Monday, July 21, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..



நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அத‌ன் சிற‌கினில் வாழ்த்துக்க‌ளை கோர்த்து வைத்தேன்.

நீர் கொண்ட கரு மேகங்களின்
காற்றிடைவெளி அதிகரித்து
உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்
அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.

கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி
கொஞ்சம் காற்றையும் சுமக்கச் சொல்லி வைத்தேன்
கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்
எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே

விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்
உனக்கான கதிராக இருக்கின்றது
விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று
பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....

Saturday, July 12, 2008

காத்திருந்த காதலி: பாகம் 9

இதுவரை

காத்திருந்த காதலி: வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7
மை ஃபிரண்ட் - பாகம் 8

முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது. எப்படியும் நீ எழுதியிருக்கிறது புரியப்போறதுல்லன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை அதான்.

கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...அப்புறம் இந்த கெளரியை கார்த்திக்கோட டைரியை திறந்து பார்க்குற மாதிரி வச்சிட்டாங்க....மீதி நான் எழுதியிருக்கேன். இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.
----------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் நால்வருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தனர். சங்கர் அரைமயக்கத்தில் இருந்து முழுமயக்கத்திற்க்கு சென்றுவிட்டான். கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....ச்ச எதுக்கு அடிக்குறானுங்கன்னு தெரியாமல் அடிவாங்குறேன். இது என்ன நம்ம நிலைமை வடிவேலு காமெடி மாதிரி ஆகிடுச்சி....

அப்பா : "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு நல்லா தானே இருந்திங்க"

அம்மா : "உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமத்தானேடா வளர்த்தோம். இப்ப என்னடா நடக்குது...ஒண்ணுமே புரியலியே கடவுளே!"

"இவுங்களுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்குறது. எனக்கே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது."

கார்த்திக் : "சார்.... கதை எழுதற கோபி சார்....! உங்களைத்தான்.... கொஞ்சம் கதையை வேற எங்கயாச்சும் சுத்திட்டு அப்புறம் வாங்களேன். இங்க புலம்பல் ஓவராக இருக்கு....எனக்கு ஒண்ணும் புரியல ப்ளீஸ் ... டோண்ட் ரைட் ஃபீலிங்க்ஸ் :( !"

கதை எழுதற கோபி (அதாவது நான்): "கார்த்திக் இப்படி ரொம்ப பீல் பண்ணி கேட்டுகிட்டதானால நாம இப்போ கேளரி....ச்ச..கெளரி இருக்கும் இடத்திற்க்கு போக போறோம். எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================

சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம். கிசுகிசு படிக்குற கிராதகனுங்க.. நாம படிச்சவுங்கதானே (ஆமாம். பத்தாவது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு இப்படி அடிக்கற அலம்பலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல). இப்படி யாரும் இல்லாத வீட்டுல அதுவும் அதிகம் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அறையில் அவரோட டைரியை எடுத்து படிக்கிறோமே என்பதில் வெட்கமோ குற்ற உணர்வுகளே அப்போது அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. அதனை அடைவதற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு இருந்தது.

அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. டைரியின் வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தவள் "இது அவன் காசு கொடுத்து வாங்கியிருப்பானா... இல்ல ஓசியில ஏதாவது கம்பெனியில இருந்து வாங்கியிருப்பானா.. ச்ச! இது என்ன அவனோட காதலியை பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தா இப்படி டைரியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க.. மனுஷன் மனசு குரங்குன்னு ஒரு இடத்துல ஒரு நிமிஷம் இருக்கா....தவிக்கிட்டே இருக்கு என்று எண்ணி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். ச்சே! இது என்ன சிரிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட காதலன் அங்கே விபத்துல இருக்காரு இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். இதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க. (டேய்! இதுக்கெல்லாம் ஒரே பேரு தாண்டா மெண்டல்). என்ன இது.. இப்படி லூசு மாதிரி (கன்ஃபர்ம் ஆயிடுச்சு பார்த்தியா) எண்ணங்களை ஓட விட்டுட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி மொத்தமாக படிக்கிற உங்களையும் லூசு மாதிரி யோசிக்க வைத்துக் கொண்டே டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்.

(பேக் கிரவுண்டில் சுட்டும் விழிச்சுடரே.. கஜினி பட பாடல் ஒலிக்கத்தொடங்கினால் அது என் தவறில்லை. அசினை மட்டும் மனதில் கொள்ளுதல் நலம்)

அடங்கொய்யால.... எடுத்தவுடனே இவனும் டைரியில கவிதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானே.. :(

************************* ********
**************
*********************
*************
!
!!

(அடுத்தவங்க கவிதைய என் பதிவுல போட்டு திருட்டுப்பையன்னு சொல்லிட்டா என்ன செய்யறது.. அதான் ஒரு எச்சரிக்கை)

கௌரிக்கு அதை படித்தபோது ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் ஒன்றும் புரியாமல் தவித்தாள். கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. பின்னால் விழுவது போல இருந்து மீண்டு சுதாரித்தாள். டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள். கருமம் பிடிச்சவன். லவ் பண்றாங்கறத நெனைப்புல வச்சுக்க வேற ஏதுமே கிடைக்கலையா. காஞ்சு போன மல்லிப்பூவ வச்சிக்கிட்டு இவன் என்னத்த செய்யறான். இந்த மல்லிப்பூவின் நார் கிடைத்தாலாவது ஏதாவது துப்பு கிடைக்கலாம். டைரியின் பக்கங்களை மெல்ல பயத்துடன் திருப்பினாள். அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.

இன்று.... 2002 - பிப்ரவரி - 10 ந்தேதி - லேண்ட் மார்க்கில் அவளுக்காக வேலண்டைன் கார்டு வாங்க நின்று கடனுக்கு அட்டை கிடைக்காமல் திரும்பி வந்தேன். (அடடா.. என்ன கொடும சார் இது..!)

2002- பிப்ரவரி - 12 ந்தேதி- பர்மா பஜாரில் உள்ள பெரிய ஒலிம்பிக் கார்டு கடையில் கஷ்டப்பட்டு ஒரு கார்டை லவட்டி வந்து அர்ஜண்டாய் அவள் பெயரை எழுதி பத்திரப்படுத்தியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் தந்து பரிசாய் ஒரு சாக்லேட்டாவது அவள் காசில் சாப்பிட வேண்டும். (லவ்வுக்காக லவட்டுறதுங்கறது இதுதான் போல)

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - காலை 10 மணி - இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை சந்திக்கப் போகிறேன். அவள் என்ன சொல்வாளோ என்ற பயம் நெஞ்சை அரிக்கிறது. காலையில் சாப்பிட்ட எண்ணெய் அதிகமான பூரியின் வேலையாய் கூட இது இருக்கலாம்.

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - மாலை 7 மணி - கௌரி எனக்கு துரோகம் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவனும் துரோகியாகிவிட்டானே என்ற எண்ணத்தில் நான் இரவு சாப்பிட பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் படுத்து விட்டேன். (காசில்லைடா.. வேற என்ன செய்வ)

கௌரிக்கு அதை படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் சங்கர், அவளிடம் பகிரங்கமாய் காதலை சொன்னதும் அதே எழவெடுத்த தேதியில்தான்.... ஒருவேளை.. ஒருவேளை.. கார்த்திக் லவ் பண்ண பொண்ணு பேரும் கௌரியா இருக்குமோ.. (இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா...) ஆனால் அடுத்த பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை படிக்க படிக்க அவளுக்கு பதற்றமும் பயமும் உண்டாயிற்று.. "கௌரி இந்த உயிர் உன்னுடன் வாழ்வதற்கு வைத்திருக்கிறேன். உன்னுடன் வாழ்வதற்கு எவனும் குறுக்கே வந்தால் அவன் உயிரை எடுப்பதற்கும் துணிந்திருக்கிறேன்" இப்படிக்கு உன் அன்பு கதலன்... கார்த்திக் (நாசமா போனவன் காதலன்னு தப்பில்லாம உருப்படியா எழுத துப்பில்ல.. அத விட்டுட்டு இந்த நாதாறிக்கு லவ்வு ஒரு கேடு). டைரியை தோளில் மாட்டியிருந்த டம்பப்பையில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.

காரணம் வெளியே.... (சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது). அரையடி ஸ்கேல் நீளத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூன்றடி உயரத்தில் வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த தெரு நாய் அவளை கண்டு எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தது. பயத்துடன் மீண்டும் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு ஜன்னலின் வழியே நாயைப்பார்த்து பழிப்பு காட்டியதும்தான் அவளுக்கு நிம்மதியானது.

அந்த சமயம்..

வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அவளது அப்பா இறங்கினார். வீட்டிற்குள் இருந்த கௌரியை கண்டு முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு நாயை தாண்டி உள்ளே நுழைந்தார்.

ஜன்னலின் அருகே சென்று கௌரியை பார்த்து, "என்னமா இது. இப்படி நாய்க்கு போய் பயந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கே. குலைக்கிற நாய் கடிக்காதுங்கறத பழமொழிய நீ கேள்விப்பட்டது இல்லையா"

ப‌ய‌ உண‌ர்வுட‌ன் கௌரி, "அந்த‌ ப‌ழ‌மொழி என‌க்கு தெரியும்ப்பா. ஆனா அது இந்த‌ நாய்க்கு தெரியுமான்னு தெரியலையே.. அவ‌ச‌ர‌த்துல‌ எங்க‌யாச்சும் க‌டிச்சு வ‌ச்சுட்டா நான் என்ன‌ செய்ய"

அப்பா: "தப்பும்மா. வாயில்லா ஜீவனை இப்படில்லாம் பேசக்கூடாது"

கௌரி: "அது வாயில‌ நீங்க‌ கைய‌ வ‌ச்சு இந்த‌ ட‌ய‌லாக்க‌ சொன்னாக்கூட‌ நான் ந‌ம்ப‌ மாட்டேன்."

"ட்டம்மார்.." வெளியே பெருத்த‌ ச‌ப்த‌த்துட‌ன் காரின் ட‌ய‌ர் வெயில் தாங்காம‌ல் வெடித்த‌து.

(இதுக்குப் பேரு சஸ்பென்சான்னு யாரும் கேக்கப்படாது. என்னை மாதிரி அடுத்து வர்றவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நானே ஒரு பிட்டை எடுத்துப்போட்டிருக்கேன். அம்புட்டுதான்)
=======================================================================
சரி இத்தோட என்னோட கடமை முடிந்தது (இந்த மாசத்து கடமைன்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது) அடுத்து நான் அழைக்கும் நபர்..... தற்போது அமெரிக்காவில் இந்த பக்கம் ஒரு வெள்ளை இந்த பக்கம் ஒரு கருப்பின்னு நடுவுல நம்ம ஆளு அதாங்க நம்ம கதாசிரியார் கப்பி பய ;)