Saturday, February 24, 2007

பொறி

"என்ன மச்சி எப்படி இருக்க??....வேலையெல்லாம் எப்படி போகுது???"

"ம்ம்ம்....போவுது மாமு...அப்புறம் ஏதாவது விஷேஷம் இருக்கா??"

"ஒன்னும் இல்லடா....சரி புதுப்படம் ஏதாவது பார்த்தியா எந்த படம் நல்லாயிருக்கு."

"ம்ம்ம்......நேத்து ஒரு படம் பார்த்தேன்...நம்ம ஜீவா தான் ஹீரோ.....படம் பேரு "பொறி"





"அப்படியா...சரி எப்படி இருக்கு படம்....கொஞ்சம் சொல்லேன்"

"ஆஹா.....இப்படியே கதைக் கேட்டு...கேட்டே...காலத்தை ஒட்டிடு"

"அட சொல்லு மச்சி....நமக்கும் டைம்பாஸ் ஆகனும்முல்ல..."


"நாகேஷ் ஒரு ரிட்டைடு வாத்தியாரு அவரு பையன் தான் ஜுவா. ஜுவா புத்தகக்கடை வச்சிருக்காரு. அவரோட நண்பன் நம்ம கருணாஸ். ஒரு டிவி சேனல்ல வேலை பார்க்குற பொண்ணு பூஜா. வழக்கம் போல ரெண்டு பேத்துக்கும் முதல்ல மோதல்...அப்புறம் காதல்...அப்புறம் கல்யாணம்...அவ்வளவு தான்."

"டேய்.....என்னடா ஐந்தே நிமிஷத்துல முழுபடத்தையும் முடிச்சிட்ட."


"இருடா....இப்படிதான் முதல் பாதி கொஞ்சம் கூட சுவாரஸ்சயம் இல்லாம கடுப்பா போகுதுன்னு சொல்லவந்தேன்..."


அப்ப ரெண்டாவது பாதி???





"இதுக்கு தாண்டா இந்த குறைமாசத்துல பொறந்தவனுக்கெல்லாம் கதை சொல்லுறது இல்ல...பொறுமையா இருடா டுபுக்கு..."

"சரி...சரி...சந்துல ரிக்சா ஓட்டிட்ட...சொல்லு..."

"நம்ம நாகேஷ் ரிட்டைடு பணத்துல புள்ளைக்கு சொந்தமா ஒரு கடை வாங்கி தறாரு. ஜுவாவும் சந்தோஷமா கடை திறக்குறதுக்கு எல்லாம் வேலையும் செய்றாரு....திடிரென்று நம்ம டைரக்டர் சீமான் (தம்பி படத்தை எடுத்தாறுயில்ல அவரு தான்) வந்து இது என் இடம்ன்னு சொல்லறாரு, விசாரிச்சு பார்த்ததுல நாகேசை ஏமாற்றி சீமானுக்கு சொந்தமான இடத்தை வித்துருக்காங்க. இந்த பிரச்சனையைதான் அப்பாவுக்கு தெரியாம மறுபடியும் அந்த இடத்துலேயே கடையை எப்படி திறக்குறாறு என்பது தான் மீதிபடம்."


"இடத்தோட சொந்தகாரனுக்கு தெரியாம எப்படிடா விக்கமுடியும்??."


"அதான் மாமு படமே....காசுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்களும்,
அரசு அதிகாரிகளும், ரியல்எஸ்டேட் முதலாளிகளும் எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறானுங்க என்பதைதான் டைரக்டர் சுப்ரமணியம் சிவா படமா எடுத்துறுக்காரு."





"ஜுவாவுடைய ஒவ்வொரு படமும், கதையும் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு இல்ல? பையன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு....மத்த விஷயங்கள் எல்லாம் எப்படிடா...."


"நடிப்புல எல்லோரும் நல்லாதாம்பா செஞ்சிருக்காங்க....இசை நம்ம தினா பரவால்லன்னு சொல்லலாம்..."மன்மதராசா" பாட்டு போலவே கடைசியா ஒரு பாட்டு அதே மாதிரி டான்சுவேற தாங்கமுடியல...
அப்புறம் ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் அருமையா செய்திருக்காரு.
வசனங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கு அதுவும் ஜுவா நீதிமன்றத்துல பேசுறது அருமை




டைரக்டர் இன்னும் கொஞ்சம் அந்த தில்லு முல்லுக்களையும் காட்டியிருக்கலாம். நாகேஷ் அவர்களுக்கும், ஜுவாவுக்கும் உள்ள தந்தை, மகன் உறவை அருமையாவும் அழகாகவும் காட்டியிருக்கிறார். இன்னிக்கு இருக்குற ஒரு ஆழமான பிரச்சனையைதான் டைரக்டர் சொல்லியிருக்காறு. வில்லனை பழிவாங்குறது எல்லாம் நம்ம வடிவேலு சொல்லற மாதிரி "சின்னப்புள்ள தனமா" இருக்கு. வீடு வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்றாரு."

"ம்ம்ம்....அப்ப பார்க்லாம்ன்னு சொல்றியா??"

"அப்ப நீ பார்ப்பியா??? பார்கலாம் மாமு....சும்மா டைம்பாசுக்கு"

Friday, February 16, 2007

ஒற்றை நிலவாய் நான்

கேரள அரசை போல் அணையை உயர்தாமல் கடுப்பேத்தினாலும் சரி...
ஆந்திராவை போல் குருக்கே பல தடுப்பு அணைகள் கட்டினாலும் சரி...
கர்நாடகாவை போல் தரவேண்டியதை தரமறுத்தாலும் சரி என் பதிவுகளும் என் கும்மியும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை பயபக்த்தியுடன் தெரிவித்துக்க்கொள்கிறேன்...
(லேட்டா பதிவு போடுறதுக்கு என்னென்ன பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு)



எலேய் மேட்டர சொல்லுலே...
(இது நம்ம ரூம்மெட்டு ரொம்ப பாசக்காரபய - குறிப்பு பய கள்ளகுறிச்சி)


அது ஒன்னும் மில்ல ராசா எனக்கு ஒரு 2 நாளா உடம்பு சரியில்ல (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு) சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்

"என்னப்பா எப்படியிருக்க? அஞ்சப்பரு,பாவனா எல்லாம் எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்..."

"அட நீ வேற எனக்கு 2 நாளா சிக்கன் குன்னியா ஒன்னும் முடியலப்பா.."

"என்னய்யா சொல்லற.....பார்த்துய்யா வெளிய பரப்பிவிட்டுடாதே..."

"அட இது "சிக்கன் குன்னியா" இல்லப்பா "சிக்கின சூன்னியா" நேத்து ஒரு இடத்துல சிக்கிக்கிட்டேன் எல்லோரும் சேர்ந்து குனிய வைச்சி மொத்தமா சூன்னியம் வைச்சிட்டானுங்க அவுங்க கிட்ட சிக்கி வைச்சிக்கிட்ட சூன்னியத்துக்கு பேருதான் "சிக்கின சூன்னியா"

அட பாவமே...சரி பார்த்து இருந்துக்கன்னு சொல்லிட்டு நேரா இங்கதான் வாரேன்...

"சரி இப்ப இந்த தமிழ்மணத்துல கும்மியடிக்கிறதை விட்டுட்டியா???"

ச்சச நானா...நெவர்...இம்பாசிபுள்...

"அப்புறம் ஏண்டா பதிவுக்கு இவ்வளவு லேட்டு...."

அது உன்னும்மில்ல ராசா...
நான் பொட்டி தட்டாம கும்மிஅடிக்கறதை எனக்கு மேல இருக்கிறவருக்கு தெரிஞ்சி போச்சி...

"எப்படிலே...கண்டுப்புடிச்சாங்க"

"3 நாளைக்கு முன்னாடி நம்ம மக்கள் பதிவுகளை பார்த்துட்டு இருக்கும் போது பொட்டி முன்னாடி நல்லா கெக்க.....கெக்கான்னு எவனாவது சிரிச்சா எப்படியாப்பட்ட பல்பும் கண்டு புடுச்சிடும்..."

"ம்ம்ம்...."

"எலேய் கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்... "ம்" சொல்லிக்கிட்டுயிருக்க...

"சரி ஆனது ஆயிபோச்சி இனி எப்படி கும்மிஅடிக்க போற..."

யோசிச்சேன் ஒரு ஜடியா கிடைச்சது அந்த ஜடியா என்னன்னா...
முடிஞ்ச வேலை...இன்னும் முடியாத வேலை...இனிமேதான் வரபோற வேலைன்னு எல்லா பைலையும் அப்படியே டேபுலுமேல நல்லா கடைபரப்பி வைச்சிக்க வேண்டியது...கேமராவுல பார்க்க பல்புக்கு பய என்னம்மா ஒழைக்கறான்னு தோனும்.....நம்ம பாட்டுக்கு கும்மியடிக்க வேண்டியது...
எப்படி என் ஐடியா...

த்துதுது.....

"எலேய்....என்னத்துக்கு இப்ப துப்புற???"

"அது ஒன்னும் மில்ல வாயில தூசி....சூப்பருடா...கலக்கல் ஐடியா தான்.."

"டேய் இங்க சூப்பருன்னு சொல்லிட்டு அங்க போயி பல்புகூட சேர்ந்து எனக்கு எதுரா கும்மிஅடிக்க மாட்டியே."

"ச்சீச்சீ.....உனக்கு போயி கும்மிஅடிப்பனாடா.."

"இல்ல... இப்ப எல்லாம் யாரையுமே நம்ப முடியல...ரொம்ப பயமா இருக்குடா"

சரி 2 நாளா சும்மா ரூமுல இருந்ததுனால எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அந்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க வேணமா????....

அதான் கவிதை.....இல்ல......இல்ல கவுஜ எழுதிட்டேன்



ஒற்றை நிலவாய் நான்


"நீண்ட வழி எனக்கு முன்னே
எதனை எடுக்க எதனை தவிர்க்க
குழப்பங்களில் கரைகிறது என் காலங்கள்
ஆதரவாய் மடிசாய அன்னையும் அருகில் இல்லை
அரவணைத்து செல்ல தந்தையின் கரங்களும் இல்லை
எதிர்வரும் சமயங்களில் புன்னகைக்கும் சக மனிதனின்
புன்னகையை தவிற"

எலேய்.....எதுக்கு இப்ப கல்லை தூக்குற...

வேணாம்...

வலிக்கும்...

Friday, February 02, 2007

இது தேவையா




கடவுளே...

அம்மா கிட்ட சொல்லுங்க...
தண்ணிய இப்படி வேஸ்ட் பண்ணகூடாதுன்னு..

உதவிய கரங்கள்...

மக்களே இந்த புது பிளாகர் பிரச்சனை எல்லாம் ஒருவழிய முடிஞ்சிருச்சி (அப்படின்னு நினைக்கிறேன்). அப்பா.... இப்பதான்... கண்னே தெரியுது. அதான் உங்க கண்ணுக்கு எல்லாம் நான் சரியா தெரியரனான்னு ஒரு சோதனை செஞ்சி பார்க்கத்தான் இந்த பதிவு.

அப்புறம் முக்கியமான விஷயம். இந்த பிரச்சனை வந்தவுடனே என்ன செய்றது ஏதுசெய்றதுன்னு ஒன்னுமே தெரியல...ஒன்னுமேபுரியல...நமக்கு தெரிந்தது எல்லாம்
ctrl - C, ctrl - V தான். எத தொட்டாலும் விளங்கமாட்டேன்கிதே....எல்லாம் நம்ம ராசி அப்படின்னு கவலையில இருந்த எனக்கு, அட.... இதெல்லாம் தூசு நண்பா அதான் நாங்க இருக்கமுல்ல கவலைய விடு நண்பான்னு

துபாயில இருந்து நம்ம தம்பி வந்தாக...


அமெரிக்காவுல இருந்து நம்ம ஜி வந்தாக...

உறுகுவே இருந்து கப்பி பய வந்தாக...


போம்மா மின்னல்ன்னு.... பிரச்சனையை போகவைச்சிட்டாங்க.

இந்த மூன்று "க"வும் செஞ்ச உதவி இருக்குதே...சொல்ல முடியல....அதான் பதிவா போட்டுட்டேன். இந்த மூன்று பேருக்கும், பதிவு இட்டு உதவிகள் செய்த மற்ற பதிவாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

அப்புறம் மக்களே புதிய template எப்படி இருக்கு.....ஏதாவது பிரச்சனை பண்ணுதான்னு சொல்லுங்க.


அப்புறம் பிப்ரவரி மாசம் பிறந்து விட்டது எங்க பார்த்தாலும் காதல்..காதல்ன்னு கலக்கபோறாங்க...
அதுவும் நம்ம காதல் கவிஞ்சர் அருட்பெருங்கோ
28 நாளும் இதுகாதல் பூக்கும் மாதம்ன்னு கவிதை மழையில நம்மலை முழ்கடிக்கப் போறாரு...அப்படியே கொஞ்சம் நனைஞ்சுட்டு போங்க...

ம்ம்ம்........இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!!