Wednesday, October 07, 2009

சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...






இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க தோழி சினேகிதி அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)

இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் இளையராஜா. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் CSR அவர்கள் எழுதிய As we Feel Raaja ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.

நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.

அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல blogspot.com அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.

சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் அமைதிப்புயல் திரு. மா. சிவக்குமார்! அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் திரு. ராகவன் என்கிற ஜிரா அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க கதாசிரியர் தோழி திவ்யா அவர்கள்.

அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.

பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.

அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.



நான் அழைக்கும் சக பயணிகள்


பார்வைகள் "கவிதா அக்கா"

கவிதை மழை பொழியும் "கவிநயா அக்கா"

யாவரும் நலம் விசாரிக்கும் "சுசி அக்கா"

மயில் "அக்கா விஜி"

வலையுலக "அண்ணன் ஆயில்யன்"

எங்க ஏரியா+என்னோட "செல்ல ஜீனியர் - ஆதவன்"

வலையுல "FORWARD MAIL" "அண்ணன் கார்த்திக்கேயன்"

ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)