Friday, October 17, 2008

நானும்... என் சினிமாவும்...

கொடுத்த காசுக்கு கூவுதல்

இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த தம்பிக்கும் தல கானாவுக்கும் என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.

சொந்தக்கூவல்

சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "பிதாமகன்" படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.




1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி சென்ஷி வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)

5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".

5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.

"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.

7. தமிழ் சினிமா இசை?

இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.

ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.

"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"

"இல்ல மச்சி"

"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"

வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)

அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)

1. தலைவர் பினாத்தலார்

2. மங்கை அக்கா

3. சந்தோஷ் அண்ணாச்சி

4. மாப்பி ராம்

5. இனியவள் புனிதா

Thursday, October 09, 2008

பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - சென்ஷி


ஏற்கனவே பலதடவை காதலிச்சுருக்கான்னு சென்ஷி சொன்னப்பாலும் நம்பாத மனசு சமீபத்துல அவனோட ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்ததும் நம்பிக்கை வந்துடுச்சு.

காதலிக்கு இதயத்தை கொடுப்பாங்கன்னு சும்மா பேச்சுக்குத்தான் சொல்லுவோம். ஆனா சென்ஷி மொதல் காதலிக்கு இதயத்தை கழட்டி கொடுத்துட்டு அடுத்தடுத்த காதலுக்கெல்லாம் கொடுக்க இதயம் இல்லாததால (என்ன ஒரு கஞ்சத்தனம்... கடவுளுக்கு!) கல்லீரல், மண்ணீரல்ல ஆரம்பிச்சு உள்ள இருக்கற மிச்ச சொச்ச எல்லா ஸ்பேர் பார்ட்டையும் கிட்னி உள்பட கழட்டி கொடுத்துட்டு மறுக்கா லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு பந்தா வுட்டுத்திரியுறான்.

புதுசா வர்ற காதலி(களு)க்கு கொடுக்க இனிமே அங்க எலும்பு மாத்திரம்தான் பத்திரமா இருக்குது. அத நினைச்சாத்தான் பக்குன்னு இருக்குது.

ப்ளீஸ். ..

இதோட நீ லவ்வு பண்றத நிறுத்திக்கடா மாப்பி!..

இல்லைன்னா இருக்கற எலும்பு கூட மிஞ்சாது...!!!!!!