டு இதுக்கும் சேர்த்து பதிவுல மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டார்.இந்த சமயத்தில் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அபி அப்பாவை தூக்கிச்செல்ல, "கொலை... கொலை என்று கதற ஆரம்பித்தார்.

முகமூடி அணிந்த ஒரு உருவம், "இந்த சமயத்துல தமிழ்ல இப்படி கத்தறது தப்பு. இதுக்கு நீங்க 'அய்யோ கடத்துறாங்க' அப்படின்னு கத்தலாம். இல்ல தூக்கிட்டு போறானுங்களேன்னு கத்தலாம். அதுவுமில்லேன்னா யாருக்கும் தெரியாம உங்களை தூக்கிட்டு போறதால இதை திருட்டுன்னு கூட சொல்லலாம். மனித திருட்டைப்பத்தி போஸ்னோலோவேக்கியா டைரக்டர் எடுத்த அந்த இருட்டு படத்துல இப்படி கூட நடந்தது. அப்ப அவன் என்ன சொல்லியிருப்பான்னு நான் இப்ப உணர்றேன். அன்னைக்கு எனக்கு அது உளறலா தெரிஞ்சதுக்கு காரணம் கண்டிப்பா மது மட்டும் இல்லைன்னு நான் சொல்றத கேட்டு எத்தன பேரு என்னை கெட்டவன்னு நினைப்பாங்கன்னு தெரியல... இருந்தாலும்...."

அபி அப்பா - "பேசறது சுத்தமா புரியல... அப்போ இது அய்யனார்தான்."

மற்றொரு உருவம், "ஹைய்யா...! அபி அப்பா உன்னை கண்டுபிடிச்சுட்டாரு... நீ அவுட்டு"

அபி அப்பா அதிர்ச்சியாகி, "அட ஆண்டவா! இது குசும்பனாச்சே... என்ன கொடும சரவணன் இது" அதற்குள் இடம் வந்துவிட, அபி அப்பாவை இறக்குகின்றனர் அய்யனாரும், குசும்பனும்.
அபி அப்பா அந்த இடத்தை ஏறிட்டு பார்க்க தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. இவருக்காக ஏற்கனவே அங்கு தருமி சார், தம்பி, கோபி, சென்ஷி, மின்னல், குட்டி பிசாசு, கண்மணி டீச்சர், டாக்டர் டெல்பின், மங்கை, மை பிரண்டு, காயத்ரி மற்றும் இம்சை அரசி...

அபி அப்பா - "அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே.."

குசும்பன் - "இல்லியே... உங்க கண்ண தொறந்து வச்சுதானே கொண்டு வந்தோம். இன்ஃபாக்ட் நாங்க முகமூடி போட்டுக்கிட்டு வந்ததால எனக்குத்தான் இப்ப லைட்டப் பாத்தா லைட்டா கண்ணு வலிக்குது"

கண்மணி டீச்சர் பெருமிதமாக, "சபாஷ் அய்யனார் & குசும்பா.... சொன்னா மாதிரியே கரெக்டா கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க"

அபி அப்பா, "கூட்டிக்கிட்டு வரல டீச்சர். தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க" மனதிற்குள், 'எல்லோரும் தனித்தனியா வந்தாலே நம்மளை போட்டு வாங்குவாங்க. இத்தன பேரும் இங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. அதுலயும் நம்மள தூக்கிட்டு வந்து... ம்ஹூம்.... இது கண்டிப்பா நம்ம நல்லதுக்கா தெரியல". அதற்குள் கண்மணி அக்கா வாழ்க என்று மைபிரண்டு கோஷம் எழுப்ப துவங்க, இந்த சமயத்தில் இதற்கு சேர்ந்து கோஷம் போடுவதா வேண்டாமா என்று இம்சை அரசியும், காயத்ரியும் குழம்பினர்.

இந்த கோஷம் கேட்டு சென்ஷி, கோபியிடமும் மின்னலிடமும் மங்கை அக்கா வாழ்க என்று கோஷம் போட சொல்லி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான்.

இந்த வம்பளப்பை கண்ட டெல்பின் மேடம், "நாம இங்க வந்திருக்கறது வாழ்க கோஷம் போட இல்ல. நமக்கு இப்ப அத விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. தம்பி நான் உன்கிட்ட சொன்ன விஷயம் என்னாச்சு?"

தம்பி - "பாவனா படம் போட்ட டிசர்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அது இது வரைக்கும் என் கையில் வந்து சேரல. ரோட்டுல ஒட்டி வச்சிருந்த ஷ்ரேயா போஸ்டர 18 பேரு நின்னு உத்துப்பாத்துட்டு போனாங்க."

டெல்பின் - "தம்பி..!"

தம்பி - "இதனாலதான்... இதனாலதான்.. பாவனா என் முன்னாடி வந்து என்னை தம்பின்னு கூப்பிட்டா என் நிலைமை என்ன ஆகுறது... அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன். நீங்க சொன்ன வேலையையும் செஞ்சுட்டேன்."

டெல்பின் - "அத மட்டும் தனியா சொல்ல மாட்டியா...!? கூட பாவனாவ வேற இழுத்துக்கறே"

குட்டி பிசாசு - "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."

மங்கை - "என்னோட அடுத்த படத்துல பாவனா ஹீரோயினா நடிச்சா கதிர்தான் ஹீரோன்னு நான் முடிவு பண்ணிட்டேன்"

அபி அப்பா இந்த மேட்டரை அவசரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே புகுந்த கண்மணி அக்கா, "என்ன இப்படி எல்லோரும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க. அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க.. ம்.. கோபி என்னப்பா நீயும் இப்படியே நிக்குற!?"

கோபி சற்று விழித்துவிட்டு, "ஸாரி டீச்சர்" என்று சொல்லி சடாரென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கண்மணி - "ஏம்ப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. உங்க அலும்பு தாங்க முடியலையே"

கலங்கிய கண்களுடன் அருகில் வரும் இம்சை அரசியைப்பார்த்து, "எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா. என் மனசு கஷ்டப்படுதுன்னு நீ கண்கலங்குறே பார்த்தியா.. அதான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம்"

இம்சை அரசி - "இல்ல டீச்சர், காயத்ரி விரலால என் கண்ண குத்திட்டா..!"

பேச்சினிடையே புகுந்த மின்னல், "நடுவிரல், கட்ட விரல், சுண்டு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் தெரியும்.. அது என்ன புதுசா காயத்ரி விரல்?"
டெல்பின், மங்கை, கண்மணி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

டெல்பின் - "இவங்களை அடக்கணும்னா அது ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும்"

மங்கை - "இந்த சீன் நிறைய படத்துல வந்திருக்கே... இத மறுபடி வச்சா நல்லாருக்காது.. இப்பவெல்லாம் இந்த மாதிரி சீனுக்கு வடிவேலுவும், விவேக்கும்தான் எண்ட்ரி ஆகுறாங்க. வேற ஏதாவது சீன் இருந்தா சொல்லுங்க"

கண்மணி - "எனக்கு புரிஞ்சிடுச்சு.. அதாவது நான் புரிந்து கொண்டேன்" என்றபடி சற்றுத்தள்ளி நடக்கும் களேபரங்களில் ஈடுபடாமல் தன் செல்போனில் விடாமல் பேசியபடி இருந்த முத்துலட்சுமியின் கையில் போனை பிடுங்கி விட்டு மைக்கை கொடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்றிவிட்டார். போனில் பேசிக்கொண்டிருந்த ஞாபகத்தில் முத்துலட்சுமி மைக் முன், "சரி... நான் அப்புறமா பேசறேன்.. பை" என்று சொல்ல கூட்டத்தில் பயங்கர கைதட்டல் தொடங்கியது.

சென்ஷி சத்தமாக - "இரண்டு விநாடிகளில் மேடைப்பேச்சை முடித்து புதிய சாதனை படைத்தார் - எங்கள் அக்கா முத்துலட்சுமி"

கண்மணி மனதிற்குள், "இதுக்கு நானே தேவல போல..."

கண்மணி அக்கா மேடை ஏறி முத்துலட்சுமியின் காதில் ரகசியமாய் கூற, சட்டென பிரகாசமானது முத்துலட்சுமியின் முகம், "எனவே இங்கு சேர்ந்திருக்கும் பாசக்கார குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நமது பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தன் பாச மகளின் பெயரால் பதிவெழுதுபவரும், அடுத்த மகனின் பெயரில் புதுப்பதிவு ஆரம்பிக்க நினைப்பவரும், நகைச்சுவையை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இப்போது மொக்கை போடுபவரும், யார் மேலும் கோபம் கொள்ளாதவரும், யாராவது திட்டினாலும் ரமண மொழியை மனதில் கொண்டு அதை பணிவோடு ஏற்றுக் கொள்பவரும், தீபா வெங்கட் பெயரை அடிக்கடி ஜொள்ளுபவரும், சிறந்த மனிதரும், இந்தியக் குடிமகனும், தமிழனும், மாயவரத்துக்காரருமாகிய நமது அபி அப்பா சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே தினத்தில்தான் பிறந்தார் என்பது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி.. அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது செல்ல மகள், அன்பு மகன் மற்றும் அவரது தங்கம்மாவோடு பாசக்கார குடும்பத்து உறுப்பினர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் மீது யாரும் கோபம் இருந்தாலும், கோபத்தை இன்று மட்டும் யாரும் அவரிடம் காட்ட வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். அவர் உயரத்திற்கு கேக்கை வாங்கினால் அதை வெட்ட அவர் மிகவும் சிரமப்படுவார் என்று தோன்றியதால் அவர் கத்தியால் வெட்ட முடிந்த கேக்கை மட்டும் வாங்கி வைத்துள்ளோம். சிரமப்படாது கேக்கை வெட்டி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுக்க வருமாறு அபி அப்பாவை அன்போடு வரவேற்கிறோம்"

கோபி - " இந்தாங்க்கா சோடா"

அபி அப்பா கண்கலங்கி மேடையேறி கண்மணி டீச்சர் அருகில் வர, "உங்களுக்கு என்னாச்சுங்க.. உங்க கண்ணையும் யாராச்சும் குத்திட்டாங்களா?"

டெல்பின் - "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா"

மங்கை - "ஓ அப்படியா..! அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல கேக்க கட் பண்ணுங்க"

அபி அப்பா - "என்னங்க இதுல இவ்வளவு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கீங்க... எனக்கு அத்தனை வயசாகலை"

மங்கை - "உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. யாரு மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்படியே எல்லாத்தையும் வச்சிட்டோம். நீங்க எல்லாத்தையும் பத்த வச்சு, ஊதி அணைச்சுட்டு கேக்க வெட்டுங்க போதும்"

இது ஆகற விஷயமில்லை என்ற முடிவுக்கு வரும் அபி அப்பா, "மங்கை அக்கா.... செண்ட்டிமெண்ட்டா பார்த்தா எரியற விளக்க அணைச்சிட்டு பர்த்டே கொண்டாடனா அது அவ்ளோ நல்லதா படல. அதனால நம்ம குடும்பத்துல எல்லோரும் எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தத நான் பத்திரமா எரிக்காம வச்சுக்கறேன்"

அய்யனார் - "என்ன வேணாலும் செய்ங்க.. முதல்ல கேக்க வெட்டுங்க"
அபி அப்பா கேக்கை வெட்ட துவங்க, கோரஸாய் குடும்பத்தினரின் குரல்.......



"அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

நவம்பர் 13ந்தேதி இன்னைக்கு..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்...."




சிறப்பு துளிகள்:

விழாவில் அபி அப்பாவை வாழ்த்தி மற்றவர் உதித்த வார்த்தை முத்துக்கள்

டாக்டர் டெல்பின்:- என்னைக்கும் நல்லாயிருக்கணும்

இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்

காயத்ரி:- அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் அழுகாச்சி கவிதை எழுதப் போவதில்லை

மை ஃபிரண்ட் ; மீ த பர்ஸ்ட்டு பல்லாண்டு வாழ்க ....வாழ்த்துக்கள்

தம்பி:- எங்கள் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு விருந்தினராக பாவனாவை வரவழைக்காதது யார் சதின்னு எனக்கு தெரியல

அய்யனார்:- எவ்வளவோ சொல்லணும்னு தோணுது. இப்ப நான் என்ன சொல்றதுன்னு எனக்கே புரியாததால நான் வாழ்த்த மட்டும் சொல்லிக்கறேன் (பயங்கர கைதட்டல்)

மின்னல் ; இங்க ஒர்ஜினலா சொல்லனுமா அனானி எல்லாம் கிடையாதா சரி ஓகே பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா

குட்டி பிசாசு ; அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நான் பதிவு எழுத போகிறேன். வாழ்த்துக்கள் அண்ணே

குசும்பன் ; ன்றேகக்லில்சொ ம்டுட்ம தத்ழ்வா லதாதயாரிபு.....

அபி அப்பா ; யோவ் என்னையா சொல்லற திட்டுறது கூட புரியுர மாதிரி திட்டுய்யா...

குசும்பன் ; அய்யனார் சொன்னதை அப்படியே திருப்பி படியுங்கள்

மை ஃபிரண்ட் ; யப்பா சாமி ......பதிவுக்கு தான் எதிர் பதிவுன்னா வாழ்த்துலையுமா ! ! !

கண்மணி:- அவரது பிறந்தநாள் பரிசாக ஒரு புது டெம்ப்ளேட்டை அவருக்கு பரிசாக அளிக்கின்றேன்

கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)

சென்ஷி:- //கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)// டபுள் ரிப்பீட்டே :))))

முத்துலட்சுமி: நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்

மங்கை:- சென்ஷி, கோபி ரிப்பிட்டே போடுறத இன்னியோட நிறுத்திக்குங்க... அவ்வளவுதான் சொல்வேன்

கோபி & சென்ஷி ; அதுக்கும் ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

எழுதி ஆடியது ; கோபி & சென்ஷி

29 comments:

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா :))

(எல்லாம் ஒரு நப்பாசை தான் :))

கானா பிரபா said...

தல

கலாய்த்தல் புலிய பலிகடா ஆக்கிட்டீங்களே ;-)

அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

ஜி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.. :)))

Baby Pavan said...

தல'க்கு பொறந்தநாளு....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலிவா...

எதுனா பிராப்ளம்னா சொல்லு தலிவா உள்ள பூந்து கலக்கிர்றோம்...

குட்டீஸ்

கப்பி | Kappi said...

:)))

vaazhthukkal abi appa :)

அரை பிளேடு said...

"அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு"...

வாழ்த்துக்கள் :)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் அபி அப்பா.

மங்களூர் சிவா said...

//
அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன்.
//
//
குட்டி பிசாசு - "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."
//
:-)))))

cheena (சீனா) said...

அபி அப்பா (நட்டப்பா) - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். சீனாவிலே பார்ட்டி கொடுக்கறதா மைஃப்ரண்ட் சொன்னாரே - எப்போ அது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொறந்தாநாளுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சிய்.. வாழ்த்தி பெரிசா பேசலாம்ன்னா பாருங்க பசங்க எங்க விடறாங்க..

Anonymous said...

டெல்பின் - "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா//

டாக்டர் மருந்து குடுப்பாங்கன்னு நெனச்சா விளக்கம் குடுக்கறாங்களே.

அபிஅப்பாவுக்கு பொறந்த நாளு வாழ்த்துக்கள்

ஜே கே | J K said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.

வித்யா கலைவாணி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.. :)

வித்யா கலைவாணி said...

தீபாவளி போனஸ் தந்த கோபிக்கு நன்றி.

துரியோதனன் said...

வாழ்த்துக்கள் அபி அப்பா!

ஆயில்யன் said...

//உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. //


:)))))))))))

மங்கை said...

அண்ணாச்சிய கலாய்கறேன் பேர்வழின்னு எங்களையெல்லாம் கலாய்ச்ச மஆஆஆஆதிரி இருக்கு..

அண்ணாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனி இந்த பிறந்தநாள் முதற்கொண்டாவது 'படித்து' விட்டு பின்னூட்ட போட வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் அபி அப்பா!!!

காட்டாறு said...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபி அப்பா!

கலக்கலா எழுதிய சென்ஷிக்கும், கோபிக்கும் ஒரு சபாஷ்.

பின்குறிப்பு:
டாக்டரம்மாவுக்கு சரியான ரோல் கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

நாகை சிவா said...

தொல்ஸ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நாகை சிவா said...

யோவ் தொல்ஸ் போட்டோவ பாதி வெட்டி என்னைய இரட்டிப்பு செய்துட்டல... உன்ன அப்பால டீல் பண்ணிக்குறேன்...

குசும்பன் said...

அபி அப்பா வாழ்த்துக்கள்:)

//உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. //

தம்பி கோபி செமயா இருக்கு:)

குசும்பன் said...

காட்டாறு said...
///பின்குறிப்பு:
டாக்டரம்மாவுக்கு சரியான ரோல் கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.///

இல்லை காட்டாறு அவுங்க ஏற்கனவே ஒரு வெஜ் ரோல், சிக்கன் ரோல் எல்லாம் கொடுத்து இருக்காங்க இவுங்கதான் அந்த ரோல் எல்லாம் வேண்டாம் அதில் கொழுப்பு அதிகம், இதில் காரம் அதிகம் என்று அந்த ரோல் எல்லாத்தையும் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. உண்மை தெரியாம இப்படி சொல்லிட்டிங்களே:)))

சென்ஷி said...

வாழ்த்துக்கு நன்றிகள் கானா பிரபா வழியாக‌ ஜி, பேபி பவன், கப்பி, அரை பிளேடு, மங்களூர் சிவா, சீனா, முத்துலட்சுமி, மங்கை அக்காவை தொடர்ந்து, சின்ன அம்மணி, ஜே.கே, வித்யா கலைவாணி, ஆயில்யன், காட்டாறுவரை :)



சென்ஷி

அபி அப்பா said...

வாழ்த்து சொல்லிய அத்தனை நல்ல இதயங்களுக்க்கும் என் நன்றி!! நன்றி!! நன்றி!!!

எப்பாடி நன்றி சொல்வதுன்னே தெரியலை! ரொம்ம நெகிழ்ச்சியா இருக்கு! எனக்கு இதல்லாம் பழக்கமில்லை! யாரும் எனக்குபிறந்தநாள் கொண்டாடியதும் இல்லை! நானும் கொண்டாடிக்கிட்டதும் இல்லை! மிக்க நன்றி மக்கா!! நான் வேற என்னத்த சொல்றது!!!

அபி அப்பா said...

சந்தடி சாக்குல மங்கையும் என்னை அண்ண்னாச்சின்னு சொன்னாங்க பாருங்க அதுதான் வாழைப்பழ ஊசி:-))

இராம்/Raam said...

//முத்துலட்சுமி: நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்//

LOL....... Ultimate.. :))

C.N.Raj said...

கோபிநாத்,

உங்க ஏரியாவுக்குப் புதுசாக் குடி வந்துருக்கேனுங்கோ...
நம்ம புது நெய்பர்ஸ்ஸ எல்லாம் இன்ட்ரொட்யூஸ் பண்ணி வச்சாங்கப்பா..
ரோட்லதான் அறிமுகம்...இன்னும் யார் ப்ளாக் வீட்டுக்கும் போகல.இனிமே தான் போகனும்.
ஆனா ஒன்னுப்பா ரோடே இந்தக் களை கட்டுதே..
அதுலயும் உங்க ஓல்ட் மக்கா அபி அப்பா பொறந்த நாளக் கொண்டாடிப் பின்னிட்டிங்க கோபி....
நம்மலயும் கொஞ்சம் ஆட்டத்துல சேர்த்துக்குறது....
வாரம் ஒரு தடவை விளையாட வருவேன் ப்ளாக்குக்கு...நல்லா தான் விளையாடுவேம்ப்பா...அப்படின்னு நம்ம பசங்க சொல்றானுங்கோ...
உங்க காப்டன் கிட்ட சொல்லி டீம்ல நம்மலயும் சேருங்க...என்னவாவா...
காப்டனாத்தான்!
நன்றி.

ரசிகன் said...

ஹா..ஹா.. லேட்டா வந்தாலும் கொண்டாட்டம் களை கட்டுது.. சூப்பர்..