Saturday, June 02, 2012
இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)
Tuesday, January 03, 2012
என்றென்றும் ராஜா - ஆசிர்வதிக்கப்பட்டவன்
என்றென்றும் ராஜா - மீண்டும் இசை தெய்வம் 6 வருடங்கள் கழித்து 28 டிசம்பர் புதன் அன்று சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில், சரியாக மேடையில், தெய்வத்தின் தரிசனத்துக்கு 20 நிமிடம் முன்னால் ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைத்தது; யார் செய்த புண்ணியமோ! பிரார்த்தனையோ தெரியவில்லை. பின்னால் நண்பர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை எல்லாம் மறந்து நான் படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டேயிருந்தேன்.... அந்த ஓட்டத்திற்க்கும் பதட்டத்திற்கும் கூட நம் தெய்வம் எந்த படத்திலெனும்ம் பின்னணி போட்டு வைத்திருப்பார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நம்ம ஹாய் செல்லம் - பிரகாஷ் ராஜ் ;-) கூடுதல் போனஸ் - சும்மா பின்னிடுச்சில்ல ;-)
இசை தெய்வத்தைப் பற்றி ஒரு வீடியோ முடிந்தவுடன்.. கதவுகள் திறந்தவுடன்... அரங்கத்தில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களின் உணர்ச்சி வெள்ளத்தில், கைத்தட்டலில் அரங்கமே குலுங்க... ஒரே ஜெப மொழியாக இசை தெய்வத்தை அழைக்க... அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் இசை தெய்வம் ஒரு வெள்ளை தீபம் நடந்து வருவது போல வந்து அனைவரையும் வணங்கியது.. ஆசிர்வதித்தது.... வந்திருந்த 7000+++ ரசிகர்களில் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன்.
"என் நண்பனே!!! இங்கே வா.." என அழைத்தவுடன், அவருடைய நண்பன் ஆர்மோனியப் பெட்டி மேடைக்கு கொண்டுவரப்பட்டது. "நீங்க எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க. ஆனால் நான் நின்னுக்கிட்டு இருக்கேன். நான் இங்கே நிற்பது போல உங்க மனசிலும் எப்போதும் என்னோட இசை நிற்கிறது. அதுவே எனக்கு போதும்" என்று சொல்லிவிட்டு நேரடியாகவே ’ஜனனி ஜனனி’யில் அனைவரையும் உருக்கிவிட்டார். அதில் ஒரு சிறப்பு உண்டு - அதை சின்னத்திரையில் காண்க ! (இந்த மாதிரி நிறைய சின்னத்திரையில் காண்க வரும்.)
"அம்மாக்கள்தான் தாலாட்டு பாடுவாங்க.... ஆனால் நம்ம ராஜா சார் பல அம்மாக்களுக்கே தாலாட்டு பாடியிருக்கிறார் அதனால் முதல்ல அம்மா பாட்டு" என்று பிரகாஷ் சொல்ல. படம் மன்னன் - பாடல் - அம்மா என்று அழைக்காத... திரைப்படத்தில் பாடியவரே பாடினார் ! ஆனால் 100% சரியாக பாடினாரா என்பது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தப் பாடலும் அம்மாப்பாடல்தான் - விட்டால் முழு நிகழ்விலும் அம்மாப்பாடல்களே பாடியிருக்கலாம் அத்தனைப் பாடல்கள் இருக்கிறது! இருந்தாலும் பாலு சாருக்கும் ஒரு அம்மா பாட்டு - படம் - தூங்காதே தம்பி தூங்காதே - பாடல் - நானாக நானில்லை - திரைப்படத்தில் பாடியவரே பாடினர் - இசைத்தாயிடம் வரம் பெற்ற குழந்தைகளில் இவரும் ஒருவர்! என்ன குரல்!! 100+++% அப்படி ஒரு சுத்தம்!!!
"சிம்ஃபொனி என்றால் என்ன சார்" அப்படின்னு பிரகாஷ் கேட்க.... அதை சொல்வதை விட செய்துவிடுகிறேன் என்று ஒரு சிறு சிம்ஃபொனி இசை வாசிக்கப்பட்டது. இசை தெய்வம் அந்த இசைப் பற்றி இப்படிச் சொன்னார்.
"சிம்ஃபொனி என்பது ஒரே நேரத்தில் 5 கவிஞர்கள் கவிதை சொல்வது போல" என்று சொல்லிவிட்டு அந்த இசையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வாசிக்கச் சொல்லி மீண்டும் தனித்தனியாக வாசித்த இசைகள் அனைத்தும் ஒன்றாக இணையும் போது எப்படி வருகிறது என்று இசைத்து காட்டினார்கள். மிகவும் அற்புதமான ஒன்று ! இந்த இசை இசைத்து கொண்டு இருக்கும் போது தெய்வம் மைக்கை கையில் எடுத்தது ஏதோ பேசப் போகிறார் என்று நினைத்தோம்...ஆனால் அவர் குரலில் மென்மையாக ”இதயம்ம்ம்ம்ம்ம் போகுதே.....” என்று பாட ஆரம்பித்தார்.....அனைத்து ரசிகர்களின் இதயமும் அவர் பின்னால் போய்க்கொண்டு இருந்தது. இந்த பாடலுக்கு இப்படி ஒரு சிம்ஃபொனி இசையை கொடுத்து அசத்திவிட்டார்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது ’ஆகா ஏதோ பேச போறாரா’ன்னு நினைத்தோம்.. ஆனால் அவரோ ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று ராஜாவைப் பார்த்துப் பாட ஆரம்பித்தார். என்ன ஒரு குரல் அது....மனுஷன் எங்கும் பிசகாமல் அப்படி பாடி முடித்தார். நன்றி சார் ;-)
’பருவமே...’ பாடலில் வரும் ஷூ ஒசை எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை இசை தெய்வம் சொன்னார். அந்த ஷூ இசை எப்படி வாசித்தார்கள் என்பதை சின்னத்திரையில் காண்க !
இசை தெய்வம் முதலில் எழுதிய பாடல் - அவருக்கு அவரே எழுதிய பாடல் போன்ற ஒரு பாடல் - எனக்கு என்றென்றும் பிடித்தப் பாடல் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடல் - தெய்வத்தின் குரலில் அதுவும் நேரடியாகக் கேட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !
இசைஞானி நிகழ்ச்சி நடக்கிறது, இந்த நேரம் பார்த்து இந்தாளு ஊரில் இல்லையேவென வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு இடையே திடீரென்று திரையில் தோன்றியது அந்த உருவம். இசை தெய்வத்தின் பலகோடி ரசிகர்களின் குரலாக ஒளி, ஒலியுடன் திரையில் தோன்றியது. ஒளியும் ஒலியும் அவர் பார்த்துக்கொள்ள அதற்கு உயிரை இங்கோ நாங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தோம். மேடையில் பேசிய கலைஞன், விஐபி, சகஞானி நம்ம கலைஞானி மட்டுமே.
படம் ஹேராம் என்றதும் அதிர்ந்தது அரங்கம் - அந்த பாடல் பாடிக்கொண்டு இருக்கும்போதே நடுவில் நின்று கொண்டு இருந்த இசைஞானியை காணவில்லை எங்கே என்று தேடினால் அவர் அவரோட வேலையை செய்ய போயிட்டார். அவர் என்ன செய்தாலும் நமக்கு அது விருந்து தான்...... ’நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ பாடலில் வரும் அந்த பியனோ இசைக்கு மேடையில் இசைஞானியே பியனோ வாசித்தார். ரசிகர்களின் உற்சாகத்தைச் சொல்ல வார்த்தை இல்லை! பாடகர் ஹரிஹரன் சிறு சொதப்பல்கள் செய்தார்.
என் இனிய பொன் நிலவே - அந்த வெள்ளை நிலவு கூட வானத்தில் இருந்து இறங்கி வந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அந்த அளவுக்கு பின்னி எடுத்துடார் ஜேசுதாஸ்!
என் இனிய பொன் நிலவில் அசத்தியவர் பூவே செம்பூவே’வில் சின்ன இடத்தில் இசை முடியும் முன்பாகவே பாடிவிட்டார். விடுவோமா நாங்க.... உடனே கொடுத்தும்ல்ல குரலை..... அவ்வளவுதான் டக்கென்று ஜேசுதாஸ் கையைப் பிடித்த இசைஞானி இருங்கண்ணே’வென்று சொல்ல மீண்டும் இசை வாசிக்கப்பட்டது.. ஆனால் மீண்டும் ஜேசுசார் அதே தவறை செய்தார்..... ரசிகனே இவ்வளவு துல்லியமாகக் கவனிக்கும்பொழுது விடுவாரா நம் படைப்பாளி.... மீண்டும் வாசிக்கச் சொன்னார்.. வாசித்தார்கள்.. மீண்டும் பிழை.... அப்பொழுதுதான் ஜேசுசாருக்கு தான் செய்த தவறு புரிந்தது. அம்முறையில் சரியாக பாடியும் முடித்தார்.
ஆனால் மேடையை விட்டு ஜேசுசார் நகரவில்லை. "தவறு என்னோடதா இல்லை அவர்களோடதா (ஆர்கெஸ்ட்ரா)” என்றார். "உங்களோடதுதான்" என்றதும் ”அப்படின்னா எனக்காக மீண்டும் வாசிங்க.. நான் பாடிடறேன்” என்றார். மீண்டும் அதே ஆர்ப்பரிக்கும் இசையுடன் மிக மிக மிக சரியாக வாசித்தனர் ஆர்கெஸ்ட்ராவினர். மிக அற்புதமாக பாடி முடித்தார் ஜேசுசார். முடித்தவுடன் "சரியாக வரும் வரை எத்தனை டேக் வேணும்ன்னாலும் போவோம் நாங்க” என்றார். இதன் மூலமாய் மூன்று முறை அந்தப் பின்னணி இசையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது! - உண்மையில் மனதாற வாசித்தவர்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வரம் பெற்றவர்கள்! என்ன ஒரு துல்லியம்! நிறுத்து என்றால் நிறுத்தினார்கள்.. வாசி என்றால் மிக மிக மிக சரியாக விட்ட இடத்தில் இருந்து அவர்கள் செய்து காட்டிய மாயம் இருக்கிறதே யப்பா....!! என்ன செய்வது வாத்தியார் அப்படி! வரம் பெற்றவர்கள் இசைக்கலைஞர்கள் மாத்திரமில்லை.. அந்த இசைக்கருவிகளும்தான்.. வயலின் இருக்கிறதே.... விடுங்க.. பாருங்க... ! தயவு செய்து ஜெயா டிவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்ப வேண்டும்.
’ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’யில் சரியாகப் பாடாத ஹரி, ’என்மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே’ பாடலில் 200% மிக அற்புதமாகப் பாடினார்.
’மடை திறந்து... தாவும் நதியலை’ - ஆர்கெஸ்ட்ராவும் + பாலு சாரும் கூட்டணியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சினார்கள்! ரசிகர்களை எவ்வளவு உற்சாகத்துக்கு கொண்டு போக முடியுமோ அந்த அளவுக்கு கொண்டுபோனது இந்தப் பாடல். சினிமா வசனம் போல, ”சும்மாவே ஆடுவோம்.. இதுல கால்ல சலங்கையும் கட்டிவிட்டது” இந்தப் பாடல். அதுவும் அதில் வரும் வரிகள்.... சொல்லவா வேண்டும் ஒவ்வொரு ராஜா ரசிகனும் கொண்டாடிய பாடல்.
இந்தியில் இருந்து வந்த பால்கி, இசை தெய்வத்தோட பின்னணி இசை பற்றி ஒரு தொகுப்புடன் சொன்னார். சின்னத்திரையில் போடும் போது கண்டிப்பாக பாருங்கள். ஏன் பின்னணி இசைக்கு இசைஞானி தான் சரி என்று உருகி உருகி பேசுகிறார்கள் என்பது இதுவரை புரியாதவர்களுக்குக் கூட புரிந்தாலும் புரியலாம்.
அழகர்சாமியின் குதிரை படத்தின் பின்னணி இசை வாசிக்கப்பட்டது.
"சார் இப்போ உங்க செல்லம்" என்றவுடன் - இசைஞானி "இளையராஜாவோட இளையராஜாவா" என்று செல்லமாக அழைத்தவுடன், ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ஆகா இந்த குட்டி சாத்தான் ஏதாச்சும் சித்து வேற செய்யுமோவென பயமும் வந்தது. நல்லவேளையாக பாடிய 2 பாடல்களும் எந்த வித சொதப்பலும் இல்லாமல் பாடினார்.
ஏதோ மேகம் ஏதோ தாகம் - இளம் பாடகர் கார்த்திக் மிக அற்புதமாக பாடினார். அதே போல ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இளம் காற்று வீசுதே பாடினார்.
ஜேசுதாஸ் + பாலு சார் இருவரும் அதுவும் கூடவே இசைஞானி இப்படி ஒரு கூட்டணி இருக்கும் போது அந்த பாடல் பாடாமல் இருப்பார்களா! காட்டுக்குயிலு - இருவரும் மிக மிக அற்புதமான பாடினார்கள். ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம்.
கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் பதிவின் போது நடந்த சம்பவங்களை ஜேசுசாரும் இசைஞானியும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பூங்காற்று புதிதானது, கேளடி கண்மணி பாடகன் சங்கதி, யார் தூரிகை என்ற பாடல்களில் சிலவரிகள் பாடினார்கள். வாசித்த அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தோம். கூடவே கிட்டார் இசைக்கலைஞர் (சரியாக அவர் பெயர் நினைவில்லை) பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் இசைஞானி நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக புத்தாண்டை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் என்றொன்றும் "தமிழனின் புத்தாண்டு பாடல்" பாடினார்கள். சும்மாவே பாலு சார் அசத்துவார். இந்தப் பாடலுக்கு சொல்லவா வேண்டும். மனுஷன் அணு அணுவாக பாடி பின்னிட்டார்.
என் சோகம் என்னோடு தான் என்ற வரிகளுக்கு முழு அர்த்தமாக நின்றார் இசைஞானி. எந்த ஒரு நிலையிலும் ஒரு சின்ன அசைவிலும் கூட தன் மனத்தில் உள்ள வலியையோ இல்லை வருத்தத்தையோ ஒரு துளி கூட காட்டிக்கொள்ளாமல். எங்கிருந்தோ எப்படி எல்லாமோ பல வலிகளை கடந்து சுமந்து வந்திருக்கும் ரசிகனுக்கு என்ன தேவையோ அவன் எதை எதிர்பார்த்து வந்திருப்பான் என்பதை உணர்ந்து அதை முழு தரத்துடன் கொடுப்பதில் என்றென்றும் ராஜா எங்கள் இசை தெய்வம் என்பதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியே !
வந்திருந்த அனைத்து ரசிகர்களையும் பார்த்து ”சரி பார்ப்போம் வருகிறேன்" என்று கையை அசைத்து அந்த வெள்ளை தீபம் நகர்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று அந்த அமைதியையும் பாதுகாப்பையும், கதகதப்பையும் கிடைக்கப்பெற்ற எந்த மனுஷனாவது போதும் என்று சொல்லிவிட்டு விலகுவானா! அப்படியொரு சூழ்நிலையில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களை நகர்த்தினார் இசை தெய்வம். அங்கு வந்திருந்த பல ஆயிரம் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு இசை தெய்வத்தின் இசை இரவு மட்டுமே ! மற்றபடி என்றென்றும் இசை தெய்வத்தின் ரசிகர்களின் வாழ்க்கையில் எல்லா இரவுகளும் இசைஞானியுடன் தான் !
நிகழ்ச்சியை நடத்திய இயக்குனர் சுபாஸ்ரீ தணிகாசலம் தனது Facebookயில் இப்படி சொல்லியிருக்கிறார்
"oru aindhadi vaamanan netru isaiyaal ulagai alandhaar!! avar pidiththa kudaiyil oru kambiyaai naan... 45 days of practice, 5 hours of ecstasy ...15 years of media and music reality shows has culminated to the best moment of my life. i have to re post my previous message as i am speechless "MUSIC IS MY RELIGION and ILAYARAJA IS GOD"
பாடல்கள் தொகுப்பு
1) ஜனனி ஜனனி - இசைஞானி
2) அம்மா என்றழைக்காத - ஜேசுதாஸ்
3) நானாக நான் இல்லை தாயே - பாலு
4) இதயம் போகுதே - சிம்ஃபொனி ஸ்பெசல்
5) பருவமே - சித்ரா - பாலு
6) இதயம் ஒரு கோவில் - இசை தெய்வம்
7) நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹரிஹரன்
8) என் இனிய பொன் நிலவே - ஜேசுதாஸ்
9) கண்மணியே காதல் கற்பனை என்பது - பாலு
10) ஆயிரம் மலர்களே மலருங்கள்
11) புத்தம் புது காலை - சித்ரா
12) சின்னக்கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளி கிருஷ்ணா
13) விழியிலே மலர்ந்தது - பாலு
14) பூவே செம்பூவே - ஜேசுதாஸ்
15) ஒரு ஜீவன் அழைத்தது - இசைஞானி, சித்ரா
16) ஏதோ மேகம் ஏதோ தாகம் - கார்த்திக்
17) மடை திறந்து - பாலு
18) ஒரு ராகம் பாடலோடு - ஜேசுதாஸ்
19) சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் - ஹரிசரண்
20) நான் தேடும் செவ்வந்தி பூவிது
21) கும் சும் கும் - பா படம் - பவதாரணி
22) ஆயிரம் தாமரை மொட்டுக்களே - பாலு
23) பூங்கதவே தாழ் திறவாய் - தீபன் சக்கரவத்தி - உமா ரமணன்
24) சுந்தரி கண்ணால் ஒரு செய்தி - பாலு, சித்ரா
25) இளங்காத்து வீசுதே - ஸ்ரீராம் பார்த்தசாரதி
26) என்மனவானில் சிறகை விரிக்கும் - ஹரிகரன்
27) ராஜா கைய வச்ச - யுவன்
28) நினைவோ ஒரு பறவை - யுவன்
29) இது ஒரு நிலாக்காலம் - ரீட்டா
30) வச்ச பார்வை தப்பாதடி - ஜேசுதாஸ்
31) காட்டு குயிலு - ஜேசுதாஸ், பாலு
32) கண்ணன் ஒரு கைக்குழந்தை - ஜேசுதாஸ்
33) இளமை இதே இதே - பாலு
எல்லாவற்றையும் வார்த்தையில் பகிர்ந்து விட்டால் உணர்வதற்க்கு !? என்னால் வார்த்தையில் பகிந்துக்கொள்ள முடிந்ததை பகிர்ந்து இருக்கிறேன். பொங்கல் அன்று மீதியை அனைவரும் முடிந்தால் உணருங்கள் !
Thursday, June 02, 2011
இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)
Wednesday, June 02, 2010
இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)
Tuesday, January 26, 2010
பத்மபூஷன் இசைஞானி இளையராஜா
பத்மபூஷன் விருது இசைஞானி இளையாராஜாவுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Wednesday, October 07, 2009
சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...

இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க தோழி சினேகிதி அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)
பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)
இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.
2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் இளையராஜா. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் CSR அவர்கள் எழுதிய As we Feel Raaja ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.
நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.
அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல blogspot.com அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.
சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் அமைதிப்புயல் திரு. மா. சிவக்குமார்! அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் திரு. ராகவன் என்கிற ஜிரா அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க கதாசிரியர் தோழி திவ்யா அவர்கள்.
அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.
பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.
அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.
நான் அழைக்கும் சக பயணிகள்
பார்வைகள் "கவிதா அக்கா"
கவிதை மழை பொழியும் "கவிநயா அக்கா"
யாவரும் நலம் விசாரிக்கும் "சுசி அக்கா"
மயில் "அக்கா விஜி"
வலையுலக "அண்ணன் ஆயில்யன்"
எங்க ஏரியா+என்னோட "செல்ல ஜீனியர் - ஆதவன்"
வலையுல "FORWARD MAIL" "அண்ணன் கார்த்திக்கேயன்"
ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)
Monday, June 29, 2009
3 + 32 = அட்டகாசங்கள்....
இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)
கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)
நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல். இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்
கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல
4. பிடித்த மதிய உணவு என்ன?
அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என்னோட அம்மா.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீலம்
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - இளையராஜா
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14. பிடித்த மணம்?
புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்
சகோதரி முத்துலட்சுமி
சகோதரி மை ஃபிரண்ட்
சந்தோஷ் அண்ணே
தல கானா பிரபா
தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சகோதரி மயில் - அவர் எழுதிய குழந்தைகள் கவிதை தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.
சகோதரி கவிதா - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.
சகோதரன் தென்றல் - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
அப்படி வரைமுறை எல்லாம் இல்ல
20. கடைசியாகப் பார்த்த படம்?
புதுபடம் என்றால் பசங்க
பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி
21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
படங்கள் வச்சுக்கிறது இல்ல
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது ; எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல
பிடிக்காதது : அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?
துபாய்
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கு.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏமாற்றுவதை
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே...
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தெரியாது
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பயணம்
இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!
Monday, June 01, 2009
இசைக்குப் பிறந்த நாள்
இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.
தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்
"திரு. இசைஞானி இளையராஜா அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.
இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.
குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.
மடைதிறந்து பாடும் நாதியலை நான்
இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?
நான் தேடும் செவ்வந்திப்பூ இது...
"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இசைஞானி கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!
இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.
ஸ்பெஷல்
How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த Do anything இப்போது உங்களுக்காக.
தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன்.
Monday, April 06, 2009
மழை...
நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் மழை....ஒரேயடியாக பேய்ந்து தள்ளிவிடுவேன் என்கிறது...ஒரே எரிச்சலும் இம்சையுமாக இருந்தது. நான் வசிக்கும் இடம் அப்படி. தொடர்ந்து 1மணிநேரம் பெய்தால் போதும். மின்சாரம் தானாக போய்விடும். உடனே கம்பெனிக்கு தகவல் அனுப்ப வேண்டும் அவர்கள் வந்து என்ன ஏதுன்னு பார்த்து சரியாக்குறதுக்கள்ள விடிஞ்சிடும். பள்ளிக்காலங்களில் மழை பெய்தால் மனதுக்குள் செம ஜாலியாக இருக்கும். ஆண்டவா மழை நல்லா பெய்யணும். ஸ்கூல் முழுக்க தண்ணி தேங்கி லீவு விடணும். ஆனால் எங்க தெருவுல மட்டும் தண்ணியே தேங்கக்கூடாது என்று எல்லாம் வேண்டியிருக்கிறேன். தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டால் கிரிக்கெட் ஆட முடியாதுல்ல அப்பவே நான் எம்புட்டு நல்லவன் பார்த்திங்களா! (எப்படி நீ நல்லவன்னு கேட்பவர்காக - பின்ன ஒரு தெருமுழுக்க தண்ணீர் தேங்கக்கூடாதுன்னுல வேண்டியிருக்கேன்)
*****************************
போன மாதம் முழுக்க ஆணிகள் அந்த அளவுக்கு இல்லை. எல்லாம் உலக பொருளாதார வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி எங்க கம்பெனியையும் கொஞ்சம் பயன்படுத்திக்கிடாங்க. அதனால 12 மணிநேரம் வேலை 8 மணிநேரமாக குறைந்தது. ஒரு பக்கம் என்னாடா ஆப்பு இப்படி வருதேன்னு நினைத்தாலும் இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மீதி நேரத்தில் பக்கத்தில் உள்ள warehouseல் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிட்டோம். நீண்ட நாளைக்கு பிறகு விளையாடியாதால் ஒரு ஓவருக்கு 13 பால் போடவேண்டியாதிடுச்சி. கொஞ்சம் ஏறி நின்னு அடிச்சதில் காலில் காயம் வேற. ஆனாலும் விடாப்பிடியாக தினமும் பேட்டை தூக்கிக்கொண்டு 3 மணிநேரம் நன்றாக விளையாடி வந்தோம். வழக்கம் போல இப்போது ஆணிகள் குவியத்தொடங்கிவிட்டது. பழையபடி 12 மணிநேர வேலைன்னு சொல்லிட்டாங்க. பழையபடியே திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு.
***********************************
சென்ஷி, நான் மற்றும் ஆதவன், அய்ஸிடமிருந்து சில பல திரைப்படங்களை தூக்கிட்டு வந்தது மிகவும் நல்லதாக போச்சு.
காஞ்சிபுரம்
அற்புதமான படைப்பு. படத்தை இயக்கிய பிரியதர்ஷனை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சொல்லவந்ததை எந்த வித தங்குதடையும் இன்றி யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். இயற்கையான வெளிச்சத்தை மிக அழகாக நம் கண்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். முதலாளி மகளுக்கு பட்டுப்புடவை நெய்வதை பற்றி பிரகாஷ் சொல்லும் காட்சி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள்.
நான் கடவுள்
எப்படா வருமுன்னு தவம் கிடந்த படம். கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க நினைத்த படம். வந்துவிட்டது ஆனால் பல நாடுகளில் வெளியான இந்த படம் இந்த நாட்டுல மட்டும் வெளிவரவில்லை. திரு(பின்ன ஸ்டார் ஆகிட்டாருல்ல). குசும்பன் அண்ணனிடம் கேட்டதற்க்கு வில்லு, படிக்காதவன் போன்ற படங்கள் தான் வரும் இந்த மாதிரி படம் எல்லாம் வராதுன்னு குண்டை போட்டார். சிடியில் பார்க்ககூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். நாம நினைத்தது என்னைக்கு நடந்திருக்கு இப்ப மாத்திரம் ஓடுறதுக்குன்னு ஒரு வழியாக பார்த்தாச்சு. படத்தைப்பத்தி எல்லாரும் பல விதமாக சொல்லிட்டாங்க என்னை பொறுத்தவரையில் சூப்பர் படம். பாலா எந்த காரணத்துக்கும் தன்னோட தனித்திறமையை மாற்றிக்கொள்ளாமல் படங்களை தர வேண்டும்.
The Host (நன்றி : சென்ஷி)
கலைக்கு மொழிகள் கிடையாது (ஆமா..புரியுற மொழியில எடுத்தாலும் உனக்கு புரிஞ்சுட போதாக்கும்) அது உண்மைங்க இது ஒரு ஜப்பான் படம்ன்னு தான் நினைச்சி பார்த்தேன். (ஆனா கொரியன் படமாம்) ஆய்வகத்தில் இருந்து வெளியாகற அமிலம் நகரத்தின் முக்கிய நதியில கலக்குறதால (காட்சில்லா -அணு ஆயுத பரிசோதனைய நினைச்சுக்குங்க) ஒரு புது மிருகம் உருவாகுது. அது அங்கே இருக்கும் மனிதர்களை உயிரோட முழுங்கி ஒரு இடத்தில வச்சி ஃபுல் கட்டு கட்டுது. அந்த மிருகத்துக்கிட்ட ஒரு சின்னப்பொண்ணு மாட்டிக்கிறா. அப்படி மாட்டிய பெண்ணை எப்படி அந்த குடும்பத்தினர் யாரோட பெரிய உதவியும் இல்லாமல் கொண்டு வராங்கன்னு தான் படம். பொதுவா இந்த மாதிரி அனிமேசன்ல எப்படி மக்களை காப்பாத்துறாங்கன்னு யோசிக்குற இயக்குனர்கள் மத்தியில இதுலஒரு குடும்பம் எப்படி சிதையுதுன்னு காட்டியிருப்பாங்க. அந்த பெண்ணோட அப்பாவாக வருபவரின் நடிப்பு டாப்புங்க. அவரோட மகள் இறந்துட்டாள்னு எல்லாரும் சொல்லும்போது, அப்பா இல்ல என்னோட பொண்ணு இறக்கல அவனை அந்த மிருகம் இப்படி வாய் வழியாக வெளியில துப்பியிருக்குமுன்னு செல்போனை வச்சி காட்சிப்படுத்துவாரு பாருங்கள் அட்டகாசம்ய்யா...தன் பொண்ணு தன் பக்கத்தில் இருக்கும் போது அந்த அப்பாவும் குழந்தையாகிடுவான் அவளுக்கு. அன்பை புரிய மொழியே தேவையில்ல அருமையான படம்.
Final Destination 1 2 3
யப்பா சாமிகளா மரணமுன்னு வார்த்தை சொல்றதுக்கே, கேட்குறதுக்கே எம்மாம் பயம் வருது. உனக்கு நேரம் நெருங்கிடுச்சி. மகனே அடுத்து நீ தான் போக போறன்னு தகவல் தெரிஞ்சிட்டா எப்படி இருக்கும். யப்பா படம் முழுக்க மரணம்தான். படம் பார்க்கும்போது எங்க ரூம் நண்பர்களுக்குள்ள எப்படிடா சாவான் இவன் இப்படியா இல்ல அப்படியானு ஒரு பட்டிமன்றமே நடந்துடுச்சி. ஆனா அவன் நாம சொன்னது மாதிரி இல்லாமல் வேற மாதிரி சாவான். அதான் படத்தோட வெற்றி. என்னைக்கேட்டா முதல்பாகம் மூன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சூப்பரு. ஏன்னா படம் பார்க்கிறவன் கூட ஏய் அங்க போகாதே நீ செத்துடுவடான்னு யூகிக்க வச்சி கடைசியில ஒரு டூவிஸ்டு (டுவிஸ்டு இல்ல டூவிஸ்டுதான் ஒவ்வொருத்தவனுக்கும் ரெண்டு சான்ஸ் தர்றாங்க. சாவறதுக்கு) வச்சி கலக்கியிருப்பாங்க. இந்த படத்தை பார்த்ததில் இருந்து ஆபிசுல நடக்கவே பயமாக இருக்குது. செமம படம் பாஸ்.
Bangkok Dangerous
Samuel L. Jackson நடித்த Lakeview Terrace படத்தை பார்க்க ஒரு சிடியை வாங்கினேன். கடைசியில தாவு தீர்ந்துடுச்சி அதே சிடியில் நிக்கோலஸ் கேஜ் நடித்த இந்த படமும் இருந்தது. Bankok Dangerus படத்தின் பெயரை பார்த்ததும் ஒரே அடிதடியாக இருக்கும் போல சரின்னு போட்டு பார்த்தேன். அட்டகாசமாக ஆக்க்ஷன் படம் தான் ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் அட்டகாசம். நாலு பேரை போட்டு தள்ளுவதற்காக ஹாங்காங் வருகிறார் நிகல். அவர் போட வேண்டிய ஆட்களை பற்றி தகவல்கள் வேற ஒரு இடத்தில் இருந்து வரும். அதை கொண்டு வர ஒருவனை வேலைக்கு வைப்பார். அவனே நிக்கோஸ்க்கு சிஷ்யனாக மாறிடுவான். வசனங்கள் நெத்தி பொட்டில் சுட்டது போல சும்மா நச்சுன்னு இருந்தது. படத்தின் துவக்கத்தில் நிகல் சொல்லும் நாலு கொள்கைள் கலக்கல். ஒவ்வொரு காட்சியும் நன்றாக படைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யானை தும்பிக்கை கீழாக பார்த்தபடி இருக்கும். அதை பார்த்து அவனிடம் வேலை செய்பவன்(பின்பு சிஷ்யன்) இது சரியான சிம்பள் இல்லை. இது தப்பு. இப்படி வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரும் என்று சொல்ல, போடா வெண்ண அதெல்லாம் ஒன்னும் வராதுன்னு என்று கதவை அடைத்துவிடுவான் நிகல். அதே யானை படத்தை ஒருநாள் இரவில் தலைகீழாக மாற்றிவைப்பான் அப்போது அவனுக்குள் ஒரு பெண் வந்திருப்பாள்.அதே பெண் விலகியவுடன் அந்த படத்தை தீயிட்டு எரித்துவிடுவான். அவளிடம் இருந்து விடை பெறும் போதும் எந்த வசனங்களும் இல்லாமல் போயிட்டு வரேன் தாயீன்னு ஒரே ஒரு பெரிய கும்பிடு அம்புட்டுத்தான் போய்க்கிட்டே இருப்பாரு ஹீரோ. அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் இருந்து அவளிடம் இருந்து விடை பெறும் வரை அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமான கவிதை.
***********************************
எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய "தேசாந்திரி" தொகுப்பை மீண்டும் புரட்டும் போது புன்னகை புரியவைத்த கவிதை இது
சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-----------------------------------நா.விச்வநாதன்
ஒருநாள் திடிரென்னு அக்காவிடம் இருந்து அழைப்பு எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "கோபிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ"ன்னு ஒரு மழலையின் குரல் ஆடிப்போயிட்டேன். "ஏய்"ன்னு என்னோட பதில் அங்க போறதுக்குல்ல மீண்டும் "கோபிஇஇஇஇஇஇஇஇ தப்பிட்டியா", "நல்லாயிருத்தியா" என்று அக்காவின் 3வயது மகள் கேட்டு கொண்டே இருக்கிறாள். அந்த குரலை கேட்கத்தானே தோன்றுகிறதே தவிர பதில் வரவில்லை. என்னிடம். அக்கா பின்னால் இருந்து "சாப்பிட்டிங்களா மாமான்னு கேளு" என்று சொல்கிறாள். இவள் பதிலுக்கு ம்ன்னு சொல்லிவிட்டு "தாப்பிட்டிங்களா மாமான்னு" கேட்கிறாள். கைபேசி கைமாறியவுடன் "ஹலோ இருக்கியாடா" என்று அக்காவின் குரல் என்னை மீண்டும் இந்த உலகத்துக்கு வரவழைத்தது. "ம் இருக்கேன் என்ன திடீர்ன்னு போன்" என்றேன் என் பெண்ணு தான் உன் போட்டாவை பார்த்து கோபி கோபின்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அதான் பேசுறியான்னு கேட்டேன், பேசுறேன்னு சொன்னா... அதான் போன் செஞ்சேன்" என்றாள்.
"ம்" என்றேன்.
"எப்படிடா என் பெண்ணு நல்லா பேசுறாளா!?"
"யம்மா தாயே வாய மூடுன்னு சொல்றவரைக்கும் பேசுறவ நீ, உன் பொண்ணு பத்தி சொல்லவா வேணும்.....கலக்குறா" என்று கிண்டலை அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பொழுதின் சந்தோஷத்தை என்னிடம் வைத்துக்கொண்டேன் சுயநலத்துடன் ;)
மழை தொடரும்.......
Friday, October 17, 2008
நானும்... என் சினிமாவும்...
இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த தம்பிக்கும் தல கானாவுக்கும் என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.
சொந்தக்கூவல்
சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "பிதாமகன்" படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி சென்ஷி வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)
5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".
5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.
"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.
7. தமிழ் சினிமா இசை?
இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.
ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.
"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"
"இல்ல மச்சி"
"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"
வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)
அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)
1. தலைவர் பினாத்தலார்
2. மங்கை அக்கா
3. சந்தோஷ் அண்ணாச்சி
4. மாப்பி ராம்
5. இனியவள் புனிதா














